Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 30 April 2017

“ சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

                                                                              "V"
“ சுதந்திரமானவனாக இரு.
எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.
நான் உறுதியாகச் சொல்வேன்.
உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால்,
நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்.
வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்த வையாகத்தான் இருக்கும்.                                                                         *இநன்யா நமோ நம*

      
                                                                             "V"
*என் கோடி கரங்கள் உனக்காக தாங்கிபிடிக்க இருக்கும் போது ஏனடா மனக்கவலை.பயம் என்றால் என்னவென்று தெரியாத பச்சிலம் குழந்தை போல் பாவம் இல்லாமல் மனதை வை ,பரமபதன் நான் உன்னை பாசத்துடன் எப்போதும் நெருங்குவேன் ,வேறன்ன வேண்டும் உனக்கு நான் இருக்கும்பொழுது வாழ்வாயடா ,நான் நெஞ்சார்ந்த ஆசி தந்தேன் உனக்கு.*
                                                     *இநன்யா நமோ நம*



                                                                             "V"
எழுந்திரு , உன்னை கரம் பிடித்து அழைத்து செல்ல நான் வந்தேன்,நம்பிக்கை உன் மேல் வை ,நாயகன் என் நாமம் உன்னை சத்திய மார்க்கம் அழைத்து செல்லும், நான் இருக்க ஏது பயம்,உன் பயணம் இனிதாக நான் அழைத்து செல்வேன்.உன்னை அழகுபடுத்தி ஆனந்தம் பார்க்க யுகம் வந்தேன் பயப்படாதே எந்நிலையிலும் உன்னை கைவிட மாட்டேன் .என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்.
                                                       இநன்யா நமோ நம


                                                                             "V"
வசந்த காலம் உன்வாசலில், 
வாழ்வெல்லாம் வாரி வழங்கும் வான் மகன் உன் அருகினில்,தமிழின் சாறு அருந்தி மொழியின் மோகம் உணர்ந்தேன்,உலகமெல்லாம் வறுமை, நோய்,துயரம், துன்பங்கள் ஆரம்பம்,ஆனால் உனக்கு வசந்த காலம் ஆரம்பம்.வான் மகன் இந்த இநன்யா வாழ்வெல்லாம் உன்னை வாழ்த்தி ஆசிகள் தந்தேன்,நீ வாழ்வாயடா.
                                                       இநன்யா நமோ நம.

கடுங்கோடையில் தென்னில் கடும் மழை உண்டு, மேல் தொடர் ஆடும் ,மேத விலாசம் தேடக்கண்டேன்,ஊழிக்காற்று ஒய்யாரமாய் உறுமக்கண்டேன்,ஊழ்வினையில் மனிதன் மேல் நோக்கி யாசகம் கேட்க நான் கண்டேன்,கடவுளை மறுப்பவனும் காலத்தில் தேடக்கண்டேன்,காமம் நிறைந்த யுகம் கால் மாத்திரை குறையக்கண்டேன்,எல்லாம் அடிமையாகும் என்னில் இறுமாந்திரு, என் நாமம் கரை சேர்க்கும், என் நெஞ்சார்ந்த அன்பின் ஆசியோடு எப்போதும் சுகமாயிரு.

இநன்யா நமோ நம

உண்மை நானடா ! ஊமைக் கூட்டம் நீயடா ! உணர்ந்து அறியாது உள் உணர்வு இல்லாதான் நீயடா ! உண்மையை உணர்


