Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 4 December 2016

நான் ;;; ஜீவாத்மா , பரமாத்மா

 நான்
====
உண்மையான விடுதலை என்பது என்ன என்று நீங்கள் அறிய விரும்பினால்,
உங்களது இந்த 'நான்' என்பதன் பகுதிகளை விட்டு விட வேண்டும்.
நீங்கள் ஒரு ஆண்
நீங்கள் ஒரு பெண்
என்பதை மறந்து விட்டு
நீங்கள் வெறுமனே மனிதன் என்று நினைக்க வேண்டும்.
உங்களது பெயரையும் கூட மறந்து விட்டு
அதாவது அந்தப் பெயர் உங்களது
உண்மை நிலை அல்ல என்றும் அறிந்து கொண்டு, நீங்கள் கற்றவைகளை எல்லாம்
மறைந்துவிட்டு, அதாவது அவைகள் எல்லாம் உங்களது சொந்த அனுபவம் இல்லை என்றும், நீங்கள் சொந்தமாக அடைந்த விஷயம் இல்லை என்றும் அது மற்றவர்களிடம் இருந்து பெற்றது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகம் முழுவதும் வெளிச்சம் நிரம்பி இருக்கலாம். ஆனால், உங்களுக்குள் ஆழத்தில் நீங்கள் இருளில் தான் வாழ்கிறீர்கள்.
நீங்கள் உங்களுக்குள் ஒரு சிறிய ஒளிச்சுடர்
கூட இல்லாமல் இருக்கும் போது இந்த உலகம் முழுவதும் வெளிச்சம் இருந்து என்ன பயன்?
எனவே கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பிறந்த பிறகு உங்களிடம் எந்தெந்த விஷயங்களை சோ்க்கப்பட்டனவோ
அவையெல்லாம் உங்களது உண்மை நிலை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இப்படி உங்களது 'நான்' என்பதன் பகுதிகள் மறைந்துவிட்ட பின்னர் நீங்கள் இந்த வெளி உலகில் உள்ள வானத்தைப் போன்று உங்களுக்குள்ளும்
ஒரு பிரமாண்டமான வானம் ஒன்று இருப்பதை அறிந்து கொள்வீகள்
இது தான் உங்களது விழிப்பு நிலை;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;                        

ஜீவாத்மா , பரமாத்மா
================
ஜீவாத்மா பரமாத்மாவின் பிரதி பிம்பம். சூரியன் தண்ணீரின் வெவ்வேறு பாகங்களில் பிரதிபலிப்பதுபோல், பரமாத்மா வெவ்வேறு மனிதர்களின் மனங்களில் பிரதிபலிக்கிறது.
ஆன்மா ஆவி. அது அப்பிராகிருதமானது. அது ஞானம் அல்லது பிரக்ஞை. இது சைதன்யம். ஜீவாத்மா பிரதி பிம்ப சைதன்யம். இந்த ஜீவாத்மாதான் தேகத்தின் மரணத்துக்குப் பிறகு அதனினின்று பிரிந்து, இந்திரியங்கள்,மனது, பிராணன், சுவடுகள், ஆசைகள், மனப்போக்குகள் ஆகியவற்றுடன் சுவர்க்கம் செல்கிறது. அது சுவர்க்கத்துக்குப் போகும்போது அதற்கு சூட்சுமமான சரீரம் உண்டு. 
ஏரியிலுள்ள நீர் வற்றிப்போகும்போது நீரில் சூரியனின் பிரதிபிம்பம் சூரியனுடனேயே கலந்துவிடுகிறது. அதேபோல், மனது தியானத்தின் மூலம் அழிக்கப்பட்டபோது, ஜீவாத்மா பரமாத்மாவில் ஐக்கியமாகி விடுகிறது. இதுவே வாழ்வின் லட்சியம். ஆசாபாசங்கள், அகங்காரம், செருக்கு, பேராசை, மோகம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றினால் ஜீவாத்மா அசுத்தமாகிவிட்டது. அதனால் அது வரம்புடையதாயும் (பரிச்சின்னமான), சிற்றறிவுடையதாயும் (அல்ப ஞானம்), சக்தி குறைந்ததாயும் (அல்ப சக்திமான்) ஆகிவிட்டது. பரமாத்மா எல்லையற்றது. எங்கும் வியாபித்தது. சர்வ வல்லமையுடையது. அது அறிவும் ஆனந்தமுமே உருவெடுத்தது.
ஜீவாத்மா அஞ்ஞானத்தின் மூலமும் வரம்புகட்கும் உபாதிகளாகிய மனம், சரீரம், இந்திரியங்கள் மூலமும் பந்தப்பட்டு இருக்கிறது. இது தோற்றம் மாத்திரமே, பிரமையே. அது அழிவற்ற பொருளின் ஞானத்தை அடையும்போது, அது வரம்புகட்கும் உபாதிகளிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபடுகிறது. குமிழி சமுத்திரத்துடன் ஒன்றாவதுபோல், ஜீவனும் அஞ்ஞானம் அழியும்போது பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுகிறது.
ஒரு பிணம் பேசவோ, நடக்கவோ, பார்க்கவோ முடியாது. ஆன்மா தேகத்தினின்று அகன்றபின் அது மரக்கட்டையைப் போல் இருக்கிறது. ஆன்மாதான் உடல், உள்ளம், புலன்களை உயிருள்ளதாக்கி, மின்சாரம் பாய்ந்தது போல் ஊக்கி, அசைத்து 
நடத்துகிறது.
பரமாத்மா சுயப்பிரக்ஞை, சுயஞானம், சுய ஆனந்தம், சுய அறிவு, சுய இருப்பு. அது தன்னை உணர்ந்து பிறரையும் உணர்கிறது. அது சுயஞ் ஜோதியாய் எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது. 
பிரகிருதி தன்னைத்தான் அறியாது. மற்றவற்றையும் அறியாது. அதனால் அது ஜடம். பரமாத்மா உருவமற்றது, குணங்களற்றது, சர்வ வியாபி, பாகுபாடற்றது, அழிவற்றது, காலமற்றது, ஸ்தானமற்றது. சூரியன் பகல் - இரவைப் படைத்த போதிலும் சூரியனில் பகலோ இரவோ கிடையாது. அதேபோல்தான் பரமாத்மாவும். ஆன்மா எல்லையற்றது, நித்தியமானது, அழிவற்றது.

No comments:

Post a Comment