À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.யோவான் 1 அதிகாரம்
1.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.2.
அவர் ஆதியிலே தேவ னோடி ருந்தார்.3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும்
அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு
ஒளியாயிருந்தது.5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.6.
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7. அவன் தன்னால் எல்லாரும்
விசுவா சிக்கும் படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.8. அவன்
அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான்.9. உலகத்திலே
வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.10. அவர் உலகத்தில்
இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.11. அவர் தமக்குச்
சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.12. அவருடைய
நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை
பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.13. அவர்கள்,
இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே
பிறந்தவர்கள்.14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,
நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய
மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.15. யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்
பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று
நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.16. அவருடைய பரிபூரணத்தினால்
நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.17. எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின்
மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.18.
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே
அவரை வெளிப்படுத்தினார்.23. அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று
ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்
என்றான்.25. அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால்,
ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.26. யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே
நிற்கிறார்.27. அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின்
வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.28. இவைகள் யோர்தானுக்கு அக்கரையில்
யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன. 29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில்
வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30. எனக்குப்பின்
ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான்
சொன்னேனே, அவர் இவர்தான்.31. நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக,
நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.32. பின்னும் யோவான் சாட்சியாகச்
சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.33.
நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்;
ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்
கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய
குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.35. மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில்
இரண்டுபேரும் நிற்கும்போது,36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி
என்றான்.37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின் சென்றார்கள்.38.
இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு
அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே
என்று அர்த்தமாம்.41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனை க் கண்டு: மேசியாவைக் கண்டோம்
என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.42. பின்பு, அவனை இயேசுவி
னிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன்,
நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.45. பிலிப்பு
நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்க தரிசிகளும் எழுதியிருக்கிறவரைக்
கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.48. அதற்கு
நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை
அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.49.
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.50.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச்
சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.51. பின்னும்,
அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து
ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான்
2 அதிகாரம்
3.
திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம்
இல்லை என்றாள்.4. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும்
வரவில்லை என்றார்.5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ,
அதின்படி செய்யுங்கள் என்றாள்.7. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்பு
ங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.8. அவர் அவர்களை நோக்கி: நீங்கள்
இப்பொழுது மொண்டு, பந்திவிசாரி ப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள்
கொண்டுபோனார்கள்.9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத்
தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின
தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:10. எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக்
கொடுத்து, ஜனங்கள் திருப்திய டைந்த பின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல
ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.11. இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக்
கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள்
அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை
விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,15. கயிற்றினால் ஒரு
சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு,
காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,16. புறாவிற்கிறவர்
களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை
வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை
இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.20. அப்பொழுது யூதர்கள்:
இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்பு
வீரோ என்றார்கள்.21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.22. அவர்
இப்படிச் சொன்னதை அவர் மரித் தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து,
வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித் தார்கள்.23. பஸ்காபண்டிகையிலே
அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடையநாமத்தில்
விசுவாசம் வைத்தார்கள்.
யோவான் 3 அதிகாரம்
2.
அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர்
என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற
இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.3. இயேசு அவனுக்குப்பிரதியுத்தரமாக:
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே
மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில்
எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ
என்றான்.5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினா லும் ஆவியினாலும் பிறவாவிட்டால்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.6.
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.7.
நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.8.
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும்
அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத்
தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.9. அதற்கு நிக்கொதேமு:
இவைகள் எப்படி ஆகும் என்றான்.10. இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும்
இவைகளை அறியாமலிருக்கிறாயா?11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள்
அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கி றோம், நீங்களோ
எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.12. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச்
சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால்
எப்படி விசுவாசிப்பீர்கள்?13. பரலோகத்திலிருந்திறங்கின வரும் பரலோகத்திலிருக்கிறவருமான
மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.14. சர்ப்பமானது மோசே யினால்
வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ
அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.16. தேவன்,
தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை
அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.17. உலகத் தை
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே
உலகம் இரட்சிக்கப்படுவதற் காகவே அவரை அனுப்பினார்.18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவ னாயிராதபடியினால்,
அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய
கிரியைகள் பொல்லாதவை களாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே
அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப்
பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப் படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.21.
சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள் ளாய்ச் செய்யப்படுகிறதென்று
வெளியாகும் படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலி
ருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.28.
நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே
சாட்சிகள்.29. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாள னுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய
சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப் படுகிறான்;
இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.30. அவர் பெருகவும் நான் சிறுகவும்
வேண்டும்.31. உன்ன தத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன்
பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத் தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து
வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.32. தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்;
அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.33. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறவன்
தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப் படுத்துகிறான்.34. தேவனால் அனுப்பப்பட்டவர்
தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.35.
பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.36.
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடைய வனாயிருக்கிறான்; குமாரனை
விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.
No comments:
Post a Comment