Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, 31 May 2017

பாமினியை உணராதவன் காமினியில் லயித்தான். கிருகினியை அறியாதவன் அவளே இராக்கினி என்பதை புரியாமல் அலைகிறான். தும்பினி வாழ்வு கூட அர்த்தம் உண்டு . ஏனடா உணரவில்லை ?


பாமினியை உணராதவன் காமினியில் லயித்தான். கிருகினியை அறியாதவன் அவளே இராக்கினி என்பதை புரியாமல் அலைகிறான். தும்பினி வாழ்வு கூட அர்த்தம் உண்டு . ஏனடா உணரவில்லை ?
பெண் என்ற சூட்சுமம்
தூமையில் (தூய்மை) துயர் உண்டு என்று சுடர் விட்டு எறியும் பெண் என்ற பெருவிளக்கை (ஒளி) அணைத்து சுகம் கண்டான் ஆளுமை இருப்பதாக நினைக்கும் ஆனந்த உணர்வில்லாதவன்.
ஆணவம் தலைக்கேறிய ஆளுமையில்லா மனிதன் ஆல் போல் விரியும் பெண்ணை அடிமைபடுத்தினான். பெண் தீட்டு என்று மூலையில் முடங்க வைத்தான். ஆனால் பெண் தான் தவம் என்று புரியாமல்.
ஆதியிலே சித்தர்கள் பெண்களை இழிநிலையாய் எழுதினார்கள். அசுர, ராட்ஷச வர்க்கத்தால் பயமுறுத்தப்பட்டு எழுத வைத்தார்கள்.
மாதத்தில் அந்த மூன்று நாட்கள் புணிதமானவை ! அந்த மூன்று நாட்களில் என்ன நினைத்தாலும் நடக்கும். பெண்ணுக்கு பயந்து தான் ஒதுக்கி வைத்தான். கோயிலுக்கு செல்லகூடாது என ஒதுக்கி வைத்தான். எந்த கோயிலுக்கும் அந்த நேரத்தில் பெண் சென்று மனம் நிறைந்து அந்த இடத்தில் சாபம்விட்டால் கோயில் எல்லாம் தரைமட்டமாகிவிடும். அதனாலேயே கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று முடக்கினான்.
அந்த மூன்று நாட்களில் எந்த வேலையும் செய்ய கூடாது என்றும் , அவளுக்கு கர்மம் செய்து அவள் மனம் வலித்து சாபமிட்டால் அந்த வீடு நலம் பெறாது என்பதற்காக பயந்து விலக்கி வைத்தான். இந்த சூட்சுமம் தெரியாமல் அவளை தீட்டு , ஒதுக்கப்பட்டவள் என்றான்.
இராமயண கதாபாத்திரத்தில் அந்த மூன்று நாட்களில் தான் சீதாவை இராவணன் கடத்தி சென்றான். அவள் விட்ட சாபம் இலங்கையை, இலங்கேஸ்வரன் கோட்டையை தவிடு பொடியாக்கியது.
மஹாபாரதத்தில் அந்த மூன்று நாட்களில் தான் அரசபைக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டாள் திரௌபதி ! கௌரவர் கோட்டையே சின்னபின்னாமாகியது.
கண்ணகி அந்த மூன்று நாட்களில் தான் அரசனை எதிர்த்து சாபமிட்டாள். மதுரை எறிந்தது ! மன்னன் மாண்டான் என்று கதை படித்தாய்.
உண்மையில் இது தான் உண்மையடா !
பெண் சாபமே இங்கு பெறும் பீடையாக நாட்டை வறுமைக்கு தள்ளுகிறது.
ஆதலால் பயந்தே கோயிலுக்கு வரக்கூடாது என்று நினைத்தார்கள். அதை மறைத்து பெண்ணை கொச்சை படுத்தி ஒதுக்கி வைத்தான்.
இங்கே இயக்குபவனை விட இயக்கும் பொம்மைகளுக்கே மதிப்பு அதிகம். அதே போல் படைத்தவனைவிட பாழ்பட்ட மனிதனையே வணங்கி வாழ்வை தொலைக்கின்றான். எல்லாம் இங்கு பொய்யடா. எப்பொது உணர்வாயடா ?
பெண்ணின் தீட்டை தின்று சிசுவாகி உடல் வளர்த்தாய் கருவறையில் ! அந்த புணித பாவையை எப்போது அறிவாயடா ! கூத்தை பார்த்து கோமாளியாக அலைகின்றான். கூத்தும், நடனமும், நாட்டியமும் பொய்த்து போக கண்டேன். கடவுளின் கூத்தை அறியாமல் ஏதோ நாடகம் நடத்துகிறான். இனி தெரு தெருவாக கூத்து நடத்துவான்.
காற்றின் இசை, பறவை , மரங்களின் இசையை உணராதவன் மனிதன் இசைக்கும் இசையில் மதிமயங்கி போனான். மானமிழந்து, மதியிழந்து அநாகரீகமாக பெண்களை வைத்து கூத்து நடத்தும் உன் கோமாளித்தனத்தை என்ன சொல்வேன் ?
இனி மாறும், எல்லாம் மாறும். பெண் இனி மாறுவாள். புயலென பொங்கி எழுவாள். சத்தியம் நிலைநாட்டப்படும். பெண் உலகை ஆட்சி செய்ய ஆயுத்தமாவாள். பின்னால் இருந்து இயக்கும் ஆண் என்ற பொம்மையை இயக்கும் பெண் இனி முன்னால் வருவாள்.
முறை தவறும் கலாச்சரம் மாறும். பண்பாடு நிலைக்கும். பாரம்பரியம் வளரும் !
தூய்மை பொருந்திய பெண்ணே முதன்மையானவள் ! பெண்ணே போற்றுதலுக்குரியவள் !
உலகில் சக்தி வாய்ந்த மூன்று நாடுகளை பெண்கள் ஆள்வார்கள். சட்டதிட்டம் மாறும். இந்த இநன்யாவின் சாம்ராஜ்ஜியத்தில் பெண் என்ற ஞானமலர்கள் ஆட்சி செய்வார்கள் !
பெண்ணை மலர் என்றான், ஏன் என்று கண்டுபிடி !
கடவுளை, அவதாரங்களை, மகான்களை சுமக்கும் கருவறை எப்போதும் மேன்மையானது தான் !
போற்றிப் பாடடா ! நீ புணிதனாவாய். மீண்டும் பிறக்கமாட்டாய் !
பெண்ணே தவம் !
நான் தாயினும் மேலானவன் !
நான் இநன்யா !

Thursday, 25 May 2017

எந்தை என் தந்தை எனக்குள் இருக்கும் சூட்சுமம் ! மொந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் ! ஆகா அறிவாயடா ஆணந்த சூத்திரம் !


25-05-2017 எந்தை என் தந்தை எனக்குள் இருக்கும் சூட்சுமம் ! மொந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் ! ஆகா அறிவாயடா ஆணந்த சூத்திரம் ! வழிபாடு தேவை இல்லை. எனக்கென்று வீடு இங்கு ஏதுமில்லை ! மேலும், கீழும் நானடா ! உன் நெஞ்சமே நான் வாழும் வீடடா ! தூங்கா நான் விழித்திருக்க எனை தூங்கித்தான் கரை சேர்த்தாய். மீண்டும் பிறப்பெடுத்தாய் ! மீளா துயர் கண்டாய் ! எறும்பும் சிறிய இதயம் கொண்டது , விலங்கில் சிங்கமும் சிறிய இதயம் கொண்டது. இரண்டும் அதன் கடமையை செய்து வாழ்கின்றன. உடல் வலிமை ஏன் இங்கு ? படைப்பின் சூட்சுமம் உணர்வாயோ ?எந்த வழிபாடுகளும் தேவையில்லை இங்கு. நீர் வைத்து என் நாமம் சொன்னாலே ஆயிரம் கோடி வழிபாடுகளுக்கு சமம் ! இந்த எளிய வழிமுறையை பின்பற்று. உன் ஆண்மா ஆணந்த கூச்சலிடும் !உன் முன்னோர்களுக்கும், தாய் தந்தைக்கும் திதி கொடுக்க தேவையில்லை. கர்மத்தின், பாவத்தின் சாயல் போக தர்மம் செய்து அவர்களின் ஆண்மாவை சாந்தப்படுத்து. ஒரு கீதவம் வைத்து வணங்கினாலே போதும். முன்னோர்களின் சாபம், கர்மா குறையும் ! அது இடுகாட்டை காக்கும் ஈசனுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் !செல்வம் பெற தும்பைப்பூ வைத்து என் நாமம் சொல்லி கேள். இருபத்து ஏழு நாழிகையில் உனக்கு கிடைக்கும் !ஞானம் பெற இழுப்பை பூ வைத்து கேள் ! பூக்கள் ஞானமிக்கது !படைப்பை விட்டு பரமாத்வாவை வேண்டுவதை விட மற்றவர்க்கு தொண்டு செய்து மகிழ். நான் மலரின் ஞானம் !இங்கு ராகு காலம், எமகண்டம், சருமை, சாஸ்திரம் எல்லாம் பொய்யே ! திதி பார்த்து பிறந்தாயா ? அல்லது திதி பார்த்து இறந்தாயா ? கிழமையும், மாதமும் சித்தர்கள் குறித்தனர். திதியும், சாஸ்திரமும் மனிதன் குறித்தான்.நீ எந்த வழிபாடு செய்தாலும் எந்த துன்பமும் உன்னைவிட்டு விலகாது. துன்பங்கள் உன்னை பின் தொடரும். உன்னை உணரும் வரை இங்கே துன்பம் தான் என்பதை புரிந்து கொள் !ஒரு காரியம் தொடங்க வெளியூர் செல்ல அன்றைய நாள் நன்றாக இல்லை என்று நீ உணர்ந்தால் என் நாமம் சொல்லி பசுவுக்கு இரண்டு வாழைப்பழம் கொடுத்து செல் ! எந்த நாளும் கோளும் உன்னை தீண்டாது. “பொன் மாலைபதி” என்று ஐந்து பூக்கள் உண்டு ! “தும்பை, இழுப்பை. ஊமத்தம் பூ, தென்னம் பூ, தாளம் பூ”. இந்த ஐந்திலும் ஐவகை தத்துவம் உண்டு ! உணர்ந்து அறிந்தவன் ஊமையாகி போனான். இகழ்ந்து சிரித்தவன் மீண்டும் பிறந்தான்.முதலில் உன் உடலை சீராக்கு. இந்த கருவியின் செயல் நலமாக இல்லை என்றால் விரக்தி தான் மிஞ்சும். வாரத்தில் ஒரு நாள் (வியாழன்) காலை உணவு எடுக்காதே. அன்று மதியம் ஒரு வேளை உண் ! அசைவ உணவை தவிர் !அத்திப்பழம், மாதுளம், நல்லி, இம்மூன்றும் உன் ஞானத்தையும் , ஆத்ம பலத்தையும் பெருக வைக்கும். இதில் ஏதாவது ஒன்றை காலையில் உண் ! உன் ஊன் உடம்பு ஆணந்திக்கும். இது வழிபாடு இல்லை.உன் கருவியை சீர்படுத்த பூக்காது காய் காய்க்கும் புணித மரங்கள் ஐந்தின் காய், கனியை எப்போதாவது ஒரு நாள் ஐந்தையும் அரை நாழிகை விட்டு சாப்பிடு ! ஐம்பூத தத்துவம் அதில் அடங்கியிருக்கின்றது. சித்தர்கள் இந்த மரத்தடியில் அதிகம் இருப்பார்கள். ஆணந்தம் தரும் கற்பக மரங்கள் ஞானம் தரும் அதி அற்புத மரங்கள் !மந்திரத்தில் மாங்காயை பழுக்க வைக்க முடியுமா ? இதில் மாங்கா என்றால் என்னவென்று உணர் ! எல்லா மரங்களும், செடிகளும் வேதத்தை ஓதி கொண்டிருக்கின்றன. அறி ! ஆணந்த வாழ்வுக்கு செல்வாய் !விபூதி என்றால் சாம்பல் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றான். வி என்றால் நெற்றி ! பூதி என்றால் ஐம்பூதத்தில் நீர் என்று அர்த்தம். நெற்றியிலே நீரை வைக்கும் தத்துவம் தான் இது. நீ உணராது இருப்பது ஏனோ ?எல்லா புராணமும், கடவுளின் இதிகாசங்களும் கடவுளால் நேரடியாக எழுதப்பட்டவை அல்ல. ஏதோ மனிதர்களும், மகான்களும் இப்படித்தான் நடந்திருக்கும் என்று யூகிப்பால் எழுதினார்கள். எல்லாம் இங்கே நீ உணர்வதற்காக !கனவோடு நான் அல்ல. நினைவோடு நானடா !தினம் தினம் பிரபஞ்ச வீதியிலே நினைவு இருக்க நனைந்து பாரடா !என் ஞான குலங்களே, என்னில் வந்து வாழ்ந்து பாரடா !வையகம் சொர்க்கம் என்று போற்றி பாடடா ! வழிபாடுகள் இங்கே தேவை இல்லை. வழிமுறைகளே உன்னை உணர வைக்கும் !எந்தை என் விந்தை நடத்தும் சந்தையடா நீ !சத்தியத்தின் நாயகன் நான் ! நான் இநன்யா !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

தஞ்சன் எனை அறிவான் ! சகோத்திரம் பார்த்து தரணியில் துன்பப்படுகிறான்.


