Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 26 August 2016

மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? 🌿 சுவாமி விவேகானந்தர்


🌿 மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன🌿 சுவாமி  விவேகானந்தர் 🌿🌿 ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒன்று மேல்கிளையிலும் மற்றொன்று கீழ்க் கிளையிலும் அமர்ந்துள்ளன. மேல்கிளைப் பறவை அமைதியாக சாந்தமாக, கம்பீரமாக தனது மகிமையில் தானே மூழ்கி இருக்கிறது. கீழ்க்கிளைப் பறவை கிளைக்கு கிளை தாவி பறந்து இனிப்பும் கசப்புமான பழங் களை மாறிமாறி உண்டு இன்பத்தையும் துன்பத்தையும் மாறிமாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறது .சில காலத்திற்குபிறகு அது மிகவும் கசப்பான ஒரு பழத்தைத் தின்ன நேர்கிறது, அதனால் வெறுப்புற்று மேலே உள்ள மற்ற பறவையைப் பார்க்கிறது. அந்தப் பறவையின் சிறகுகள் தங்கமயமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. அது இனிப்புப் பழங்களையும் சாப்பிடுவதி ல்லை,கசப்பு பழங்களையும் சாப்பிடுவதில்லை; அதற்கு இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. அது அமைதியாக தனக்குள் மூழ்கி இருக்கிறது தன்னைத் தவிர வேறு எதையும் அது காண்பதில்லை.கீழ்க்கி ளைப் பறவை இந்த நிலைக்கு ஏங்குகிறது. ஆனால் சீக்கிரமே இதை மறந்து மறுபடியும் இனிப்பு பழங்களைச் சாப்பிட ஆரம்பிக்கிறது. சிறிதுகாலம் கழிகிறது. விஷமாகக் கசக்கின்ற ஒரு பழத்தை மறுபடியும் தின்கிறது வெறுப்படைந்து மேலே பார்க்கிறது, மேல்கிளைப் பறவையின் நிலையைக் அடைய முயல்கிறது.மறுபடியும் அதை மறக்கிறது, பழைய விஷயங்களில் ஈடுபடுகிறது மறுபடியும் மேலே பார்க்கிறது. இவ்வாறே நடந்து கொண்டிருக்கிறது. கடைசியில் மேல்கிளைப் பறவைக்கு மிக அருகில் சென்றுவிடுகிறது. அதன் சிறகொளி பிரதிபலித்து தன்மீது தழுவிச் செல்வதைக் காண்கிறது.அப்போது கீழ்க்கிளைப் பறவை ஒரு மாற்றத்தை உணர்கிறது. தான் கரைந்து மறைந்து விடுவதை போல் அதற்குத் தோன்றுகிறது. அது இன்னும் பக்கத்தில் போகிறது. அப்போது முழுவதும் கரைகிறது, இறுதியில் இந்த அற்புதமான மாற்றத்தைப் புரிந்து கொள்கிறது. மேல்கிளைப் பறவையின் அதே தோற்றம் கொண்ட நிழலே, அதன் பிரதிபலிப்பே கீழ்க்கிளைப் பறவை அடிப்படையில் எப்போதுமே அது மேல்கிளைப் பறவையாகவேதான் இருந்து வந்திருக்கிறது.கீழ்க்கிளையின் அந்தச் சின்னப்பறவை இனிப்புகசப்புப் பழங்களைச் சாப்பி ட்டதும் மாறிமாறி இன்ப துன்பங்களை அனுபவித்ததும் எல்லாம் வெறும் கற்பனை, வெறும் கனவு உண்மையான பறவை மேல் கிளையில் எப்போதுமே அமைதியாக சாந்தமாக கம்பீரமாக மகிமை மிக்கதாக கவலைகளுக்கு அப்பாற்பட்டதாக, துன்பங்களுக்கு அப்பாற் பட்டதாக இருந்திரு க்கிறது, மேல் பறவைதான் பரமாத்மா , பிரபஞ்சத்தின் தலைவன் ; கீழ்ப்பறவை ஜீவாத்மா மனிதன் அவன்தான் இந்த உலகின் இனிப்புகசப்புப் பழங்களைத் தின்று கொண்டிருக்கிறான். அவனுக்கு அவ்வப்போது ஒரு பலத்த அடி விழுகிறது. சிறிது நேரத்திற்குப் பழங்களைத் தின்பதை விட்டுவிட்டு அறியாத கடவுளை நாடுகிறான். அப்போது வருகிறது ஒளிவெள்ளம். இந்த உலகம் வெறும் பகட்டுக் காட்சி என்பதை அவன் உணர்கிறான் ஆனால் மறுபடியும் புலன்கள் அவனைக் கீழே இழுக்கின்றன. மறுபடியும் அவன் உலகின் இனிப்பு கசப்புப் பழங்களை முன்போலவே தின்னத் தொடங் குகிறான் மீண்டும் வருகிறது ஒரு பேரிடி. அவனது இதயம் திறக்கிறது, தெய்வீக பேரொளி அங்கே நிறைகிறது .இவ்வாறு அவன் மெள்ளமெள்ள இறைவ னை நெருங்குகிறான். நெருங்க நெருங்க பழைய அவன் கரையத் தொடங்குகிறான் . போதிய அளவு அருகில் வரும்போது தானே அந்த இறைவன் என்பதை உணர்கிறான் .பிரபஞ்சத்தின் உயிர் என்றும் அணுவிலும் சூரியர்களிலும் சந்திரர்களிலும் இருப்பவன் நானே என்றும் . அவர் நமது அந்தராத்மா இன்னும் சொல்லப்போனால் நீயே அது என்று முழங்குகிறான்.நானே பரமாத்மா என்பதை உணர்கிறான் 🌿 மனிதன் அடிப்படையில் தெய்வீகமானவன். நாம் ஒவ்வொருவருமே பூமியில் பிறந்துள்ள கடவுள்தான் . நம் காலின் கீழ் ஊர்ந்து செல்லும் சாதாரணமான புழு முதல் பயபக்தி யோடும் ஆச்சரியத்தோடும் நாம் போற்றுகின்ற தெய்வங்கள் வரை எல்லோரும் ஒரு இறைவனின் வெளிப்பாடுகளே.🌿 சுவாமி விவேகானந்தர் 🌿

No comments:

Post a Comment