சித்தர் ஆவது எப்படி ? பகுதி ஒன்று :--
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
சித்தர் என்பவர் யார்?
இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது.... சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார் கள்....சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை... மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர் கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை.. இறைவன் என்ற ஒரு உயர் நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ? இறைவனால் சாதிக் காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?.. சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என் றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ? இன்று என்ன உண்மை யோ அப்படிதானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரு ம் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காணவில்லை என்ற பொருளாகி விடுமா?இது போ ன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை.. மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. நம் பஞ்ச பூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக்கூடியதும்,அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக் கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்.. இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படு த்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடையமுடியும்.. மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறை யை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்.. அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர் கள்... மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப்படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது... அத னால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ? சித்தர்கள் அடைந்ததாக கருதப்படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்.. மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்ப வனே சித்தன்.. மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண் டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்யவேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய் யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக் கூடாது .. உல கின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்பவேண்டும் .. உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே.. எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது.. அதுவே எல்லாவ ற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்.. இதனை தேகத் தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு... எப்படியோ உண் மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது.இப்படி தப்பி க்கா மல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப்படுவதுதான் சித்தர் வழி.. சித்தத்தை சீர் செய் யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக... ஆற்றல் பெருகுவதற்கு சித்தத் தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது.. அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment