90. பெரியாரைப் பிழையாமை
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
போற்றுவார்
போற்றலுள் எல்லாம்
தலை
மு.வ உரை:
மேற்கொண்ட செயலைச்
செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும்
சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
எடுத்துக் கொண்ட செயல்களை
இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர்
செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
கலைஞர் உரை:
ஒரு செயலைச் செய்து
முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும்
விடச் சிறந்த காவலாக அமையும்
குறள் 892:
பெரியாரைப் பேணா தொழுகிற்
பெரியாராற்
பேரா இடும்பை தரும்
மு.வ உரை:
ஆற்றல் மிகுந்த பெரியாரை
விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்களை மதிக்காமல்
நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
கலைஞர் உரை:
பெரியோர்களை மதிக்காமல்
நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்
குறள் 893:
கெடல்வேண்டிற் கேளாது
செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
மு.வ உரை:
அழிக்க வேண்டுமானால்
அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச்
செய்யலாம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தான் அழிய எண்ணினால்
பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும்
வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.
கலைஞர் உரை:
ஒருவன், தன்னைத்தானே
கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை
யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்
குறள் 894:
கூற்றத்தைக் கையால்
விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்
மு.வ உரை:
ஆற்றல் உடையவர்க்கு
ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு, செல்வம், படை
ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக்
கைநீட்டி அழைப்பதைப் போன்றது.
கலைஞர் உரை:
எந்தத் துன்பத்தையும்
தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால்
அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்
குறள் 895:
யாண்டுச்சென் றியாண்டும்
உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
மு.வ உரை:
மிக்க வலிமை உள்ள அரசனால்
வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்க்குக் கடும்
வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும்
எங்கும் வாழ முடியாது.
கலைஞர் உரை:
மிக்க வலிமை பொருந்திய
அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ
முடியாது
குறள் 896:
எரியாற் சுடப்படினும்
உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு
வார்
மு.வ உரை:
தீயால் சுடப்பட்டாலும்
ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து
நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தீயால் சுடப்பட்டாலும்
பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.
கலைஞர் உரை:
நெருப்புச் சூழ்ந்து
சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம்
தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது
குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும்
வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
மு.வ உரை:
தகுதியால் சிறப்புற்ற
பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும்
இருந்தும் என்ன பயன்.
சாலமன் பாப்பையா உரை:
குணங்களால் சிறந்த
பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும்
எதற்கு ஆகும்?
கலைஞர் உரை:
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு
என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின்
கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்
குறள் 898:
குன்றன்னார் குன்ற
மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர்
நிலத்து
மு.வ உரை:
மலை போன்ற பெரியவர்
கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.
சாலமன் பாப்பையா உரை:
மலை ஒத்த ஆற்றல் உடைய
பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று
வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.
கலைஞர் உரை:
மலை போன்றவர்களின்
பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும்
அடியோடு அழிந்து போய் விடுவார்கள்
குறள் 899:
ஏந்திய கொள்கையார்
சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
மு.வ உரை:
உயர்ந்த கொள்கையுடைய
பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்த கொள்கையை உடைய
பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து
கெடுவான்.
கலைஞர் உரை:
உயர்ந்த கொள்கை உறுதி
கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்
குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர்
ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார்
செறின்
மு.வ உரை:
மிகச் சிறப்பாக அமைந்த
பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க
முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
மிகச் சிறந்த சீர்களை
உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.
கலைஞர் உரை:
என்னதான் எல்லையற்ற
வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின்
சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது
No comments:
Post a Comment