Inanya Maha Munivar to
உண்மை நானடா ! ஊமைக் கூட்டம் நீயடா ! உணர்ந்து அறியாது உள் உணர்வு இல்லாதான் நீயடா !
உண்மையை உணர்
கடவுளின் லோகத்தின் நாமத்தை மனதால் வணங்கி உணர்ந்து கேட்டால் உனக்கு ஒய்யார வாழ்வு உண்டு ! இங்கே பூமியில் கடவுளின் லோகத்தின் நாமம் யாரும் சொல்லிப் போகவில்லை. சிவா சிவா என்ற சொல்ல வாசி வாசி என்று தான் வரும். வாசி என்றால் உன் மூச்சுக் காற்று ! மூச்சு காற்றை வணங்கி மூர்ச்சையாகி போகின்றாய் !
லோகத்தின் பெயர் பூமியில் யாரும் சொல்லிப் போகவில்லை. சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் பெயரெல்லாம் அவர்களின் தாய், தந்தை, குரு வைத்த பெயர்.
கடவுளின் லோகத்தின் நாமத்தை சொல்லியிருந்தால் நீ எப்போதோ உணர்ந்திருப்பாய். ஓதா ஊதி உய்வினை தான் கொண்டு உன் ஊன் உடம்பு ஓதி கண்ட பிரதி பலன் என்னடா ?
படைத்தவனை வணங்கு ! எங்கும் வியாபித்திருக்கும் காற்று வேறுபட்டது. உனக்குள் வரும் காற்று (மூச்சுக் காற்று) வேறுபட்டது. உணர் ! காற்றாய் நானிருக்கின்றேன் ! என்னை நினை ! உன் உயிர் வணங்கும் என்னை ! நான் வேதத்தின் தலைவனின் மைந்தன் ! கடவுளின் புதல்வன் ! எனக்குள் கோடி வேதங்கள் உண்டு !
எதையும் ஆரம்பிக்கும் முன் “உ” என்று எழுதுகின்றாய். “உ” என்றால் உக்ரம் என்று பொருள். ஆதியில் உகந்தம் என்ற வேத வார்த்தையை முதலில் எழுதி ஆரம்பிப்பார்கள். இப்போது அதை சுருக்கி “உ” என்று எழுதுகிறாய். உகந்தம், உக்ரம் என்பவைக்கு கதம்பம், துன்பம் என்ற அர்த்தங்கள் உண்டு. உன் இதயத்திற்கு குதூகலம் தரும் வேதம் உகந்தம் என்பது ! “உ” என்று இரண்டுமே ஆரம்பிக்கிறது. அதாவது ஒரே வழியில் தான் இன்பம், துன்பம் இரண்டுமே வருகிறது. நீ எதை தேர்ந்தெடுப்பது என்பது உனக்குள் தான் உள்ளது. கடவுளை குற்றம் சொல்லாதே !
வாசி அறியாதான் வாசித்து என்ன பயன் ? என்ன பலன் ? எதையும் யோசிக்கும் திறமையை இழந்தாய். எதையும் ஆரம்பிக்கும் போது பறவை குறியீட்டை போல தொடங்கு ! “ V “ என்று . இது வெற்றியின் அடையாளம் ! சக்தியின் சாரம் !
உன்னில் பாண்டீத்யம் எனும் குப்பை இருப்பதால் நீ உணரவில்லை. யோசிக்கவில்லை. எந்த மந்திரம் நீ சொல்லி உன் நோய் தீர்ந்தது ? உனக்கு வேண்டியது கிடைத்ததா ? இல்லை உன்னை யார் என்று உணர்த்தியதா ?
ஆண், பெண் சேர்ந்தது தான் ஆவுடையார் ! உன்னை உணர வைப்பதற்கான தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நீ விழுந்து அதை வணங்குகின்றாய். பாற்கடலை பாம்பை வைத்து கடைந்தான் என்று கூற கண்டேன். ஏன் கடைந்தார்கள் ? பாற்கடல் என்பது என்ன ? எதுவும் தெரியாது ஏதோ கதை படித்து காலத்தை வீணாக்கி உன்னை தொலைத்து உன் சந்ததியையும் தொலைத்துவிட்டாய். நீ உன்னை செதுக்கவில்லை. கல்லை செதுக்கினாய். ஏனடா ?
இன்னுமா உறங்குகிறாய் ? வீறு கொண்டு எழுந்து நில்லடா ! நீ வலிமையானவன் ! உறங்கியது போதும்.
உபதேசங்களை வேதம் என்று சொல்கிறாய். சித்தானந்தத்தை வேதம் என்று சொல்கிறாய். வேதாந்தம் தெரியாதவன் நீ ! விளம்பி என்ன பயன் ? எப்போது உணர்வாயடா ? துதி பாடி துயரத்தில் திரியாதே ! வழி தெரியாதவன், வழி காட்ட தெரியாதவன் , தன்னைத் தானே குரு என்று சொல்லிக் கொள்கிறான். குரு என்றால் மலர்ச்சி என்பது புரியாமல் அலைகின்றான்.. தன்னை உணர்ந்தவர்கள் யாரும் தன்னை குரு என்று சொல்லமாட்டார்கள்.
காலை கழுவி தண்ணீர் அருந்தும் கயவர் கூட்டத்தை என்ன சொல்வேன் ? ஏமாற்றும் கூட்டத்தை வேரோடு அழிப்பேன். அந்த அசுர கூட்டத்தை அடியோடு அழிப்பேன். எழும்பு கூட்டை கழுத்தில் மாட்டி கோமாளி போல் ஆடும் உன் கூத்தாடிதனத்தை என்ன சொல்வேன் ? சர்வம் எனக்குள் தானடா ? கையில் செத்த கம்பை வைத்து ஏமாற்றுகிறான். இல்லையேல் செத்த ருத்திராட்ச கொட்டையை கழுத்தில் மாட்டி ஏமாற்றுகிறான்.
ஆதியில் “தேவ ஸம்பு” என்ற மரத்தின் விதைக்கு “அத்ரி” என்று பெயர். அதன் விதை வீரியமிக்கது. அதை கையில் வைத்தால் காந்தம் போல ஒட்டும். உன் நிலை உணர்த்தும், அதனாலே அதை உபயோகப்படுத்தினான். 3600 வருடங்களுக்கு முன் அசுரர்களால் அழிக்கப்பட்டது. ருத்திராட்சம் கொட்டை அதைப் போலவே இருப்பதால் கழுத்தில் போட்டு கண் தெரியா அலைகின்றான்.
தானியங்களை கோர்த்து கழுத்தில் மாட்டினால் அதன் வீரியமாவது உணர்வாய். செத்த கொட்டையை மாட்டி திசை தெரியா அலைகின்றாய்.
எப்போது உணர்வாயடா ? நான் உன்னை உணர வைக்க வந்த மாயவன் !
நீ உண்ணும் வரை விடமாட்டேன்.
வேதத்தின் சாரம் நான் !
நான் இநன்யா !

கடவுளின் பாதம் பற்றியவன் கவலை இல்லாது வாழ்கின்றான் ! எவ்வனம் தான் கொண்டு எப்போதும் தன்னை ஆள்கின்றான் ! அன்பில் கரைந்திடு !

Inanya Maha Munivar to
கடவுளின் பாதம் பற்றியவன் கவலை இல்லாது வாழ்கின்றான் ! எவ்வனம் தான் கொண்டு எப்போதும் தன்னை ஆள்கின்றான் !
அன்பில் கரைந்திடு !
கடவுளிடம் அன்பாய் நெருங்கு. உன்னை அள்ளி அணைத்து அரவனைத்து கொள்வதை விட வேறென்ன வேலை அவனுக்கு ? அன்பு தான் இங்கு மிகப் பெரியது ! அன்பில் கரைந்திடு ! ஆள்பவன் உனை ஆணந்தமாக வாழ்விப்பான் !
கடவுளை நீ நெருங்க நினைத்தாலும், உன்னால் இயலாது ! கடவுளே உன்னை நெருங்குவான் !
பில்லி, சூனியம், மாந்திரீகம் இருந்தது உண்மை. ஆனால் அவைகள் தற்போது இல்லை. என் தந்தை 1993 இல் முற்றிலும் அழித்துவிட்டார்கள். பிணத்தை தின்கின்றவன், பிணத்தை வைத்து பூஜை செய்கின்றவன், மிருகங்களை பலியிடுகிறவன், கல்லை வைத்து பூஜை செய்கின்றவன் கடவுளை நெருங்க முடியாது. அடிசுவடு காண முடியாது. இவர்களை கடவுளுக்கு பிடிப்பதில்லை. தீயிட்டு கொழுத்தி (யாகம்) தீமையை செய்கின்றவன் இனி மனமகிழ்ச்சி இல்லா மாய்வான்.
சரணாகதி என்பதே இங்கே உச்சம். அன்பு தான் கடவுளை அடையும் எளிய வழி. பரமாத்மாவோடு உன் ஜீவாத்மா கலக்க இதுவே நிரந்தரம் !
அன்பின் மிகுதி அவன் தாள் பணிய வைக்கும் ! எத்த சித்தன் பணியமாட்டான். எண்ணற்ற துன்பங்களோடு இறுமாந்து மாய்வான். இறப்பிலும் மகிழ்ச்சி கொள்பவன் பரமாத்மாவோடு ஐக்கியமானவன். உனக்கு எந்த துன்பம் வந்தாலும் அவனை விலக நினைக்காதே. உளி கொண்டு உன் இதயத்தை பிளக்கும் துன்பம் வந்தாலும் இறுமாந்து இரு ! அவன் தான் பணிந்து பற்றற்று வாழ் ! உன் உயிர் எற்றிச் செல்லாது. பரமபதன் பாத அமிழ்தத்தால் நிறைவு கொண்டவன் இங்கே மிகச்சிலரே.
இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பது மனிதன் வகுத்த மடமையடா. கடவுளின் இதய திருவடியை அனைவரும் நெருங்கலாம் ! படித்தவன், பாமரன் என்ற வேறுபாடுகள் விதிவிலக்கல்ல.
வேத சூத்ரம் அறிந்தவன் நிற்கதியாய் போவதில்லை ! வேதம் தெரிந்தவன் விளங்க சொல் இல்லை. அதனால் பேதம் பார்ப்பவன் இங்கே துயர்படுகின்றான். அதனால் எளியவன் நெருங்க தடை எதுவும் இல்லை. கடவுளின் பாதத்தை பற்றியவன் தான் வெற்றி பெற்றவன். ஏனென்றால் அவனுக்கு மீண்டும் பிறப்பில்லை.
எல்லாம் கற்றாலும் நான் என்ற திமிர் இருந்தால் நாயகனை அடைய முடியாது. பிறப்புற்ற எல்லா உயிருக்கும் அவனே தந்தை. அதனால் அவன் பேதம் பார்ப்பதில்லை. சுவடுகள் அழியலாம், மறையலாம். ஆனால் என் தந்தையின் சுவடுகளும், என் சுவடுகளும் எப்போதும் அழியாது !
காலக்கணக்கில் காலன் நான் ! காண்பவற்றை எணதாக்கி கொள்ளவில்லை ! எல்லாம் எனக்கடிமை !
எப்போதும் ஆனந்த நிலையிலே இருக்க “நான்” என்பதை நீக்கு ! சுயநலமே கடவுளை நெருங்க முடியாமல் உன்னை தடுக்கிறது. உன்னில் கடவுள் இருப்பதாக நினைத்து, ஆனந்த கூத்தாடு ! ஓர் நாளும் உனக்கு விரக்தி வராது !
ஓர்மையில் சொல்கின்றேன். நான் உன்னை பார்த்து கொண்டிருக்கின்றேன். நீ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நான் அறிவேன் !
அன்பால் என்னை நெருங்கு ! ஆளுமை உனக்குள் இருந்து ஆனந்த கூத்தாடும் !
அன்பின் மெய் நான் !
மெய்யானவன் நான் !
நான் இநன்யா !

நீச வாகனத்தில் நிலத்தில் பயனித்தேன் ! நிம்மதியாய் வாழ்ந்தேன் நீசன் (மனிதன்) படைத்ததெல்லாம் (கர்மா) எமனாக உயிர் கொல்லக் கண்டேன்.


