ஒளி, ஒலி, சப்த, நாத, வேதம் பற்றி விளக்கும் யாகவா முனிவர்.
இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! பழமையான அரிய தகவல்களை உலகரிய செய்வதே எமது நோக்கமாகும்.. நலம் கருதி வெளியிடுகிறோம். LOVER OF MY SOUL ,BODY & MY LIFE --- யெகோவா , யாகவா , இநன்யா
Kadamai Quote
Monday, 17 September 2018
Thursday, 6 September 2018
மோனி என்பவன் பெரிதல்ல ! மௌனியே பெரியவன் ! மௌனியே எல்லாம் அறிவான் ! துவி (இரண்டு)

Inanya Maha Munivar
06-09-2018
06-09-2018
மோனி என்பவன் பெரிதல்ல ! மௌனியே பெரியவன் ! மௌனியே எல்லாம் அறிவான் !
துவி (இரண்டு)
யமன மனதோடு இருக்காதே ! ஓர் வழியில் செல் ! இரண்டு ஒன்றாய் நிற்பதே நீ ! இரண்டு இல்லாமல் ஏதுமில்லை இங்கு ! இரண்டு ஒன்றாய் நிற்பதே மூலத்தின் தத்துவம். ஒன்று நிலைப்பதில்லை.
நீ தனித்திருந்தால் பெரியவன் அல்ல ! எதுவும் இங்கே தனித்திருப்பதில்லை. எல்லா படைப்புக்களும் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவன் தான் பிரம்மச்சாரி என்று தனிமையில் அமர்ந்து யோசிக்கின்றான்.
இரண்டு ஒன்று சேர்ந்து ஒன்றாய் உருவாகினாய். உன்னுள் உருவாக்கம் எவ்வளவு என்பதை யோசி. படைப்பின் சூட்சுமம் எளிது. உன்னை உளி இல்லாமல் செதுக்கினான். நீ ஒரு பொம்மை. கரடு முரடான சிற்பம். உனை செதுக்கு நல் குருவை வைத்து ! உன்னை ஒப்புவித்து வாழ் கடவுளிடம் ! அவன் செதுக்குவான் அழகாக ! உன்னை அழகாய் செதுக்கி ஆனந்தம் தந்து பிறரை வணங்க வைப்பான் !
நான் உன்னை செதுக்குவேன், என் நாமம் உன்னை நல்வழிக்கு அழைத்து செல்லும் !
என் கையில் இருக்கும் “மணி புஷ்பகம்” என்ற சூட்சும சங்கு இனி உலகமெல்லாம் ஒலிக்கும். உலகை செதுக்கும் நாளெல்லாம் உன்னை தேடுகிறேன். என்னில் வருவாய் என்று ! என்னுள் கலந்து ஒன்றாய் உருவாகு. உன் பிறப்பு பிறருக்கு உதவும் படி இருக்கட்டும். உன் மனைவியை நேசி ! மறந்தும் பிள்ளைகளை மறவாதே. கடமையை செய் ! பிறர் உனக்கு என்ன செய்தார்கள் என்று யோசித்து நிற்காதே. நீ உதவி செய்து கொண்டே இரு ! மற்றவர் ஏச்சு, பேச்சு காதில் வாங்காதே !
நீ நினைத்த இலக்கை அடைய உன்னை வருத்து ! வாசல் தேடி வருவேன் நாயகன் நான் !
ஆறும் சேர்ந்து நான் ஒன்றாய் உருவாகினேன். நீ இரண்டும் சேர்ந்து , இணைந்து , ஒன்றாய் உருவாகினாய். நீ ஒரு ஆன்மவையே தூக்கி சுமக்க முடியவில்லை. நான் ஆறு பேராத்மாக்களை தூக்கி சுமக்கின்றேன் !
என்னுள் பலம் உண்டு ! பலனும் உண்டு ! வேடிக்கை பேச்சல்ல ! நான் உன்னை எப்போதும் காப்பேன் !
நான் ஒன்றாய் உருவகப்படுத்தியவன் !
நான் இநன்யா !
கடவுள் மெய்யாகவா ? மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !

to INANYA MAHA MUNIVAR
கடவுள் மெய்யாகவா ?
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
ஆன்மாவின் துடிப்பு, ஒலி தான் கடவுள் ! அறிவதில் பெரிய அறிவு தன்னை யார் என்று அறிவது தான் ! பாவங்களைத் தொலைத்து விடு ! பரம்பொருள் புரியும் ! நாத்தீகம் என்பது புரியாதவனுக்கு வருகின்ற அறிவு. புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது !
கோடி மனித முகத்தை படைத்து, அதில் முகத்தை மட்டும் மாறுபடச் செய்து ஆட்டுவிப்பவனை உணர யுகம் கடந்து போகும் ! நூறு பறவைகளை கூட்டை கட்டவைத்து அதில் தனக்குள்ள கூடு எது என்று புரிய வைத்தவனை நீ புரிந்து கொள்ள கோடி ஜென்மம் ஆகும் !
அவனால் ஒலியால் மலையை வளர வைக்க முடியும். பூகம்பமாய் பூமியை பிளக்க வைக்க முடியும். ஆவேசக் காற்றால் அகங்காரத்தை அழிக்க வைக்க முடியும் ! புனித நீரை புரளச் செய்து பூமியில் ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும் ! ஓர் விதையில் ஓராயிரம் கனிகளை தர அவனால் முடியும் ! மனிதனாக பூமியில் பூடகமாக உலாவ முடியும் ! அந்த பேரறிவாளனை புரிய யுகம் கடந்து போகும் ! அவன் இனியவன் ! அன்பில் உயர்ந்தவன் ! அவனை குழந்தையின் சிரிப்பிலே, மலரிலே புரிந்து கொள்ள முயற்சி செய் ! நான் அவனின் பாத மலரைப் பார்ப்பதற்கு எத்தனையோ யுக ஆண்டாக காத்துக் கிடந்தேன் (ஆன்மா) ! என் ஆன்மா எத்தனை முறை சுத்தப்படுத்தப்பட்டது என்பதை காலக் கணக்கு நிர்ணயிக்க முடியாது.
நீ ஒரு சூரியனையும், சந்திரனையுமே கணக்கெடுக்க முடியாதவன் ! நீ கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்னா? எனக் கணக்கெடுக்க முடியாதவன் ! மழையும், சூலும் எப்போது உருவாகும் என உருவாக்கம் தெரியாதவன் நீ ! அவனை அறிய எந்த கருவியில் அளவிட்டு பார்க்கப் போகிறாய் ? அவன் நிகரற்றவன் ! தன்னிகரில்லா கருணைமிக்கவன் ! பழத்தை அழுகவிடுகின்ற என் பிதா (கடவுள்) விதையை அழுக விடுகின்றானா? அவனின் அன்பை உணர்ந்தாயா ? அந்த சூட்சுமதாரியை உணர யுகத்தின் வாழ்வு போதாது ! கருவை வளர்த்து அதற்கொரு கால நிர்ணயம் செய்து பிறக்க வைத்த அந்த பெம்மானை, என்னை பெற்றவனை, அறிய எத்தனை முறை ஆன்மா சுத்தப்படுத்த வேண்டுமென தெரியுமா? உணர்ந்து பார் !
அவன் ஒரு விதையில் கோடி விதையை உருவாக்கியவன் ! இவை அனைத்தையும் உருவாக்கி உனக்கு உண்ண தந்தவனை உணரக் கூட இயலாதவன் நீ ! நீ எங்கே கடவுளை உணரப் போகிறாய் ? நன்றி சொல்லத் தெரியாதவன் நீ ! அவனை நினைக்காமல் தேவையற்றதைப் பேசி விதண்டவாதம் செய்து உன் காலத்தை வீணாக்காதே ! பயன் ஒன்றுமில்லை.
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
உன் ஆன்மாவை எப்போதாவது சிரிக்க வைத்தாயா ? ஜாடையாக சிரிக்கிறாய். சக மனிதன் கஷ்டப்பட்டால் சிரிக்கிறாய் ! ஜாடைச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, எக்காள சிரிப்பு, நமட்டு சிரிப்பு, இவற்றைத் தான் கற்றுக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறாய் ! நீயும் சிரிக்க மாட்டாய் ! அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கமாட்டாய் !
எப்போதும் குழந்தை போல் புன்னகையாய் பூவை போல் இருந்து புரிந்து கொள் ! நீ புரிந்தால், அந்த புனிதன் என்னை மாதிரி ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி வைத்து புரிய வைப்பான் ! உன்னுள்ளே உன் இதய துடிப்பாய் துடிக்கின்றானே ? முதலில் அவனை உணரப் பார் !
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே ? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார் ! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
நான் இநன்யா !
Saturday, 1 September 2018
இனிய புனித மாதத்தில் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
இனிய புனித மாதத்தில் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
நான் உன்னை எங்கிருந்தாலும் மனசார ஆசிர்வதிப்பேன் !
நீ என்ன செய்தாலும் நானறிவேன் !
நீ என்ன செய்தாலும் நானறிவேன் !
என் நெஞ்சம் நிறைந்து ஆசி தந்தேனடா ! எப்போதும் நான் சத்தியம் !
என் நாமம் சத்தியம் !
என் நாடகமும், சோதனையும் யாரறிவார் ?
என்னை இயக்குபவர் என் அன்பிற்கினிய தந்தை !
என் நாடகமும், சோதனையும் யாரறிவார் ?
என்னை இயக்குபவர் என் அன்பிற்கினிய தந்தை !
என் கடமையை செய்ய காலம் கணிந்ததால் நான் இந்த மனித உடலைவிட்டு தள்ளி நின்று என் தந்தை சொன்ன கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானேன் !
உன் உயிர் எப்போதும் எனை வணங்கும் ! என்னை பற்றி ஆராயாதே,யுகம் கடந்து போகும் !
நதிமூலம்,ரிஷிமூலம் பார்த்து உனை தொலைத்துவிடாதே ! ஒரு சிறு துறும்பை கடவுளாய், குருவாய் ஏற்றுக் கொண்டாலும் இறுக பற்றி கொள் ! துறும்பை பற்றி ஆராயாதே.
நீரை பற்றி ஆராய்வதற்குள் நீரில் மூழ்கி பாவம் கரைத்து விடு ! மீண்டும் பிறக்க நினைக்காதே !
என் பணி முடிந்து மீண்டும் வருவேன் !
என் நாமத்தை நம்பிக்கையோடு சொல், நிச்சய சத்தியம் உனக்கு எல்லாம் கிடைக்கும் !
நான் உன் அருகிலே இருக்கிறேன், நான் உனை எப்போதும் காப்பேன், கைவிடமாட்டேன் !
நான் உன் அருகிலே இருக்கிறேன், நான் உனை எப்போதும் காப்பேன், கைவிடமாட்டேன் !
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
நான் இநன்யா !
Subscribe to:
Comments (Atom)