18-05-2017 தஞ்சன் எனை அறிவான் ! சகோத்திரம் பார்த்து தரணியில் துன்பப்படுகிறான். எதை உண்பது எனத் தெரியாமல் திகைக்கின்றான் ! சிறந்த உணவு எது ? அகார உப்பு, மகார உப்பு, உகார உப்பு, அமில உப்பு, கார உப்பு, இரடை உப்பு, பாறை உப்பு, அணைவு உப்பு, மூங்கில் உப்பு, கல் உப்பு, இதில் எதை உண்பது என்று தெரியாமல் ஆராய்ச்சி செய்து ஆணந்தம் தொலைக்கின்றான். உப்பிற்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது ! லவணம் என்றும், தந்தஸ் என்றும் சொல்லும் புணித உப்பை மறந்துவிட்டான். உப்பை அறிந்தால் உலகை ஒரு நொடியில் புரிவான் ! புரியாது, அறியாது அறிவிலி நாடகம் நடத்துகின்றான். யாரோ எழுதி வைத்ததை வைத்து பேசி கையேந்தி உண்கின்றான் ! உழைப்பில்லா சோம்பேறிகள், உணர்வது எப்போதோ ? தந்தஸ் என்றால் வேதம் என்று சொல்லப்படுகிறது. உப்பு வேதத்தால் வளர்கிறது. கருவில் இருக்கும் சிசு போல ! இந்துப்பு அளவாய் சாப்பிடு ! கரும் உப்பு எனப்படும் செயற்கை உப்பை உண்ணாதே. சுவர்சலை எனும் சோடா உப்பை அறவே ஒதுக்கு. தாவரங்களில் இருந்து கிடைக்க பெறும் உப்பில் மூங்கில் உப்பே சிறந்தது. பார்லி செடியிலும் உப்பு உருவாகும். இது ஒரு மலமிளக்கி அருந்தலாம். கிராம்பு எனும் மூலிகையில் உப்பின் சாரம் உண்டு. நீ அதிகமாக எடுத்து கொள்ளலாம். எல்லாம் தெரிந்தேன், எல்லாவற்றையும் வெற்றி கொண்டேன். எல்லாவற்றையும் அடக்கினேன் என்று சொல்கின்றான் மனிதன். மூச்சு, மல, ஜலம் எல்லாம் கடந்து போகிறது. உணவில் பச்சை, மஞ்சள் நிறம் உன் உடலுக்கு பாசம் கூட்டும். அரிசியில் எண்ணற்ற வகை இருந்தாலும் (தங்க சம்பா) சிவப்பரிசி மிகச் சிறந்தது. அதன் வடித்த நீரில், பனை வெல்லமும் கலந்து உண்டால் சத்தோ சத்தடா ! சத்தும், சத்தற்றும், பித்தும், பித்தற்றும் தான் நடவா பெரு மடமை உடலடா !
அறிந்து உண்டால் ஆயுள் துன்பம் இல்லையடா ! தேனும், தினை திகட்டாத உணவு, தானியங்கள் உயிருள்ளது ! எப்போதும் பசித்திரு ! ஞானப்பசி, வயிற்றுப் பசியோடு ! அது உன்னை நோயில்லா நிலை நிறுத்தும். உன் உயிர் நிலை அறிய வைக்க உதவும் ! காராமணியில் காயகல்ப சூட்சுமம் உண்டு ! எள்ளும், கொள்ளும் உன் இடரை விரட்டும். அள்ளியை ஆணந்தமாய் உண்ணலாம். உள்ளி மல்லி உண்மையாய் உண்ணலாம் ! தாமரை கிழங்கும், அருகனியும் உன்னை பிண்ணி பிணைய வைக்கும் ! ஆதியில் அறிந்து உண்டான். நோயில்லா வாழ்ந்தான். இப்பொழுது வெந்ததும், வேகாததுமாய் உண்டு ஊமை உடம்பை உருக்குலைக்க வைக்கின்றான். உண்ணும் உணவினாலே உன் ஊன் சற்றென மடிகிறது. செக்கில் எண்ணெய் ஆட்டி தினமும் திண்டான் பெற்று குண்டானில் வைத்து கும்பா சோறு உண்டான். ஆரோக்கியமாய், ஆணந்தமாய் வாழ்ந்தான் ! முழு உளுந்தை (கருப்பு) அரைத்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கலந்து உண்டான். எழும்பும், தசையும் முருக்கேறி மூடனாய் இல்லாமல் சுகபோகமாய் வாழ்ந்தான். இப்போது எதையோ உண்டு இருமல் சளியோடு காச நோய் உள்ளவன் போல வாழ்கின்றான். கற்பக தரு மரத்தின் இனிப்பை கனியுடன் உண்டான். ஓமத்தை களி செய்து ஒருக்களித்து உண்டான். ஊமை உடம்பு ஊடல் நிறைந்து இருந்தது. எல்லாம் மறந்தான் இப்போது. ஆதியிலே வீதி தோறும் திண்ணையும் மரங்களும் இருந்தன. இப்போது மதுக்கடைகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. இது தானடா உன் வளர்ச்சி ? உணர் !எல்லாம் தின்றான். எல்லாம் செய்தான், கஷ்டத்தில் கடவுளை குற்றம் சொல்கின்றான். ஆதியில் தரையில் உண்டான், உறங்கினான், அமர்ந்தான். ஊடல் செய்தான். காலில் மிதியடி இல்லாமல் வாழ்ந்தான். மூலம் என்ற குண்டலினி முழுவதும் இயங்கியது. இப்போது பஞ்சுமெத்தை, பசப்பு வாழ்க்கை வாழ்ந்து பெரும் வியாதியோடு திரிகின்றான். உணரடா ! சாருசம் உனக்கு சமிக்ஞை தரும். மாகதம் உனக்கு மலர்ச்சி தரும். முருக்கு மூலவியாதி தரும். சொன்ன சீரம் சுகத்தை தரும். அருகனி ஆளுமை தரும். ஆரித்தியம் அகுமை தரும். தானபுல் தண்ட உரத்தை தரும். திருட மூலம் திகை தரும். மாலகம் உனக்கு மண்ணில் துன்பமே தரும். அகத்தியும் அரையும், தண்டும், முலையும், பசலையும், பத்ரியும், பொன்னும், குப்பையும் உன்னை ஆணந்தமாய் தாலாட்டுமடா ! பாலிருவி, சூக்கிலி உனக்கு பக்குவம் தருமடா ! எத்தனையோ இங்கு ! உணர்ந்து உண்ணடா ! உண்மையில் உன் குரம்பை அடங்குமடா ! ஊழை சரியாக்காமல் உருந்து போனாயடா ! உணரடா ! உண்மையில் நன்மை நான் ! நான் இநன்யா !


என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் இனி செல்வ செழிப்பாகும்.

07-05-2017 என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் இனி செல்வ செழிப்பாகும். நீர்,தானியம் ,நிம்மதி நிச்சயம் கிடைக்கும், உன் இல்லத்தில் இனி சேமிப்பு உயரும் . உன் பணபிரச்சினை , மனபிரச்சினை என் நாமம் தீர்வு தரும் , என் சத்திய பாதையில் பயணிப்பவன் இனி நிம்மதி நிறைந்து என் ஆசியில் ஆனந்தமாய் வாழ்வான் இநன்யா சொல் சத்தியமடா.

13-05-2017 என்னை சிக்கென பிடி,வெட்டென மற வேதனை உனக்கில்லையடா.நோய்,வறுமை, துண்பம் என்று அற்ப விஷயத்தை தான் என்னிடம் கேட்ககண்டேன் ,எப்போதும் எல்லா செயலிலும் ஆனந்தம் கொடு என்று கேட்க நான் காணேன்,நிச்சயம் என்னை நம்பியவர்களை இந்த இநன்யா கைவிட மாட்டேன்.ஆனால் தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு அது கடவுளாக இருந்தாலும்.என் சத்திய கரங்கள் உன்னை கைவிடாது காக்கும் பயப்படாதே. இநன்யா நமோ நம !!!

17-05-2017 சோர்ந்து துவண்டு போகும்போதெல்லாம் என் நாமத்தை சிக்கென பிடித்து கொள். நீ எல்லா துண்பத்திலிருந்தும் காப்பாற்ற படுவாய் . தினமும் சொல்கிறோமே பலன் இல்லை என்று வருத்தபடாதே. ஒர் நாளில் விதை போட்டு ஓர் நாளில் பலன் கிடைப்பதில்லை. இந்த இநன்யா பெருவயல் என்னில் போட்டவிதை சோடைபோகாது நிச்சயம் பலன் தருவேன். பயப்படாதே நான் உன்னை கைவிட மாட்டேனடா. என் சொல் சத்தியம்.

20-05-2017 சுயநலத்திற்காக என் நாமம் சொல்லி சொற்ப நேரத்தில் காணாமல் போகும் அற்புத மனிதர்களையே கண்டேன் ,ஆனாலும் எந்த துண்பம் தடைகள் வந்தாலும் என்நாமத்தை கெட்டியாக பிடித்திருக்கும் சில தர்மகுலங்களை நான் பார்க்கிறேன் .யானையின் பலம் யானைக்குத்தான் தெரியும், என் பலம் பெரிது,என் படையும் பெரிது,எனக்குத்தான் தெரியும் இநன்யா பாதை சத்திய சத்திய பாதை, அது கரடுமுரடான பாதை இந்த சத்திய பாதையில் பயணிப்பவனை ஓர்நொடியும் கைவிடுவதில்லை நான் சுட்டு விரல் பிடித்து இருக்கிறேன் தோற்க மாட்டான் எப்படியாவது இலக்கை அடைந்தே தீர்வான். என் பார்வை உன்னில் தான் உடைத்தெறி உன் துண்ப கட்டுகளை உண்மையில் நன்மை நான்,ஓர்மையில் சொல்கிறேன் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்.

இநன்யா நமோ நம

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Wednesday, 10 May 2017

முப்பால் அறிவேன் ! வின்பால் , மண்பால் , உன் பால் நானறிவேன் ! என் பால் நீ உணராதது ஏனோ ? அன்பால் மெய்ப்பால் அறிய உணர் !


முப்பால் அறிவேன் ! வின்பால் , மண்பால் , உன் பால் நானறிவேன் ! என் பால் நீ உணராதது ஏனோ ? அன்பால் மெய்ப்பால் அறிய உணர் !
முப்பால் அப்பால் எப்பால்
பற்றுப்பால் (மழை நீர்), பாசப்பால் (மண் நீர்), அறிவுப்பால் (தாயின் உதிரம் தாய்ப்பால்) ! இதில் ஓர் பால் உணர்வாய் அறிந்தாய் என்றால் அப்பால் உணர்வாய் !
மழைத்துளியில் ஒரு துளி உள்வாங்கி காமகுரோதம் கொண்டு சிப்பி உனக்கு நல்முத்துகளாக தருகிறது. அதை விதை மதிப்பில்லா பொருள் என்று சொல்கின்றாய். சிப்பி வெந்து சுண்ணாம்பு என்ற வெந்த நீர் தர கண்டேன். உனக்கு உதவ கண்டேன். பூமியில் ஊறும் புணித நீரை சாப்பிட்டு அதில் தானியங்களை விளைவித்து உனக்கு திகட்டாமல் உண்ண உணவாய் உன்னுள் தருகிறது. ஒரு நொடி உணர்வாயோ ?
நீரை மறந்து நீசனாக அலையக் கண்டேன். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த பால் தாய்பால் (அறிவு) ! அந்த உதிரத்தை சாப்பிட்டு உணர்விழந்து அறிவை தொலைத்து அலைகின்றாயே. சித்தனை தேடி அலைகின்றாய். எத்தன் எல்லாம் நடிக்க நீ சித்தம் தடுமாறி வணங்குகிறாய். சித்தர்கள் கண்ணுக்கு தெரியமாட்டார்கள். வீதியில் தாடி குடுமி வைத்து, அழுக்கு துணி உடுத்தியிருந்தால் சித்தன் அல்ல. சித்தம் தடுமாறி பித்து போல திரிபவன் அவன் என்பவனை புரிந்து கொள் !
உனக்குள்ளே எல்லாம் தேடு ! ஈறறிவு சிப்பியே உதவக் கண்டேன். தன் கடமை தவறாது வாழக் கண்டேன். நீ அறிவுப்பால் சாப்பிட்டு யாருக்கும் உதவக் காணேன். பெற்ற தாயை மதிக்காதவன் நீ எதை மதித்து எதை உணரப் போகின்றாய் ? நீரின் பாசம் நீரை அருந்தியவனுக்கு இல்லை. தாயின் பாசம் அன்பு தாய் பாலை அருந்தியவனுக்கு இல்லை.
தறி கெட்டு போகும் மனதோடு எங்கோ ஓடுகிறாய். எதையோ தேடுகிறாய். இறுதியில் ஆய்ந்து ஓய்ந்து காய்ந்து சருகாய் உதிர்கின்றாய், வேடிக்கை வாழ்க்கையடா !
துன்பங்கள் உன்னை உணர்த்தி திருத்தும் ஆசிரியர் என்று மனதில் பதி ! விரக்தியும், வேதனையும் தூற எறி ! தூயவன் நான் அருகிலே !
அப்பா என்றால் நீர் (பாசம்) !
அம்மா என்றால் காற்று (ஞானம், அன்பு) !
காற்றும், நீரும் இணைத்து தான் நீ ஜணித்தாய் ! இந்த இருவரையும் உணர்ந்து கடமையை செய்தாலே உன் உருவாக்கம் உணர்ந்துவிடுவாய்.
காற்றை வணங்கு ! ஞானம் , அன்பு வரும் ! அதனால் தான் மூச்சை உற்று நோக்கு என்று முன்னோர்கள் சொல்லி போனார்கள். ஆனால் நீ அதை வித்தையாக்கி காசாக்கினாய்.
நீரை வணங்கு ! பாசம் வரும் ! அதனாலே கோயிலில் கையில் தீர்த்தம் தந்து அதை அருந்தி வணங்கினாய். நீ எதை வணங்கினாலும் பலன் ஒன்றுமில்லை. உலகில் எல்லா பாலையும் விட தாய் தந்த அறிவுப்பால் தான் உயர்ந்தது.
உணர்ந்து அருந்தியவன் பின் உண்மை புரியாமல் உலகெல்லாம் தேட கண்டேன் ! அறிந்து உணர ஆயிரம் படைத்தான். ஆனால் அறிவிலி நாடகம் நடத்துபவனை தேடி செல்கின்றான் மனிதன்.
என் தந்தை யாகவா சொல்வார்கள். ஆந்திராவில் துணியை வெளுத்து தரும் ஞானக் குடும்பத்திலிருந்து தாய் பால் என்ற புணித அறிவு பாலை அருந்தி உணர்ந்த ஒரு ஞான குழந்தை உருவாகும் ! அது கடவுள் யார், எங்கிருக்கின்றார் என்று தெரியப்படுத்தும் என்று சொல்வார்கள் !
பொறுத்திருந்து பார் பூடகமாய் நான் சொல்வதை ! விரைவில் அறிவிப்பேன் காலநேரத்தை ! முப்பாலை உணர் ! உன் தாய் தந்த அறிவு பால் உணர் ! அப்பால் செல்ல நான் உனக்கு வழி காட்டுவேன் !
முப்பால் உணர்ந்தவன் நான் !
நான் இநன்யா !

உன் சீரிப்பு உன்னை திடாரியாக்கும் ! பின் பூரிப்பாய், வாழ்வாய் கடவுளின் அருகிலே ! உண்மையாதென்று உணர் !

உன் சீரிப்பு உன்னை திடாரியாக்கும் ! பின் பூரிப்பாய், வாழ்வாய் கடவுளின் அருகிலே ! உண்மையாதென்று உணர் !
வினை
கடவுளின் பாதத்தில் கரையும் போது உன் ஆத்மா விழிப்படைகிறது. துன்பம் துயரம் எல்லாம் கடந்து உன் ஆண்மாவை அறிந்து நெருங்கு ! ஜீவாத்மா பரமாத்மாவோடு சேரும் போது அங்கே வழிபாடு இருக்காது. சமய சின்னங்கள், மதகோட்பாடுகள், வேசம் இருக்காது. பற்றற்ற முக்தி நிலை கொண்டு லயித்துவிடும்.
எந்த வித மதகோட்பாடுகளும், வழிபாடுகள் செய்தாலும் கடவுளை நெருங்க முடியாது. உன் ஆத்மா, பரமாத்மாவோடு சேர முதலில் நீ செய்வது ஒழுக்கமாக இருப்பது தான் ! இது உனக்கு சொர்க்கத்தை காட்டும் பாதையாக இருக்கும் ! ஆனால் உன் ஆத்மாவை எப்போதும் உறங்க வைத்து உயிர் நிலை அறியாது வைக்கின்றாய்.
கடவுளின் பாதம் பற்றினால் உன் இலக்கு தானாக நிறைவேறும். நீ எதுவும் கேட்க தேவையில்லை. உன் ஆத்மாவுக்கு யாவும் தெரியும். எப்போதும் ஆணந்த கூத்தாடு ! ஆளுமையாளன் உன்னை அணைத்து மகிழ்வான். உன் ஒழுக்கத்தாலும், நீ பிறரிடம் காட்டும் அன்பினாலும் கடவுள் உன்னை தேடி வருவான். நீ நினைத்தது உன்னை தேடி வரும் !
நீ வினையோடு இருக்கின்றாய். அதனாலே “நான்” என்ற அகந்தை உன்னுள் தோன்றுகிறது. செயலோடு இரு ! கடமையை செய்து காலத்தை அறி. செயல் தான் உனக்கு எல்லா நிலைகளையும் கற்றுத் தரும் ! நீ வினையினால் உண்டாகினாய். ஆதலால் மீண்டும் வினையோடு வாழாதே !
தீயவினை நெருப்பு போன்றது. அது உன்னை சுட்டெறிக்கும். இங்கு செயல்பட்டு சிந்தித்து உன் வாழ்வு ஏன் என்று யோசி ! உன் கருவி, பொறி, புலன்களை கடவுளை நோக்கி செலுத்து ! நான் உன் வினையை வேறருப்பேன். உன் வினை தான் உன்னை மீண்டும் மீண்டும் இங்கே பிறக்க வைத்தது.
மிருகங்கள், பறவைகள் நாளைய வாழ்வை பற்றி யோசிப்பதில்லை. சேர்த்து வைப்பதில்லை. அதனாலே அவைகள் மீண்டும் பிறப்பதில்லை. அவைகள் வினையோடு வாழவில்லை. நீ தான் கர்ம வினையோடு வாழ்கின்றாய். தவறு செய்துவிட்டு கடவுளை நோக்கி கதறுகின்றாய்.