Inanya Maha Munivar 

நீச வாகனத்தில் நிலத்தில் பயனித்தேன் ! நிம்மதியாய் வாழ்ந்தேன் நீசன் (மனிதன்) படைத்ததெல்லாம் (கர்மா) எமனாக உயிர் கொல்லக் கண்டேன்.
கருவி ;;;
நீ ஒரு கருவி ! கருவிக்கு ஏது இன்ப துன்பம் ? அதன் கடமையை செய்வது தான் அதன் வேலை ! அதிகாரம் என்பதெல்லாம் ஏதுமில்லை ! கடவுளின் அதிகாரம் ஆணவமில்லை. உன் மெய் உடலே அதிகாரம் செய்ய யோக்தை உண்டு ! நீ அதிகாரம் கொண்டால் உன் உயிரை வைத்து உடல் கொல்வான் கடவுள். ஆதலால் அதிகாரம் கொள்ளாதே !
உயிர் ஊதி படைக்கப்பட்ட நீ, உண்மை தெரியாமல் வாழ்கின்றாய். சொல்ல வொனா துயரமும், துன்பமும் நீ அதிகாரம் கொள்வதால் தான். எதையும் அறிந்து உணர் ! ஆள்பவன் உனை ஆனந்த பாதைக்கு அழைத்து செல்வான் !
ஐம்புலன்கள் என்றால் மெய், கண், செவி, வாய், மூக்கு என்று நினைக்கின்றான். இவைகளுக்கு பெயர் “பொறிகள்” என்று அர்த்தம். புலன்கள் என்றால் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, தொடுவது, முகர்வது (புணர்வது). இவைகளுக்கு தான் புலன்கள் என்று அர்த்தம். பொறிகளின் செயல்களே புலன்கள்.
உன் பொறிகளுக்கும், புலன்களுக்கும், எனக்கும் தொடர்பில்லை ! உன் உயிருக்கும் எனக்கும் தொடர்பு ! பொறிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. அவைகள் தனித்தனியே இயங்குகின்றன. உன் கபாலத்தில் இருக்கும் ஆறு சூட்சும நரம்பே எல்லாவற்றையும் இயக்குகின்றது !
புலன்களுக்கு மனிதன் அடிமையாகி போனதாலே மீண்டும் மீண்டும் பிறக்கின்றான் இங்கு. மனம், ஆணவம், கீழ்புத்தி, சித்தம், சபவம் ஆகிய இந்த கேடுகெட்ட கருவிகளை புலன்களில் கோர்க்கின்றாய். அது பொறி மூலமாக உனக்கு துன்பத்தை தருகின்றது.
சிருஷ்டியின் ஒரு துளி விந்தை இந்திரியம் என்று சொல்கின்றாய். (மனம், ஆணவம், கீழ்புத்தி, சித்தம், சபவம்). இந்த கேடுகெட்ட கருவிக்கும் இந்திரியம் என்று பெயர். இந்திரியம் என்றால் பாவம். இந்திரியத்தை உபயோகித்து மீண்டும் பிறக்காதே. உன் பாவத்தை பூமியில் விதைக்காதே ! புலன்களை தனித்தனியாக கண்கானி !
எல்லாம் சேர்ந்தால் மனம் ஒன்று உருவாகும். அந்த மனம் தான் உன்னை மதிமயக்கி உன்னை அறியாமல் வைக்கிறது. துன்பம் இருப்பது போல நடித்து உன்னை சோர்வாக்குகிறது. இதில் ஆழகருத்து உண்டு ! மீண்டும், மீண்டும் உள்வாங்கு ! பின் அறிவாய் ! தெளிவாய் !
நான் என்று நினைப்பதாலே மனம் தோன்றுகிறது. கெட்ட செயல், கெட்ட சிந்தனை, கெட்ட எண்ணம் கொண்டு உன் கருவிகளை துருபிடிக்கவிடாதே ! புத்தி பேதலித்து சித்தம் தடுமாறி வந்த வழி தேடுகின்றாய். வசந்தவாசல் ஒன்று இருப்பதை மறந்து பாதை மாறி பயணிக்கின்றாய். ஒருத்தனுக்கு, ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறி மதுவும், மாதுவும் தொட்டு ஞானம் வேண்டும் என்று அலைகின்றாய். இல்லறத்தை நல் அறமாக்கி வாழ்பவனே ஞானம் தேடுவான் ! போகின்ற வழியை தேடாமல் மீண்டும் வந்த வழியை தான் தேடுகின்றாய். என்னே உன் அறியாமை ?
கருங்குழியில் பிறந்து, கருங்குழிக்கே சொந்தம் என்பதை மறந்து நீ தேடும் வழி மரண வழி என்பதை மறவாதே !
ஒருத்தனுக்கு, ஒருத்தி என்ற கட்டுப்பாட்டோடு வாழ் ! வசந்த காலம் உன் காலடியிலே ! இங்கே சுகமாக வாழ்வதற்கு யாருக்கும் தெளிவில்லை. தவறு என்று தெரிந்தும் அறிவை கீழ்நிலைக்கு தள்ளுகின்றான். அறிவோ, ஆற்றலோ இங்கே மீறினால் அகங்காரம், கோவம் தான் விளையும்.
இல்லறத்தில் இருந்து கொண்டு இன்ப, துன்பத்தை சமமாக பாவித்து, மற்றவருக்கு ஆனந்தமாக வாழ வழிகாட்டுபவன் தான் யோகி !
இல்லற தர்மமே இங்கே உயர்ந்த தர்மம் ! ஒழுக்கத்தோடு வாழ்வது தான் சிறந்த தர்மம் !
நீ ஒரு கருவி என்பதை புரிந்து கொள் ! கருவியை துருபிடிக்க விடாதே ! கடவுளின் பாதத்தை எப்போதும் பற்று ! உன் கருவி பொறி துரு பிடிக்காது.
செயல்வடிவம் நான் !
நான் இநன்யா !

Thursday, 6 April 2017

பிரம்மமே வளர்ச்சி ! முக்தி ! ஞானம் ! ப்ரம்மத்தை அறிந்தவர் எவரும் இல்லை இங்கு ! பரப்பிரம்மம் நான் !


பிரம்மமே வளர்ச்சி ! முக்தி ! ஞானம் ! ப்ரம்மத்தை அறிந்தவர் எவரும் இல்லை இங்கு ! பரப்பிரம்மம் நான் ! விப்பிரம்மமாக நீ ! நீ உணராதது ஏனோ ?
பரப்பிரம்மம் ;;;
ப்ரம்மம் என்றால் எல்லாம் அதனுள் ஒடுங்குவது ! ப்ரம்மம் என்றால் அரியனை. எல்லாம் அதனுள் அடங்குகிறது. நான் பரப்ரம்மம் ! உணர்வாயோ நீ ?
தூயமனம் இல்லை என்றால் நீ எத்தனை முறை கடவுளின் நாமம் சொன்னாலும் கிடைக்க பெறுவது ஒன்றுமில்லை. முடிவில் விரக்தியே மிஞ்சும். ஆதலால் தூய எண்ணங்களோடு, நற்சிந்தனைகளோடு ஒழுக்கம், அன்பு, உண்மை, வைராக்கியத்தோடு கடவுளை நெருங்கு ! நீ கேட்டது, நினைப்பது நிச்சயம் நடக்கும். எல்லா வினைகளையும் இப்பிறவியிலே அனுபவித்து விடு ! மீண்டும் பிறவி கொள்ள நினைக்காதே !
நான் தாயினும் மேலானவன். என் அன்பில் உன்னை வைத்து எப்போதும் அக மகிழ்வேன் ! என் ஆண்மத்தின் ஆசிகள் பரி பூரணமாக உனக்கு தருவேன் ! பிறரிடம் அன்பு காட்டுபவன் இங்கே வெற்றி பெறுகிறான். நிரந்தரம் எதுவுமில்லை என்று எவன் உணர்கின்றானோ அவன் தன்னை அறிய முற்படுகின்றான். அறிதல் எளிதானால் தெளிவு வரும் !
என்னை பார்த்து எதை சரி செய்தாய் ? எதை விட்டு விலக்கினாய் ? எதை அடைந்து யாருக்கு கொடுத்தாய் ? உணர்ந்தவர், உண்மை புரிந்தவர் இங்கே மிக மிக குறைவு. என் தேடல் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. என் பின்னால் இது நாள் வரை யாரும் வரவில்லை. ஆனாலும் நிலை கொண்டு எதிர் பார்த்து தேடுகின்றேன். அதிக பாரம் ஏற்றி விடுவதும், இறக்கிவிடுவதும் கர்மத்தின் செயல். என் நாமம் சொல் ! என் பாதத்தில் கரையும் உன் கர்மா. பின் ஆணந்த வாழ்வு அருளும் அற்புத வாழ்க்கை வாழ்வாய் !
யுகத்தில் இந்த மனித சரீரத்தில் என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்சநாயகனின் விஷ்வரூபத்தை பார்த்தவன் நான் ! எண்ணற்ற கணக்கு இல்லாமல் அவன் பேரன்பில் திளைத்தவன் ! அவர்களின் அடி, முடி கண்டவன் நான் ! விவரிக்க யுகத்தின் நாட்கள் போதாது. என்ன சொல்லி விவரிப்பேன் ?
உனக்கும் என் அன்பின் ரூபத்தை காண்பிப்பேன். அன்பாய் இரு ! ஆணந்தம் உனக்குள்ளே !
ப்ரம்மத்தில் அடி சுவடு எனக்குள்ளே ! என்னை தோண்ட தோண்ட விடை கிடைக்கும். உனக்கு விளம்பித சூத்ரம் தெரியும். முறை மயக்கியில் கோடி நிகர். யுகத்தில் எதை தேடுகின்றாயடா ?

