À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
லூக்கா 1 அதிகாரம்
11. அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.12. சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.13. தூதன் அவனை நோக்கி: சகரியாவே,
பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப்
பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.14. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும்
உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.15. அவன் கர்த்தருக்கு
முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள்
தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.17. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும்,
கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு
ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே
நடப்பான் என்றான்.18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்;
நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.19. தேவதூதன்
அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே
பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; 27. தாவீதின்
வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு
தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.28. அவள் இருந்த வீட்டில்
தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே
நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.29. அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி,
இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.30. தேவதூதன் அவளை
நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.31. இதோ, நீ கர்ப்பவதியாகி
ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று
பேரிடுவாயாக.32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய
தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.33. அவர் யாக்கோபின்
குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.34.
அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.35. தேவதூதன்
அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல்
நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.36.
இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்;
மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.37. தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.38.
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது
என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.39. அந்நாட்களில் மரியாள்
எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,40. சகரியாவின்
வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.41. எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக்
கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால்
நிரப்பப்பட்டு,42. உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன்
கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில்
வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,44. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே,
என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.45. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே
அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.46. அப்பொழுது மரியாள்: என்
ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.48.
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும்
என்னைப் பாக்கியவதி என்பார்கள்.49. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்;
அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.50. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத்
தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.51. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில்
அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.52. பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை
உயர்த்தினார்.53. பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய்
அனுப்பிவிட்டார்.54. நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன்
சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,55. தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை
ஆதரித்தார் என்றாள். 58.
கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும்
பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள். 67. அவனுடைய
தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:68. இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்
பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:71.
உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம்
பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன்
என்று,72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,74.
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற
யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,75. தம்முடைய தாசனாகிய தாவீதின்
வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தி னார்.76. நீயோ பாலகனே, உன்னதமானவ ருடைய
தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,77. நமது தேவனுடைய
உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்,
அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.78. அந்தகாரத்திலும் மரண இருளிலும், உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு
வெளிச்சம் தரவும்,79. நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே
உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.80. அந்தப்
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும்
வனாந்தரங்களிலே இருந்தான்.
லூக்கா 2 அதிகாரம்
8.
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக்
காத்துக்கொண்டிருந்தார்கள்.9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து
நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.10.
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை
உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து
என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.12. பிள்ளையைத் துணிகளில்
சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.13.
அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு
மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத்
துதித்தார்கள்.15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள்
ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு
அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,16. தீவிரமாய்
வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.17.
கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.18.
மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.19.
மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.20. மேய்ப்பர்களும்
தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி,
துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 23. முதற்பேறான
எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில்
எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,24. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில்
சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச்
செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.25. அப்பொழுது சிமியோன் என்னும்
பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும்,
இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.26.
கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு
அறிவிக்கப்பட்டுமிருந்தது.27. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான்.
இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார்
அவரை உள்ளே கொண்டுவருகையில்,28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து:29.
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;30.
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,31.
தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள்
கண்டது என்றான்.33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும்
ஆச்சரியப்பட்டார்கள்.34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய
மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர்
விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப் போகும் என்றான். 40. பிள்ளை
வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல்
இருந்தது. 46.
மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும்,
அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.47. அவர் பேசக்கேட்ட
யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.48.
தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை
நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே
உன்னைத் தேடினோமே என்றாள்.49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில்
நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.50. தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை
அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.51. பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில்
சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம்
தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.52. இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும்,
மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
லூக்கா 3 அதிகாரம்
2.
அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின்
குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.3. அப்பொழுது: கர்த்தருக்கு வழியை
ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்றும்,4. பள்ளங்களெல்லாம்
நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும்,
கரடானவைகள் சமமாகும் என்றும்,5. மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள்
என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின்
ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய்,
பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.7.
அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி:
விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன்
யார்?8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன்
என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப்
பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.9. இப்பொழுதே
கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம்
வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.10. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால்
நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக:
இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே
செய்யக்கடவன் என்றான்.12. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள்
என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.13. அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு
அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள்
என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும்
பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.15.
யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள்
இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,16. யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால்
உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய
பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும், நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும்,
அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.17. தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது,
அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ
அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். 18. வேறு அநேக
புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.19. காற்பங்கு தேசாதிபதியாகிய
ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப்
பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,20. தான் செய்த மற்றெல்லாப்
பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்
பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;22.
பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து
ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று
உரைத்தது.23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று
எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.24. ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத்
லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின்
குமாரன்;25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின்
குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.26. நங்காய் மாகாத்தின்
குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின்
குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்;27. யோவன்னா ரேசாவின்
குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல்
நேரியின் குமாரன்.28. நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின்
குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.29.
யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்;
மாத்தாத் லேவியின் குமாரன்.30. லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்;
யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.31.
எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின்
குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.32. தாவீது, ஈசாயின்
குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்;
சல்மோன் நகசோனின் குமாரன்.33. நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்;
ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா
யாக்கோபின் குமாரன்.34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம்
தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.35. நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின்
குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.36.
சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்;
சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்;
மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்;
மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.38. ஏனோஸ் சேத்தின் குமாரன்;
சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
No comments:
Post a Comment