À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
மத்தேயு 24 அதிகாரம்
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
மத்தேயு 24 அதிகாரம்
1.
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்க
ளை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.2. இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம்
பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்
என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.3. பின்பு, அவர் ஒலிவமலையின் மேல்
உட்கார்ந்திருக் கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?
உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும்
என்றார்கள்.4. இயேசு அவர்களுக் குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்;5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே
கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும்
கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே;
ஆனாலும் முடிவு உடனே வராது.7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய்
ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சி களும் பல இடங்களில்
உண்டாகும்.8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.9. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு
ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும்
பகைக்கப்படுவீர்கள்.10. அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து,
ஒருவரையொருவர் பகைப்பார்கள்.11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.12.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே
இரட்சிக்கப்படுவான்.14. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்
சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.15. மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்
குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.
நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,16. யூதேயாவில் இருக்கிறவர்கள்
மலைகளுக்கு ஓடிப்போகக் கடவர்கள்.17. வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும்
எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.18. வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத்
திரும்பாதிருக்கக்கடவன்.19. அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும்
ஐயோ.20. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.21.
ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான
மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.22. அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால்,
ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.23.
அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும்
சொன்னால் நம்பாதேயுங்கள்.24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர் களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும்
அற்புதங்களையும் செய்வார்கள்.25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.26.
ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்;
இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார் களானால் நம்பாதிருங்கள்.27. மின்னல்
கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும்
இருக்கும்.28. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.29. அந்நாட்களின் உபத்திரவம்
முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள்
வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய
அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்
வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.31.
வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து
கூட்டிச்சேர்ப்பார்கள்.32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே
இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.33.
அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்
என்று அறியுங்கள்.34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.35. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ
ஒழிந்துபோவதில்லை.36. அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும்
அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.37. நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ,
அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.38. எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு
முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும்
குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,39. ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும்
உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.40. அப்பொழுது,
இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.41.
இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப் பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள்,
ஒருத்தி கைவிடப்படுவாள்.42. உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையி லே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால்
விழித்திருங்கள்.43. திருடன் இன்ன ஜாமத்தில் வருவா னென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால்,
அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.44. நீங்கள் நினையாத
நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமா யிருங்கள்.45. ஏற்றவேளையிலே
தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும்
விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?46. எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற
ஊழியக்காரனே பாக்கியவான்.47. தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக
வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.48. அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து:
என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,49. தன் உடன்வேலைக்காரரை
அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,50. அந்த ஊழியக்காரன்
நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,51. அவனைக் கடினமாய்த்
தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும்
உண்டாயிருக்கும்.
மத்தேயு 25 அதிகாரம்
1.
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்குஎதிர்கொண்டு
போகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும்,
ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை
எடுத்துக் கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.4. புத்தியுள்ளவர்கள் தங்கள்
தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.5. மணவாளன்
வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.6. நடுராத்திரியிலே:
இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.7.
அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.8.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள்,
எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக:
அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்
போய், உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது
மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்;
கதவும் அடைக்கப்பட்டது.11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத்
திறக்கவேண்டும் என்றார்கள்.12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால்
விழித்திருங்கள்.14. அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற
ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல்
இருக்கிறது.15. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில்
இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.16.
ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச்
சம்பாதித்தான்.17. அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.18.
ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து
வைத்தான்.19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில்
கணக்குக்கேட்டான்.20. அப்பொழுது ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து:
ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு ஐந்து
தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும்
உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மை யாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக
வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.22. இரண்டு தாலந்தை வாங்கினவனும்
வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு
இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும்
உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக
வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.24. ஒரு தாலந்தை வாங்கினவன்
வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான
கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.25. ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில்
புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.26. அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக:
பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும்,
தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.27. அப்படியானால், நீ என் பணத்தைக்
காசுக்காரர் வசத்தில் போட்டு வைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை
வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து,
பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.29. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்,
பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.30. பிரயோஜனமற்ற
ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும்
உண்டாயிருக்கும் என்றான்.31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல
பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.32.
அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படு வார்கள். மேய்ப்பனானவன்
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,33.
செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.34.
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற
ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;36.
வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை
விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.37. அப்பொழுது,
நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக்
கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய
தாகத்தைத் தீர்த்தோம்?38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்?
எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?39. எப்பொழுது
உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.40.
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்பார்.41. அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே,
என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களு க்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய
அக்கினியிலே போங்கள்.42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன்
நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;43. அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை;
வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும்
காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.44.
அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும்,
தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ள வராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும்
நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.45. அப்பொழுது அவர்
அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள்
எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்பார்.46. அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ
நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
மத்தேயு 26 அதிகாரம்
1.
இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:2. இரண்டு
நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில்
அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.3. அப்பொழுது, பிரதான ஆசாரியரும்
வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,4.
இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.5. ஆகிலும்
ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.6.
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்,7. ஒரு ஸ்திரீ
விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது,
அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.8. அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து:
இந்த வீண் செலவு என்னத்திற்கு?9. இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக்
கொடுக்கலாமே என்றார்கள்.10. இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை
ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.11. தரித்திரர்
எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.12. இவள்
இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.13.
இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக
இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.14. அப்பொழுது,
பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரி யோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:15.
நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்
என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.16. அதுமுதல்
அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.17. புளிப்பில்லாத
அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு
நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.18. அதற்கு
அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன்
வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச்
சொல்லுங்கள் என்றார்.19. இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.20.
சாயங்காலமான போது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.21. அவர்கள் போஜனம்பண்ணுகையில்,
அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார்.22. அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே நானோ,
நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.23. அவர் பிரதியுத்தரமாக: என்னோடே
கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.24. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து
எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ,
அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.25.
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ
சொன்னபடிதான் என்றார்.26. அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து,
அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய
சரீரமாயிருக்கிறது என்றார்.27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி,
அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;28. இது பாவமன்னிப்புண்டாகும்படி
அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக் குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.29.
இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்திலே
நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார்.30. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவ மலைக்குப் புறப்பட்டுப்
போனார்கள்.31. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள்
சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம்
இடறலடைவீர்கள்.32. ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயா
வுக்குப் போவேன் என்றார்.33. பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும்
இடறலடைந் தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான்.34. இயேசு அவனை நோக்கி: இந்த
இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று
மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.35. அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும்,
உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.36. அப்பொழுது,
இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே
போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;37. பேதுருவையும்,
செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும்
தொடங்கினார்.38. அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது;
நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;39. சற்று அப்புறம்போய்,
முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால்
நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது
என்று ஜெபம்பண்ணினார்.40. பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு,
பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?41. நீங்கள்
சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ
பலவீனமுள்ளது என்றார்.42. அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில்
நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி
ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.43. அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும், நித்திரைபண்ணுகிறதைக்
கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.44. அவர் மறுபடியும்
அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.45.
பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ,
மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது.46. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன்,
இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.47. அவர் இப்படிப் பேசுகையில்,
பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும்
அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.48.
அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள்
என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.49. உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து:
ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.50. இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக
வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு,
அவரைப் பிடித்தார்கள்.51. அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன்
பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.52. அப்பொழுது,
இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற
யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால்,
அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?54.
அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி
நிறைவேறும் என்றார்.55. அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது
போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
நான் தினந் தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்;
அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.56. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற
வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும்
அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.57. இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக்
கொண்டுபோனார் கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும்
கூடிவந்திருந்தார்கள்.58. பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய
அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.59.
பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு
விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்
சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்சாட்சிகள் வந்து:61.
தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும்
என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.62. அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து,
அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதி
ல்லையா என்றான்.63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி:
நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில்
உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.64. அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும்
மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல்
வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.65. அப்பொழுது
பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச்
சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.66. உங்களுக்கு
என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்
என்றார்கள்.67. அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர்
அவரைக் கன்னத்தில் அறைந்து:68. கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால்
எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.69. அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில்
உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக் காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய
இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள்.70. அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது
என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.71. அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது
வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடே கூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச்
சொன்னாள்.72. அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.73.
சற்று நேரத்திற்குபின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினி டத்தில் வந்து: மெய்யாகவே நீயும்
அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.74. அப்பொழுது அவன்:
அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே
சேவல் கூவிற்று.75. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று
தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே
போய், மனங்கசந்து அழுதான்.
No comments:
Post a Comment