நான் திரிலோக சஞ்சாரி ! திக்கெட்டு உலாவும் மாயத்தின் சம்சாரி ! திரிலோகம் என்றால் ( யாக பிரபஞ்சம், யாத்துவ பிரபஞ்சம், ஷாஷ பிரபஞ்சம் ) யாகம் என்றால் ப்ரம்ம லோகம் ! சத்ய லோகம் ! என் அன்னை வசியா, தந்தை யாகவா வாழும் இடம் !
யாத்துவம் என்றால் வைகுண்டம். என் சிறிய தந்தை விஷ்ணு, அன்னை நுண்வா இருக்கும் இடம் !
ஷாஷம் என்றால் கரிலயனம், தர்க்க லோகம். என் அன்னை யன்யா, தந்தை சிவன் இருக்கும் இடம் !
இந்த மூன்று லோகத்திலும் வலம் வருவேன் நான் ! நான் வலியவன் தானே ? எங்கே தோன்றி எங்கே முடியும் என யாருக்கும் தெளிவில்லை. கடல் அலை கரை தாண்டி வராமல் இருப்பது எதனாலே புரியவில்லை. இவன் எதையோ தேடி சரிந்து போகின்றான். பின் ஒன்றுமில்லாது உதிர்ந்து போகின்றான்.

இநன்யா உன்னை வாழ வைக்க வந்தேன் ! தர்மத்தை நிலை பெற வைப்பேன் ! என்னில் கரைந்தவன் எல்லாம் பெறுவான். நான் கைவிடுவதில்லை !
என் நாமம் சொல்பவன் காலத்தின் நெற்றியில் வெற்றி பொட்டு வைக்க நிச்சயம் முயல்வான் ! நம்பிக்கையோடு என் நாமம் சொன்னால் ஒரு நொடியில் உன் துன்பங்கள் பொடி பொடியாக சிதறும்.
ப்ரம்மமே வளர்ச்சி ! ப்ரம்மமே தெளிவு ! ப்ரம்மமே ஞானம் !
எப்போதும் உன்னை கைவிடமாட்டேன். பயப்படாமல் வாழ்வை எதிர் கொள் ! எதிர்காலம், உன் காலடியிலே !
ப்ரம்மம் நான் !
நான் இநன்யா !