- உள் முக பயணம்
- உனக்குள் ஒருவன் (சாட்சி):
- நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது உங்களுக்குள்ளே கவனித்துப் பாருங்கள்.
- அங்கே நடக்காமலும் ஒருவன் இருக்கிறான்.
- நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் கை கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. உஙகளுக்குள்ளே சிறிதளவுகூட நடக்காமல் நீங்கள் நடப்பதை பார்த்து கொண்டு மட்டுமே இருக்கும் ஒரு தத்துவமும் இருக்கிறது.
- கை கால்களில் அடிபட்டால் விழிப்புடன் உள்ளே நோக்குங்கள்.
- அடி உங்களுக்குப் பட்டிருக்கிறதா அல்லது உங்கள் உடலுக்கு பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்.
- உடலில் எங்கே எந்த வேதனை ஏற்பட்டாலும் விழிப்புடன் வேதனை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா அல்லது நீங்கள் வேதனையை
- அறிபவராக சாட்சியாக இருக்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள்.
- பசிக்கும்போது முழு நினைவுடன் பசி உங்களுக்கு எடுக்கிறதா அல்லது உடலுக்கு எடுத்து நீங்கள் அதை அறிபவராக மட்டும் இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.
- சந்தோஷம் எதுவும் ஏற்பட்டால் அதையும் நன்கு கவனித்து, சந்தோஷம் எங்கே ஏற்பட்டது என்பதை அனுபவமடையுங்கள்.
- வாழ்க்கையில் எழுவதும், அமருவதும், உறங்குவதும், விழிப்பதும் ஆகிய எந்தச் சம்பவமானாலும் அவை அனைத்திலும் ஒரு முழு நினைவுடன் 'சம்பவம்' எங்கே நடைபெறுகிறது....??? எனக்கா அல்லது நான் சாட்சி மட்டுமா....??? என்பதை அறியும் முயற்சியை நிரந்தரமாக செய்வது விவேகம்.
- நமது ஒன்றி விடும் நிலை மிக ஆழமானது. ஒரு சினிமா பார்த்தாலும், நாடகம் பார்த்தாலும்கூட அதில் வரும் சோகக் கட்டங்களில் கண்ணீர் வடிக்கிறோம். சேர்ந்து நகைக்கிறோம்.
- மற்றவர் பார்த்து விடக்கூடாதே என்று திருட்டுத் தனமாகக் கண்களை துடைத்து கொள்கிறோம்.
- ஒரு படத்தை பார்த்துவிட்டு நாம் அழுதால் படத்தின் எவருடனாவது நாம் இணைந்துவிட்டோம்.
- அவருக்கு வேதனை ஏற்பட்டிருக்கும். அந்த வேதனை உங்கள்வரை
- தொத்திக் கொண்டு நீங்களும் அழத் துவங்கி விடுகிறீர்கள்.
- ஒவ்வொரு நிமிடமும் உங்களையும், உங்களை சுற்றி உள்ளவைகளையும் கவனித்துக் கொண்டே இருந்தால் ஒரு உண்மை தெரியவரும்.
- அது என்னவென்றால், " நீங்கள் இந்த உடல் அல்ல, மனமும் அல்ல. இந்த உலகை பார்வையிட வந்த ஒரு பார்வையாளன்; வெறும் சாட்சி மட்டுமே. செய்பவன் அல்ல"....!!!
- ~ ஓஷோ ~
இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! பழமையான அரிய தகவல்களை உலகரிய செய்வதே எமது நோக்கமாகும்.. நலம் கருதி வெளியிடுகிறோம். LOVER OF MY SOUL ,BODY & MY LIFE --- யெகோவா , யாகவா , இநன்யா
Kadamai Quote
Friday, 26 August 2016
உனக்குள் ஒருவன் (சாட்சி):
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment