மனோசக்தியே மந்திரசக்தி.
- மனோசக்தியே மந்திரசக்தி.
- **************************** Kumar Esan
- எப்படி நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும்,
- சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன்
- வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.
- அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை.
- அந்த முக்கியமான விஷயம்தான் தியானம்.
- இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள்
- இருக்கின்றன.
- ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும்
- காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல்
- அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை
- எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி
- செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.
- பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை
- சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது.
- பூதக் கண்ணாடி சூரிய சக்தியை
- ஒருமுகப்படுத்துகிறது ஒருமுகப்படுத்தும்போது சக்தி
- அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.
- இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும்
- மார்க்கங்களைத்தான் 'ஜெபம்' என்றும் 'தியானம்'
- என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள்
- எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை
- இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.
- எந்த எண்ணமும்
- மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான்
- இரகசியமாகச் சொல்வதன் காரணம்.
- மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?ஆழ்மனம்
- திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர
- சக்தி உதவத் தயாராயிருக்கிறது.
- "வழிகாட்டு" என்று முறையிட்டோமானால்
- நமக்கு வழிகாட்டும்.
- திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன.
- ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம்
- நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.
- முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு
- நாளும், ஒவ்வொரு வகையிலும?் முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள்
- திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம்
- அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது
- இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
- இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும்
- பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில்
- ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால்
- முயற்சிகள் வெற்றியடைகின்றன.
- ஜெபம், தியானம் (திக்ரு)மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு
- அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.
- சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து
- பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்;
- வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும்.
- இதுவே இத்தனை நாள்அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது.
- ஆழ்மனம் என்பது நம்மில் உள்ள மிகப்பெரிய சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம்
- எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும். இதன்
- முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும்.இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள்
- உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் energy. இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக்
- சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
- ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர
- வேண்டும். இதன் முலம் மிக எளிய முறையில் லட்சியகளை நிறைவேற்ற முடியும்.
- லட்சியகள் மாட்டும் அல்ல நாம் நோய்களையும் குணப்டுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ்மனதுடனும் உரையாடமுடியும்.
- வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்
- ******************************************
- பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை.
- ஏனெனில் நம் பூமி எவ்வித
- பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா?
- அல்லது வாழப்பிறந்தோமா? என்று.
- நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம்
- செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும்,
- நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும்.
- மாற்றங்களை விரும்பாத எவரும்
- மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த
- உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.
- ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான்
- ஆகவேண்டும்.
- சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு
- கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத்
- தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்
- தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.
- ஆனால், “பூமி சுற்றுவதை உணர
- முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம்
- ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”
- சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால்
- எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த
- சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?
- சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த
- பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும்
- சக்தியை அனுதினமும் கொடுத்துக்
- கொண்டிருக்கிறது.
- பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக
- அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம்
- ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம்
- எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.
- கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி.
- இந்த பூமியை இயக்கிக்கொண்டிர
- ுப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம்
- கொடுக்கிறது.
- இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும்,
- ஒவ்வொரு நொடியும் அளப்பரிய
- சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
- ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.
- “உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த
- உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய
- முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம்
- வாழ்ந்த நாட் களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.
- இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும்
- பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!
- ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?
- இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும்
- சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.
- நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
- நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே
- ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம்
- கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம்
- ஆழ்மனம்.
- நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த
- எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பதுதான்.
- ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது?
- என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.
- எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான்
- ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.
No comments:
Post a Comment