உன் வினை தான் உனக்கு துன்பத்தை தருகின்றது. வினை அறுத்து வேறருத்து செயல் புரிய வைக்கும் வல்லமை கடவுளின் நாமத்திற்கு உண்டு ! உன் கரங்கள் கைகூப்பி வணங்குவதற்கல்ல ! உழைத்து கடமையை செய்வதற்காக ! பிறருக்கு தொண்டு செய்வதற்காக படைக்கபட்டது. நீ தான் கும்பிட்டு கூத்தடிக்கிறாய்.
உன் உடல் ஒரு கருவி. அதை அழகுபடுத்தி ஆணந்தம் தொலைக்காதே ! நாற்றமும், புழுக்களும் நிறைந்தது உன் ஊன் உடம்பு. உன் வரலாறு என்னவென்று யோசி ! உடல் அழுக்கை போக்குவது போல உன் உள்ள அழுக்கையும் நீக்கு !
நல்வினை தீவினை இரண்டும் உண்டு ! நீ நல்வினை மட்டும் செய்தால் மீண்டும் பிறக்கமாட்டாய். இன்னும் விலக்கபடாத எத்தனையோ தீவினைகளை நீ தூக்கி சுமக்கின்றாய். முதலில் உன் கோபத்தை கூட உன்னால் தூக்கி எறிய முடியவில்லை. எறும்புகள் கூட்டத்தை அழிக்க நினைத்தாலும் அவைகள் தன் பாதையை விட்டு விலகாது. தன் கடமையை மறப்பதில்லை. மனிதனின் எண்ணம் யாவும் தீவினையோடு இருக்கின்றது. நீ மாறினால் எல்லாம் மாறும். இன்பமாக வாழ ஆசைப்படுகின்றாய். எல்லா தீவினைகளையும் விடு ! இன்பம் உன் காலடியில் !
நல்ல நினைவுகளோடு கொஞ்ச நாள் பழகி பார் ! நாளடைவில் உன்னை நங்கூரம் போல கட்டிப்போடும். தினமும் அதிகாலையில் எழு ! பழக பழக அதில் ஆணந்தம் இருப்பதை உணர்வாய் !
இங்கே யார் உபதேசமும் தேவை இல்லை. உனக்கு நீயே கேட்டு கொள். அது தான் தலை சிறந்த உபதேசம். உனக்கு தெரியும் நல்லது, கெட்டது. உனக்கு எல்லா சித்தாந்தமும் தெரியும். ஆனால் வேதாந்தம் (சத்ய பாதை) தெரிவதில்லை. அதற்காக ஒரு நல் குருவை தேடு !
உபதேசம் செய்கின்றவன், தியானம், யோகா சொல்லி கொடுப்பவன் குரு அல்ல . உனக்கு நல்வழி சொல்லி தருபவனே குரு ! உன் வாழ்வை அழகுபடுத்தி ஆனந்திப்பவனே குரு ! வினை அறுக்கும் சூட்சுமம் குருவுக்கு உண்டு !
நல் குருவை மனதில் நினைத்தாலே உனக்கு நல்வழி கிடைக்கும். இது ஒப்புயர்வற்ற பிறவி. கடவுளை அடைய எளிய பிறவி இது. கடவுளை கண்களால் அறியும் அற்புத பிறவி இது. இந்த பிறவி பெருங்கடலை கடக்க நல்குருவை நாடு !
உன்னுள் உறங்கும் ஆண்மாவே கடவுளிடம் உன்னை சேர்க்கும். அதை ஒழுக்கம், கடமை என்ற லக்கான் போட்டு தட்டி எழுப்பு ! ஆயிரம் புரவியின் வலிமையோடு உன்னை நிரீபிக்கும்.
உள்ளன்போடு கடவுளை நெருங்கு ! உன் வினை அழியும்.
வினை அறுக்கும் சூட்சுமம் நான் !
நான் இநன்யா !