- "விதி என்பது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?"
- 'சட்ட திட்டங்கள், ஒரு செயல் குறித்த வரையறை, rules and regulations'
- இவைகளையும்;
- ஒரு சினிமாவை எடுத்து முடித்து தியேட்டருக்கு வந்தாயிற்று.
- அந்த சினிமாவை தயாரித்தவர்களுக்குத் தெரியும் முழுக்கதையும்.
- "இந்த முழுக்கதை, குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டுவிட்டது"
- படம் பாரக்கும் நமக்கு, கதை முதலில் இருந்து ஆரம்பமாகும். கதை போகும் விதமோ, திருப்பங்களோ, கதையின் முடிவோ நாம் பார்க்க பார்க்கத்தான் புரியும்.
- பிடிக்கிறதோ இல்லையோ, நம்மால் அந்த கதையைாே, அது சார்ந்த இசை, டான்ஸ், பாடல், ஆடல், காமெடி, டிராஜெடி, இப்படி எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்துதான் ஆக வேண்டும்.
- இந்த சினிமாதான் வாழ்கை என்று வைத்துக்கொள்வோம்.
- *தயாரித்தவர் கடவுள்*
- *ஆடியன்ஸ் நாம்*
- சினிமாவின் கதாநாயகனைச் சுற்றித்தான் கதையிருக்கும்.
- அந்த கதாநாயகனாக நாம் படம் பார்க்கும் போது மாறிவிடுவோம்.
- கதாநாயகனுக்கு வில்லன் நமக்கும் வில்லன்தான்.
- கதாநாயகன் காதலி நமக்கும் காதலிதான்.
- (இப்படி ஒரு படத்தில் கதாநாயக ரோலோடு மக்களை சரியாக ஒன்ற வைப்பவரே, சிறந்த டைரக்டர்)
- கதாநாயகன் சிரித்தால், நாமும் சிரிப்போம்.
- கதா நாயகன் சோகமானால் நாமும் சோகமாகிவிடுவோம்.
- (குறிப்பு:-
- படம் பாரக்க வரச்சொல்லி நம்மை யாரும் வற்புறுத்தவில்லை. நாம்தான் அதை பார்த்து அனுபிக்க ஒரு விலை கொடுத்திருக்கிறோம்.)
- "அதே போல் ஏற்கனவே 'கடவுள்' இந்த வாழ்கையை தாயாரித்து முடிச்சாச்சு'
- நாம் அதை பாரக்க வந்திருக்கும் பார்வையாளனே.
- "சாட்சிபூர்வமாக படம் பார்த்து முடிக்க வேண்டும்."
- கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடக் கூடாது.
- அப்படி ஒன்றிவிட்டால், கதை உன்னுடையதாகிவிடும்.
- அப்புறம் கதையின் இன்ப துன்பத்திற்கு இலக்காகி விடுவோம்.
- ஒரே சோகமாகி, ஐயோ எனக்கு இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலையே கிடையாதா? என அழுவோம்.
- அப்புறம், நமக்கு அதிர்ஸ்டமிருந்தால், "பகவான் ஓஷோ" வந்து,
- "நீ இந்த படத்தின் பாத்திரமல்ல, பாத்திரங்களை பார்வையிட வந்த பார்வையாளன்தான், அப்படீன்னு நம் தலையில் ஒரு குட்டு கொட்டி,
- நம் கையை பிடித்து, நம்மை தியேட்டருக்கு வெளியே கொண்டு வந்து விடுவார்.
- இனிமேல் சினிமாக்கு போனால் "சாட்சிபூர்வமாக படத்தைப் பார், அதனுடன் ஒன்றிவிடாதே" என்பார்.
- நாமும் சரி சரின்னு தலையை ஆட்டிட்டு, அப்புறம் அதை மறந்துவிட்டு, அடுத்த படம் பார்க்க போய்விடுவோம். ஆக,
- கடவுள் வகுத்த விதி படம் போன்றது.
- பாரக்கும் போது பிடிக்கலைன்னா, பாதியிலேயே வெளியே வந்துறலாம்.
- இச்செயல், வாழ்கை முடியும் முன்பே தற்கொலை செய்பவர்களுக்குச் சமம்.
- அடுத்த படத்திற்கு போவது, அடுத்த பிறவி ஆகும்.
- கதாநாயகனும், கதையும் வேறதான்.
- ஆனால் அதுவும் சினிமா என்ற 'வாழ்கைதான்'.
- "பகவான் ஓஷோவால் நம் விதியை மாற்ற முடிகிறது. அதை நாம் கேட்டு, திரும்ப அடுத்த படத்துக்கு போகாமல் இருந்தால்,
- உங்களைப் பொறுத்த வரை "விதி வெல்லப் பட்டதுதான்"
- ஆனால், தியேட்டரும், சினிமாவும் எப்போதும் போல் இருக்கும்.
- அது , அதை விரும்புபவர்களுக்கும், ரசிப்பவர்களுக்கும் வேண்டுமல்லவா! ஆக,
- விதி என்பது, ஏற்கனவே உருவாக்கப்பட்ட சினிமாவை போன்றதுதான்.
- கதையையோ, கதாபாத்திரங்களையோ மாற்றவே முடியாது.
- இதுவே 'விதியை வெல்ல முடியாது என்பது.'
- *எப்போதுமே, சினிமாவை போன்ற இந்த வாழ்கைக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை*
- *நாமே வலியச் சென்று அதில் பந்தப்பட்டு விட்டோம், என உணர்வதே "ஞானமாகும்".
- பகவான் ஓஷோ போன்றவர்கள்,
- இந்த சினிமாவைப் போன்ற, போலி வாழ்க்கையை,
- *நமது விழிப்புணர்வுக்கு கொண்டு வந்து புரிய வைத்து, விதிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிய வைக்கிறார்கள்*
- இந்த செயல் விதியை வென்ற செயலிலலை. விதி-சினிமா,
- அது ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கும்.இதுவே விதியை வெல்ல முடியாது என்பதாகும்.
- முடவு:- "நாம் எப்போதுமே இந்த வாழ்கையில் இல்லை, என்பதே"
- இந்த வாழ்கை என்பது மாயை. நாம் அதற்குள் சென்றால், அதற்கென உள்ள சட்டதிட்டங்கள், நம்மை பாதிக்கும். அதுவே *விதியாம்*
- "ௐ தத் சத் ௐ"
இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! பழமையான அரிய தகவல்களை உலகரிய செய்வதே எமது நோக்கமாகும்.. நலம் கருதி வெளியிடுகிறோம். LOVER OF MY SOUL ,BODY & MY LIFE --- யெகோவா , யாகவா , இநன்யா
Kadamai Quote
Friday, 26 August 2016
"விதி என்பது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment