Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, 4 January 2017

நான் பயக்ருத்தன் அல்ல. பயநாசனன் என்பதை மறவாதே ! வதுகையால் தான் உன் வாழ்வு. உன் தீர்மானம் ஏதுமில்லை !

Inanya Maha Munivar
05-01-2017
நான் பயக்ருத்தன் அல்ல. பயநாசனன் என்பதை மறவாதே ! வதுகையால் தான் உன் வாழ்வு. உன் தீர்மானம் ஏதுமில்லை !
தீர்மானம்
உன்னிடம் இருப்பது ஒன்று ! நீ அறியாத ஒன்று வெளியேயும் இருக்கிறது. அதை தான் கடவுள், இயற்கை என்று சொல்கின்றாய். அதை தான் ஞானம் என்று சொல்கின்றாய். இதை அறிந்து கொள்ள யாரும் முயலவில்லை.
நான் உனக்கு செல்வத்தை கொடுத்து சோம்பேறியாக்க நினைக்கவில்லை. நீ அறிந்து தேடும் செல்வமே உன்னை ஆணந்தமாக்கும் என்பதற்காக ! அதனால் தான் உன்னை உணர்ந்து அறிய முற்படு ! வெற்றியை நோக்கி போராடு ! தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. உன் முயற்சி கல்லறை வரை இருக்கட்டும். நிச்சயம் வெல்வாய் !
அறிந்து நிலைக்கும் செல்வம், ஞானம் உனை மீண்டும் பிறவி இல்லா நிலமையை தரும். அதனாலே ஒழுக்கத்தை பிரதானமாக நிறுத்துகின்றேன் ! செய் துணிவென்ற மந்திரம் உன் முயற்சி தான். முயற்சி செய் ! நான் உனக்கு உதவியாக இருப்பேன். உன் பாவத்தை கரைப்பது என் வேலை. என் அறிவுக்கு தெரியாமல் எந்த உயிரும் மாண்டுபோவதில்லை.
பிறரை குறை கூறி திரிபவன் மடையன். தன் குறை நிவர்த்தி செய்கின்றவன் மனிதன். மேலே தீர்மானிக்கபட்டு தான் கீழே வருகின்றாய். இங்கே நீ எதுவும் தீர்மானிக்க முடியாது. உன் செயலினால் வரும் இன்ப துன்பங்களை மனதில் வைக்காதே ! வெற்றியோ, தோல்வியோ அதை பற்றி சிந்திக்காதே ! முயற்சி செய்து முன்னேறும் வழியில் சென்று கொண்டே இரு ! வெற்றி, தோல்வி உன் செயல் தான் நிர்ணயிக்கின்றது. ஆதலால் எதையும் சரிவர ஆசையாய் , அன்பாய் செய் !
சுய நலத்தோடும், தன் ஆசை நிறைவேறவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்பவன் எதையும் பெறுவதில்லை. நீ கேட்காமலே கடவுள் தருவார்.
உன்னிடமே எல்லாம் இருக்கின்றது. முதலில் உன்னை தேடு ! நான் உபதேசம் பண்ண வரவில்லை. என் முகத்தை உனக்கு காண்பித்து, ஆசிரமம் கட்டி, விளம்பர பலகை வைத்து உன்னை வரவேற்க தயாராக இல்லை. உணர முயல்பவன் எங்கிருந்தாலும் என்னை தேடி வருவான் ! என்னை முழுமையாக உணர்ந்தவன், தன்னை வென்று பிறருக்கும் நல்வழி காட்டுவான் !
என் கடையில் ஞானம் உண்டு. அதை தர காத்திருக்கின்றேன். இங்கே உழைக்காமல் ஓசுக்காக அலைகின்றான். உபாயியாக திரிகின்றான் !
நீயே செய்தாய் , நீயே திண்றாய். நீ தான் அனுபவிக்க வேண்டும். சீற்றம் தாளாமல் திக்கு தெரியாமல் விழப்போகின்றன கர்மாக்கள் ! கர்மாக்கள் ஒருவரையும் விடப்போவதில்லை நாங்கள் !
யுகத்தை சரி செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம் !
வீட்டை சரி செய்யாதவன் வீதியை சரி செய்ய தீர்மானிக்கின்றான். முடிவில் கரமாலமாக போகின்றது. சத்தியம், நிச்சயமாக தர்மாக்களை இலகுவாய் வாழ வழி செய்தாகிவிட்டது. இனி தர்மாக்கள் வாழும் !
உன் எண்ணம் , உன் சொல் உன்னை தீர்மானிப்பதில்லை. உன் செயல் தான் உன்னை தீர்மானிக்கிறது . இப்படி தான் வாழ வேண்டும் என்று மனிதன் தீர்மானிக்கின்றான். ஆனால் விதி வேறொரு பாதையில் பயனிக்கின்றது.
துன்பங்கள் நிறைந்த வாழ்வில் கடவுளை தேடு ! உன்னைக் கடவுளிடம் ஒப்புவித்து வாழ கற்றுக் கொள் ! கடவுள் தீர்மானிக்கும் வாழ்வு பேரின்பமாக இருக்கும் ! பெரு வாழ்வாக இருக்கும் !
புத்தி இல்லாதவன் தான் கடவுளை மறுப்பான். புத்தி உள்ளவன் பேதலிக்க மாட்டான். எல்லோருக்கும் வாழ்வும், சாவும் சமமாக தீர்மானிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கோணம் தான் ! ஒவ்வொருவர் வாழ்வும், தாழ்வும், சாவும் தீர்மானிப்பது கடவுளே ! பிறரின் வாழ்வை பார்த்து சிந்திக்காமல், உணராமல் பொறாமையோடு மனிதன் வாழ்கின்றான்.
தன் நிலை அறிந்தால் இங்கே கடவுள் இல்லை என்று பிதற்றமாட்டான். விதை நெல்லை தூவி மகசூலை தீர்மானிப்பது நீயல்ல. உனக்கு இட்ட கட்டளை விதையை விதைத்து அதை பக்குவமாக பாதுகாப்பது தான். முடிவை தீர்மானிப்பது கடவுளே.
பிறருக்கு துன்பம் கொடுக்க தீர்மானிக்காதே ! அதுவே உனக்கு திரும்ப வரும். சுகாசி, வால் உரைப்பு ஒரு விரல் நுணி அளவு சாப்பிட கற்று கொள். உன் உடல் நோயில்லாமல் திர்மானிக்கப்படும் !
உன் வாழ்வை அழகாக்க நான் தீர்மானித்துவிட்டேன். தர்மாக்கள் நலமுடன் வளமுடன் வாழ தீர்மானித்துவிட்டேன் ! உணரடா ! உண்மையில் நன்மை நானடா !
உன் வாழ்வை தீர்மானிக்கும் வல்லமை உள்ளவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment