Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, 13 October 2016

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.

ஓம்/om/ॐ/aum/ओं/唵 = அ+உ+ம்அவ்வும் உவ்வும் மவ்வும் : நமது உடலாகிய பிண்டத்தில் அ + உ + ம் = ஓம்

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.ஓங்காரம்(பிரணவம்):எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்தஒலியே பிரவணம் எனப்படும். வாயைத்திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றைவெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலிபிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில்வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலிதோன்றுகிறது.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவணஒலியே நிலவி இருந்தது என்றும்,பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்துநாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத்தத்துவ நூல்கள் கூறுகின்றன.அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள்வடிவந்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ்வடிவம்.உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்துஉயிர்மெய்யெழொத்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96தத்துவத்துடன்விளங்கும். அ உ ம் என்றஎழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8x 2 x 6 = 96.

மனிதவுடலான பிண்டமும்,பரவெளியான அண்டமும் இந்தத் 96தத்துவங்களுக்குள் அடக்கம்.ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை, "ஓரெழுத் தாலே யுலகெங்குந்தானாகி"
(திருமந்திரம் 765)"

ஆறெழுத் தோதும் அறிவார்அறிகிலர்" (திருமந்திரம் 941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை ஓம் எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உரு அரு ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே-திருமந்திரம் 2627-

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர் மூன்றும் உற்றனைஓங்கார சீவ பரசிவ ரூபமே-திருமந்திரம் 2628-என்பவற்றாலும் அறியலாம்.

அருவுருவ ஒலியொளி(நாதசுடர்) ஓம் இந்தப் பிரபஞ்சமே "ஓம்" என்ற அருவுருவ ஒலி(அருவம் > நாதம்), ஒளி(உருவம் > சுடர்/சோதி)யிலேயே உருவாகி, அந்தஓங்காரத்திலேயே ஆதி தொடங்கி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தஅளவற்ற ஓங்கார நாதத்தைத் தம்முள் தட்டி எழுப்பிக் கேட்டும்,அடிமுடி காணமுடியாத ஓங்காரப்பிளம்பாகியச் சுடர்/சோதியில் இரண்டறக்கலந்தும், பேரின்பமாகிய பேரறிவெனப்படும் பேரருள் பெற்றவரே சித்தர்கள்."

ஓம்" அதன் ஆற்றல்கள் அளவிட முடியாதளவிற்குப் பல்வேறு பேதங்களாக இருக்கின்றது. அதன் பல்வேறு ஆற்றல்களையே சித்தர்கள் பல்வேறு இறைநிலைகளாக (பல்வேறு கடவுளராக)உருவகித்து உலக மக்களுக்கு விளக்கினர். அந்தஓங்காரமாகிய அருவுருவ நாதசோதியுடன் இரண்டறக் கலத்தலேஈடிணையற்ற முத்திகளும், சித்திகளும் பெற்றசிவநிலை (இறைநிலை)யாகும். ஓம் அழிவற்றது, அளவற்ற ஆற்றல்கள்கொண்டது. அதையடைந்த சித்தர்களும் அழிவற்றவர்கள், அளவற்ற ஆற்றல்கள் கொண்டவர்கள். அந்தஅழிவற்ற நிலையான இறைநிலையையே சாகக்கல்வியாகவும்மற்றும் மரணமில்லாப் பெருவாழ்வாகவும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் தாம் பல்கோடி யுகங்கள் தாண்டியும் வாழ்வதாக தங்கள் பாடலில் குறிப்பிடுவதும் இதன் நிமித்தமே.

தினமும் "ஓம்" என்போம்.ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் பெறுவோம்.

நமது மூக்குத் துவாரத்தின் இடது நாசியில்ஓடுகின்ற சுவாசத்திற்கு "அ" காரம் எனவும்,வலது நாசியில் ஓடுகின்ற சுவாசத்திற்கு "உ"காரம் எனவும் கூறப்படும். இடகலை (இடதுநாசி) அதிர்வு நிலை "அ"காரம்,

பிங்கலை (வலதுநாசி) அதிர்வுநிலை"உ" காரம் எனப்படும். நாம் பேசத் துவங்கும்போது இரண்டு நாடிகளும் அதிரும். இதனால்மண்டை ஓட்டின் நடுவில் ஒரு ஒலி தோனறும்அதுவே "ம" காரம் ஆகும்.இந்த மூன்று அதிர்வுகளும் சேர்ந்த இடமேஓங்காரம் அதாவது பிரணவம் ஆகும். இதுவே நடு ஒலியின் பிறப்பிடமான சுழிமுனைஆகும். இது இயங்குகின்ற உச்சி முடிவே மண்டை ஓட்டின் நடுவிலுள்ள காபாலமாகும்."

அ"என்ற எழுத்து இடகலைநாடி இடது கண்பார்வையோடு பொருந்தியது."

உ"என்ற எழுத்து பிங்கலைநாடி வலதுகண்பார்வையோடு பொருந்தியது

"ம"என்பது உச்சியில் (சிரசில்) உள்ளஅதிர்வுநிலை. இதுவே சுழிமுனைநாடியிலுள்ள ஆன்ம ஒளி.தமிழுள் 8*2*6 = 96 தத்துவங்கள்எட்டு(8/அ)*இரண்டு(2/உ)*ஆறு(6/ம்)= ஓம் =96 தத்தவங்கள்.ஓம் என்னும் சொல்அ+உ+ம் என்ற முன்றுஎழுத்துக்களால் ஆனது. " ஓம் " என்றபிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்குத்தொகை 8 x 2 x 6 = 96.ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இதுஅ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’.மனிதனின் உடலும் இறைவனின் இயற்கைவடிவான ஓங்கார வடிவத்துடன்அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள்வடிவம்தான்.ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ்வடிவம்.உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்துஉயிர்மெய்த்தாவது போல், உயிரும் உடலும்சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண்("அ" ) அளவுடையது. மனிதன் விடும் இரு("உ") வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளிமூச்சு)" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சுவெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வுஇயக்கத்தால் எற்படும் இன்பத்தை அதுகுறிக்கும்அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96தத்துவத்துடன்விளங்கும். அ உ ம் என்றஎழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:"அ"என்பது முதல்வனான சிவனையும் "உ"என்பது உமையவள் எனப்படும்சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும். இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரிவடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும்,"உ"எனவும் உள்ளது. வழிப்படும் உருவமாக'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாகசொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.முதல் எழுத்து:"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்அருவுருவாய் நின்ற பாசிவமுமாகிசோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "- என்றும் குறிப்பிட்டுள்ளார்.சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும்ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும்இதுவே" அ " உள்ளது. அத்துடன்எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து." அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு "என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில், அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி, ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும்"என்று பாடியுள்ளத்தின்மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக்காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய்உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களதுபாடல் மூலம் விளங்கும்."
கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"- மச்சைமுனி தீட்சை ஞானம்

உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய்பிறக்கும் ஓசை பேசும் போதுஉண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது. இது பற்றி யூகிமுனி தனது வைத்தியசிந்தாமணி 800 - ல்அவ்வென்னும் அட்சரத்தில் நாடிதோன்றும்அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும் எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும் ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம் முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம் முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல் காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக இருந்து அகத்தும்,புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இதுஉந்தியின் கீழ் தங்கி நிற்கும்.இதை விளக்கும்படி திருமூலர்,ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்நீங்காவகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்றுகூறியுள்ளார்.

ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது. அகாவொலி முதற்பிரிந்து படைத்தற்தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆகமுத்தொழிலையும் ஒருங்கே இணைத்துஅடக்கி நிற்கும்."ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன்பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும். குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்."

ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள்கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்குவிளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி, மெய், முகம், ஆகியவற்றில் ஒருதெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம். ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படி அருஞ்சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச்செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம்.சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிவுகளை விரைவாக அடையலாம்.

!பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டுஇருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரைமாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து -சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம்என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிடமணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும்போது நமது மூக்கின் வலப்பகுதி துவாரவழியாக காற்றை சுவாசித்து இடப்பக்கமூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்."

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்கூற்றை உதைக்கும் குறியது வாமே "-என்கிறார்.இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை,பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காதுஇரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரேமுறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும்.இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும்கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை.அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்புசுழற்சியைவெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள்வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப்பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள். காயசித்தியின் பெருமையினை '

காகபுசண்டர்'பாடலைக் காண்போம் :பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்பாலகன் போலொரு வயது தானுமாச்சு நேரப்பா இருபத்தி நான்கு சென்றால் நேர்மையுள்ள வயது மீரண்டாகும் சீரப்பா முப்பத்தி ஆறுமானால் சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போதாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே....ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலகமாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததேவாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.“

ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாகஇருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம்அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்துசிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலைகிட்டாதோர்க்கு இறப்பு உண்டெனஎண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது.தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர். விநாயகரின் தலை“ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா?“ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும்ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்”மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmologicalsound of creations. Scientifically it's known asthe sound of 'big bang''

ஓம்' என்பது தனிக்குறியீடு மட்டுமல்ல.பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி நாதவிந்தாகவும்,அனைத்துப் படைப்புக்களையும் உள்ளடக்கிய கட்டற்ற தத்துவமாகவும் உள்ளது 'ஓம்'. அதை எம்மொழியிலும் எழுதலாம்."ஓம்" என்ற ஒலி ஆதியலிருந்தே தமிழோடும்,தமிழர் வழக்கிலும் இருந்து வந்துள்ளது.ஈழத்தில் தமிழர்கள் "ஆம்" என்ற சொல்லை,"ஓம்" என்று தான் பேச்சு வழக்கில் கொண்டுள்ளனர். கிரேக்க மொழியில் "Ω/Omega/Ωμέγα" என்றஎழுத்துக்கும், மற்றும் "ஆமேன்/ ɑːˈmɛn/ ˌeɪˈmɛn/Hebrew: ,אָמֵן Tiberian ʾĀmēn; Greek:ἀμήν ; Arabic: ,ﺁﻣﻴﻦ ʾĀmīn" என்றசொற்களுக்கும், 'ஓம்'ற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் மொழியியல்ஆராயச்சியாளர் தெரிவிக்கின்றனர

No comments:

Post a Comment