Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 20 September 2016

ஆன்மாவானது யாது? உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே அப்படி நமது உடலை விட்டு என்ன பிரிந்த்து? - திருமூலர்

ஆன்மாவானது யாது? உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே அப்படி நமது
உடலை விட்டு என்ன பிரிந்த்து? - திருமூலர்

நமது உடலில் இருந்து விந்துவாக கருவுக்குள் சென்று எது உயிரானதோ அதுவே நமது உடலில் இருந்து பிரிந்துவிட்டால் பிண்டமாக கருதப்படுகிறது (இறப்பு).
“ஆக்குகின்றான் முன்பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் காப்பக்கோளகை யுளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே” (தி.ம 451)
பொருள்:
-------------
இறைவன் நமது இறப்பின் போது பிரித்த இருப்பத்தைந்து தத்துவங்களையும் தோற்றுவிக்கிறார்.
பிரிந்த 25 தத்துவங்களையும் விந்துவின் வாயிலாக அன்னையின் கருப்பையில் சேர்த்து உயிர் கொடுக்கிறார். அவர் உடல் வளர்ச்சிக்கு தேவையானவற்றை அறிந்தே படைக்கிறார்.
25 தத்துவங்கள்:
-----------------------
பஞ்ச பூதம்(5) : பிருதிவி - (பூமி - நிலம் - மண்), அப்பு - (ஜலம் - நீர் - புனல்), தேயு - (அக்னி - நெருப்பு - அனல்), வாயு - (கால் - காற்று - கனல்), ஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு).
பஞ்ச தன் மாத்திரை(5): சுவை (ரசம்), ஒளி (ரூபம்), ஊறு (ஸ்பரிசம்), ஓசை (சப்தம்), நாற்றம் (கந்தம்).
பஞ்ச ஞானேந்திரியம்(5):மெய், வாய், கண், மூக்கு, செவி.
பஞ்ச கன்மேந்திரியம்(5): வாக்கு (வாய்), பாணி (கை), பாதம் (கால்), பாயுரு (மலவாய்), உபஸ்தம்(கருவாய்).
நான்கு அந்தக்கரணம்(4): மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
புருடன்(1): அறிவு.
-------------------------------------
இந்த 25 தத்துவங்கள் சேர்ந்ததுதான் நமது ஆத்மா. இந்த 25 தத்துவங்களைக் கொண்டதுதான் நமது உயிரணு. இதை இன்றை அறிவியல் நவீன ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளது. ஆனால் திருமூலர் அருளிய ஞானத்தால் நமக்கு என்றைக்கோ சொல்லிவிட்டார்.


ஆன்மாவை  அறிவதென்பது சாதாரணமானதல்ல. யுகங்களை கடந்ததாக உள்ள ஆன்மாவை அறிதல் யாவராலும் சாத்தியமில்லை , அறிதலுக்குரிய அனுமதி பெற்ற ஜீவனே ஆன்மாவை அறிய முடியும். மேலும் எல்லோரும் அறிந்து ஆவது ஒன்றுமில்லை . உணர்ச்சி வசப்பட்டு ஒருநாள், ஒருமணி நேரம் பேசுவார்கள் நான் கண்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். அப்புறம் அவர்கள் வேலையில் மூழ்கிப்போவார்கள் . அதனால்தான் அது இரகசியமாக்கப்பட்டுள்ளது. ஒரு நொடியும் விடாத , இடைவிடாத , இறைநினைவில் , இறை சிந்தனையில் , இறையுணர்வில் வாழ வேண்டும். தன்னை , தன்நினைவை மறந்து இறையுணர்வில் மூழ்கவேண்டும். இறை , மனித நிந்தனையற்ற , குற்றம் காணாத , மேல் கீழ் என பாகுபாடு பார்க்காத சர்வமும் சிவமே எனும் மெய்யுணர்வில் ஒன்றி தன்னை இயற்கையிடம் ஒப்புவிக்க வேண்டும். ஜபம் , தவம் , த்யானம் , யோகம் மூலம் தன்னை அறிதல் வேண்டும். தன்னை முழுக்க அறிந்தவர்கள் , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள்,சித்தர்கள் ஆவார்கள். இதுவே பிறப்பெடுத்தவர்களுக்கு இறைவனால் (இயற்கையால்) தரப்படுகின்ற பேரருள் நிலை . (அதற்கு தான் இந்த போராட்டம் ) குறைவின்றி எப்பிறப்பும் இல்லை , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரும் குறைபாடுள்ளவர்களே , அவர்கள் தங்களின் குறைபாடுகளை கலைந்ததனால் உயர்ந்து அந்நிலையை அடைந்தார்கள் . (அவர்கள் குறைபாடு என்பது மனிதர்களின் குறைபாடு போல அல்ல , குழப்பம் வேண்டாம்) தன்னை கொஞ்சமும் குறைவின்றி முழுமையாக அறிந்தவன் ஆன்மாவை அறியும் ஆற்றலை அடைகிறான். ஆன்மாவை அறிந்தவன் அகிலம் முழுவதும் செயல்படும் செயலாற்றலை அறிந்தவனாகின்றான் . ஆன்மாவை அறிந்தபின் அறிந்துகொள்ள வேறொன்றும் இல்லை. அதுவே பிரபஞ்ச ரகசியம். அந்த இரகசியத்தை அறிந்தவன் எவனோ அவனே யோகிகளின் தலைவன், அவனே ஞானிகளின் தலைவன், அவனே ரிஷிகளின் தலைவன் , அவனே சித்தர்களின் தலைவன் , அவனே இயற்கை, அவனே இறைவன்.-

No comments:

Post a Comment