Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 26 August 2016

விதி என்பது என்ன ? அது இறைவனால் வகுக்கப்பட்டதா ?”

விதி என்பது என்ன ? அது இறைவனால் வகுக்கப்பட்டதா ?”தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்பது ஆன்றோர் வாக்கு. நேற்றைய செயல் இன்றைய விதி. இன்றைய செயல் நாளைய விதி. ஒருவர் விழிப்புப் தன்மையில் இருந்தால் தெளிவு ஏற்பட்டு மதி விதியாகும். மயக்கத்தில் இருந்தால் அறியாமை உண்டாகி விதி மதி ஆகிவிடும்.இறைவனுக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்போ வெறுப்போ கிடையாது. இறை ஆற்றல் மின்சாரத்தைப் போன்றது. எப்படி பயன்படுத்துகிறோமோ அப்படியே பலன்களைத் தரவல்லது. மின்சாரத்தை கற்றாடியில் பயன்படுத்தினால் காற்றாடி சுற்றும். விளக்குக்குப் பயன்படுத்துனால் விளக்கு ஒளி தரும்.அது போல இறை ஆற்றலும் உயிர்களின் எண்ணம், சொல், செயல்களுக்குத் தகுந்தாற்போல் விளைவுகளைக் கொடுக்கின்றது.நமது உடல் பரு உடல், நுண் உடல், காரண உடல் என மூன்று வகையாக உள்ளது. இவ் மூன்று உடல்களைத் தாண்டி உள்ளே ஆன்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.இவற்றில் காரண உடல் என்பது விமானத்தில் உள்ள கறுப்புப் பெட்டியைப் போன்றதாகும். விமானத்தில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் கறுப்புப் பெட்டியில் பதிவு ஆவதைப் போல நனவினில், கனவினில் நடைபெறும் எல்லாச் செயல்களுமே காரண உடலில் பதிவாகிறது.எண்ணத்தின் திண்மை சொல்லாக மாறுகிறது, சொல்லின் திண்மை செயலாக மாறுகிறது. எத்தனையோ எண்ணங்களை எண்ணினாலும் அவற்றில் திண்மையான எண்ணங்களே சொல்லாக மாறுகிறது. அதே போல் திண்மையான சொற்களே செயல் வினையாக மாறுகிறது.செயல் வினைகள் பிரார்த்த வினை, சஞ்சித வினை, ஆகாமிய வினை என மூன்று வகைப்படும்.ஒருவர் நேற்று நூறு ரூபாய் சம்பாதித்ததை வினைப் பதிவாகக் கொள்ளலாம். அந்த நூறு ரூபாயில் ஐம்பது ரூபாயை இன்று வெளியில் முதலீடு செய்வது பிரார்த்த வினை. மீதி உள்ள ஐம்பது ரூபாயைப் போன்றது சஞ்சித வினை. முதலீடு செய்த பணத்தில் சம்பாதிக்கும் கூடுதல் பணத்தைப் போன்றது ஆகாமிய வினை.இந்த வினைப்பதிவுகளே நல்வினை, தீவினைகளாக மாறி இன்ப துன்பங்களைக் கொடுத்து உயிர்களை பிறவி என்னும் சக்கரத்தில் சுழற்றுகிறது. இறைவன் உயிர்களின் ஆன்மாவினுள் உள்ளொளியாக இருந்து வினைப்பதிவுகளுக்கு ஏற்ப விளைவுகளைத் தந்து கொண்டிருக்கிறான்.”எனக்கு நினைவு தெரிந்த வரை யாருக்கும் தீங்கு நினைத்தது இல்லை, தீமை செய்தது இல்லை, எனக்கு மட்டும் ஏன் துன்பங்களும் துயரங்களும் வந்து கொண்டே இருக்கிறது…?!”, என்று பலரும் புலம்பிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் தங்கள் முந்தைய பிறவியின் வினைப் பதிவுகளைத் தற்சமயம் அனுபவித்து வருகின்றனர் என்பதே உண்மை.போன பிறவி என்று ஒன்று இருந்தால், அதில் நடந்த ஒன்றும் இப்போது நினைவில் இல்லையே என்று சிலர் கேட்கிறார்கள். சிறு குழந்தைப் பருவத்தில் நடந்த பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருவதில்லை. அப்படி இருக்கும் போது, அதற்கு முன்னர் வாழ்ந்த முற்பிறவி நிகழ்வுகளை எவ்வாறு சிற்றறிவைக் கொண்டு அறிந்து கொள்ளுதல் கூடும் !சில நேரங்களில் சிலருக்கு புதிய இடங்களுக்கு செல்லும் போது அந்த இடம் ஏற்கனவே பழகிய இடம்போலத் தோன்றும். புதிய நபர்கள் பரிச்சயமானவர்களாகத் தெரிவர். இவை எல்லாம் கடந்த பிறவிகளின் எச்சங்களே ஆகும்.மனிதன் உடைமாற்றுவதைப் போலவே,உயிர்கள் வினைகளுக்கு தகுந்தார்போல் உடல்களைப் பெற்று இறப்பை யும் பிறப்பையும் மாறீ மாறீ அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதில் இன்ப துன்பங்களும் மாறி மாறி தொடர்ந்து வருகிறது. இவ்விதம் வினைகளின் வெம்மையால் வெதும்பி நிற்கும் உயிர்கள் பிறவிச் சக்கரத்தின் சுழற்சியிலிருந்து எங்ஙனம் விடுபடுவது ? அதாவது, விதியை வெல்ல முடியுமா ?முடியும் . நிச்சயமாக முடியும்.அதற்கு முதலில், புண்ணிய பலத்தினால் எறத்தாழ 84 லட்சம் தேக பேதம் உள்ள ஜீவராசிகளில் உன்னத பிறப்பாகிய மானிட குலத்தில் பிறந்து இருக்கவேண்டும். அடுத்து அப் பிறப்பில் நல்லோர்களை நாடி ஞான சத்குருவினை அடையவேண்டும். ஞானகுருவின் அருளால் தன்னை உணர்ந்து தனக்குள் இறைவனை உணர்ந்து, இறைவனோடு இறைவனாக கலக்க வேண்டும்.ஞானகுரு தீட்சை வழங்கும் போது காரண உடலாகிய இருள் தேகத்தில் ஞானஜோதியை ஏற்றுகிறார். இதனால் காரண உடலில் பதிந்துள்ள எண்ணப் பதிவுகளாகிய வினைகளின் வித்துக்கள் அழிகின்றன.ஞான குருவின் அருளால் இறைத் தன்மையோடு இரண்டறக் கலப்பதால் வினைகளின் வெம்மையைக் கடந்து இறப்பு பிறப்பு அவஸ்தைகளைக் கடந்து நித்தியமாக வாழலாம். விதியை வென்று நினைத்ததை நினத்தபடி செய்து முடித்து வெற்றிகரமாக வாழலாம்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment