À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø, ¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ ! §À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
யோவான் 16 அதிகாரம்
1.
நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.2. அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப்
புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவ னென்று
நினைக்குங் காலம் வரும்.3. அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச்
செய்வார்கள்.4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள்
நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியி ருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால்
ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப்
போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.6. ஆனாலும் நான்
இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.7.
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜ னமாயிருக்கும்;
நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு
அனுப்புவேன்.8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும்,
உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.9. அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும்,10.
நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக் குறித்தும்,11.
இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீ ர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து
உணர்த்துவார்.12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது,
அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல
சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள்
யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.14. அவர் என்னுடையதில்
எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.15. பிதாவினுடையவைகள்
யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.16.
நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள்,
மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.17. அப்பொழுது அவருடைய சீஷரில்
சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக் காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள்
என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின்
கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி;18. கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன?
அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.19. அதைக்குறித்துத்
தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே
என்னைக் காணாதிரு ப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று
நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?20. மெய்யாகவே மெய்யாகவே
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்;
நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.21. ஸ்திரீயானவளுக்குப்
பிரசவகாலம் வந்திருக்கும் போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில்
பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.22. அதுபோல நீங்களும்
இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது
உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப் போட மாட்டான்.23.
அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான்
உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ
அதை அவர் உங்களுக்குத் தருவார்.24. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை;
கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.25.
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய்
உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.26. அந்த
நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று
உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.27. நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து
புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக் கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக் கிறார்.28.
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு
பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.29. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது
நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.30. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்
என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கி றோம்;
இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.31. இயேசு
அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கி றீர்கள்.32. இதோ, நீங்கள்
சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்;
அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.33.
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச்
சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான்
உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
யோவான் 17 அதிகாரம்
1.
இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:2. பிதாவே, வேளை
வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு
மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை
மகிமைப் படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப் படுத்தும்.3. ஒன்றான மெய்த்தேவனாகிய
உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.4. பூமியிலே
நான் உம்மை மகிமைப் படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச்
செய்துமுடித்தேன்.5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த
மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.6. நீர் உலகத்தில்
தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள்
உம்முடைய வர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக்
கைக்கொண்டிருக்கிறார்கள்.7. நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயின வென்று
இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.8. நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக்
கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத் திலிருந்து புறப்பட்டுவந்தேன்
என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.9.
நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக் கொள்ளாமல், நீர் எனக்குத்
தந்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக் கிறார்களே.10.
என்னுடையவைகள் யாவும் உம்முடை யவைகள், உம்முடையவைகள் என்னுடை யவைகள்; அவர்களில் நான்
மகிமைப்பட்டிருக்கிறேன்,11. நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலி ருக்கிறார்கள்;
நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல
ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும்.12. நான்
அவர்களுடனே கூட உலகத்திலி ருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்;
நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத் தக்கதாக,
கேட்டின் மகன் கெட்டுப்போனா னேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போக வில்லை.13. இப்பொழுது
நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில்
இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.14. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்;
நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.15.
நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத்
தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.16. நான் உலகத்தா னல்லாததுபோல, அவர்களும்
உலகத்தாரல்ல.17. உம்முடைய சத்தியத்தி னாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே
சத்தியம்.18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.19.
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்த மாக்கப்பட்டவர்க ளாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே
பரிசுத்தமாக்குகிறேன்.20. நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய
வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுகிறேன்.21. அவர்களெல்லாரும்
ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர்
என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும்
வேண்டிக்கொள்ளுகிறேன்.22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர்
எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்க ளாயிருக்கும்படிக்கும்,
என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிரு க்கிறதையும்
உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.24.
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத்
தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ
அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை
அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக் கிறார்கள்.26.
நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலி ருக்கும்படிக்கும்,
உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
யோவான் 18 அதிகாரம்
5. அவருக்கு
அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு:
நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.6. நான்தான்
என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.7.
அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய
இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.8. இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச்
சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.9. நீர் எனக்குத்
தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறை வேறத்தக்கதாக
இப்படி நடந்தது.10. அப்பொழுது சீமோன் பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான
ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று
பெயர்.11. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக்
கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.12. அப்பொழுது போர்ச்சேவகரும்,
ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக்
கட்டி,20. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்;
ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்;
அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன?
நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே
என்றார்.22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு
இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.23. இயேசு அவனை நோக்கி:
நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில்,
என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.33. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து,
இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.34. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக:
நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ
என்றார்.35. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும்
உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.36. இயேசு பிரதியுத்தரமாக:
என் ராஜ்யம் இவ்வுலகத்திற் குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்கு ரியதானால் நான் யூதரிடத்தில்
ஒப்புக்கொடுக்கப் படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என்
ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால்
நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச்
சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும்
என் சத்தம் கேட்கிறான் என்றார்.
No comments:
Post a Comment