ஆன்மாவானது யாது? உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே அப்படி நமது
உடலை விட்டு என்ன பிரிந்த்து? - திருமூலர்
உடலை விட்டு என்ன பிரிந்த்து? - திருமூலர்
நமது உடலில் இருந்து விந்துவாக கருவுக்குள் சென்று எது உயிரானதோ அதுவே நமது உடலில் இருந்து பிரிந்துவிட்டால் பிண்டமாக கருதப்படுகிறது (இறப்பு).
“ஆக்குகின்றான் முன்பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் காப்பக்கோளகை யுளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே” (தி.ம 451)
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் காப்பக்கோளகை யுளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே” (தி.ம 451)
பொருள்:
-------------
இறைவன் நமது இறப்பின் போது பிரித்த இருப்பத்தைந்து தத்துவங்களையும் தோற்றுவிக்கிறார்.
-------------
இறைவன் நமது இறப்பின் போது பிரித்த இருப்பத்தைந்து தத்துவங்களையும் தோற்றுவிக்கிறார்.
பிரிந்த 25 தத்துவங்களையும் விந்துவின் வாயிலாக அன்னையின் கருப்பையில் சேர்த்து உயிர் கொடுக்கிறார். அவர் உடல் வளர்ச்சிக்கு தேவையானவற்றை அறிந்தே படைக்கிறார்.
25 தத்துவங்கள்:
-----------------------
25 தத்துவங்கள்:
-----------------------
பஞ்ச பூதம்(5) : பிருதிவி - (பூமி - நிலம் - மண்), அப்பு - (ஜலம் - நீர் - புனல்), தேயு - (அக்னி - நெருப்பு - அனல்), வாயு - (கால் - காற்று - கனல்), ஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு).
பஞ்ச தன் மாத்திரை(5): சுவை (ரசம்), ஒளி (ரூபம்), ஊறு (ஸ்பரிசம்), ஓசை (சப்தம்), நாற்றம் (கந்தம்).
பஞ்ச ஞானேந்திரியம்(5):மெய், வாய், கண், மூக்கு, செவி.
பஞ்ச கன்மேந்திரியம்(5): வாக்கு (வாய்), பாணி (கை), பாதம் (கால்), பாயுரு (மலவாய்), உபஸ்தம்(கருவாய்).
நான்கு அந்தக்கரணம்(4): மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
புருடன்(1): அறிவு.
-------------------------------------
இந்த 25 தத்துவங்கள் சேர்ந்ததுதான் நமது ஆத்மா. இந்த 25 தத்துவங்களைக் கொண்டதுதான் நமது உயிரணு. இதை இன்றை அறிவியல் நவீன ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளது. ஆனால் திருமூலர் அருளிய ஞானத்தால் நமக்கு என்றைக்கோ சொல்லிவிட்டார்.
ஆன்மாவை அறிவதென்பது சாதாரணமானதல்ல. யுகங்களை கடந்ததாக உள்ள ஆன்மாவை அறிதல் யாவராலும் சாத்தியமில்லை , அறிதலுக்குரிய அனுமதி பெற்ற ஜீவனே ஆன்மாவை அறிய முடியும். மேலும் எல்லோரும் அறிந்து ஆவது ஒன்றுமில்லை . உணர்ச்சி வசப்பட்டு ஒருநாள், ஒருமணி நேரம் பேசுவார்கள் நான் கண்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். அப்புறம் அவர்கள் வேலையில் மூழ்கிப்போவார்கள் . அதனால்தான் அது இரகசியமாக்கப்பட்டுள்ளது. ஒரு நொடியும் விடாத , இடைவிடாத , இறைநினைவில் , இறை சிந்தனையில் , இறையுணர்வில் வாழ வேண்டும். தன்னை , தன்நினைவை மறந்து இறையுணர்வில் மூழ்கவேண்டும். இறை , மனித நிந்தனையற்ற , குற்றம் காணாத , மேல் கீழ் என பாகுபாடு பார்க்காத சர்வமும் சிவமே எனும் மெய்யுணர்வில் ஒன்றி தன்னை இயற்கையிடம் ஒப்புவிக்க வேண்டும். ஜபம் , தவம் , த்யானம் , யோகம் மூலம் தன்னை அறிதல் வேண்டும். தன்னை முழுக்க அறிந்தவர்கள் , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள்,சித்தர்கள் ஆவார்கள். இதுவே பிறப்பெடுத்தவர்களுக்கு இறைவனால் (இயற்கையால்) தரப்படுகின்ற பேரருள் நிலை . (அதற்கு தான் இந்த போராட்டம் ) குறைவின்றி எப்பிறப்பும் இல்லை , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரும் குறைபாடுள்ளவர்களே , அவர்கள் தங்களின் குறைபாடுகளை கலைந்ததனால் உயர்ந்து அந்நிலையை அடைந்தார்கள் . (அவர்கள் குறைபாடு என்பது மனிதர்களின் குறைபாடு போல அல்ல , குழப்பம் வேண்டாம்) தன்னை கொஞ்சமும் குறைவின்றி முழுமையாக அறிந்தவன் – ஆன்மாவை அறியும் ஆற்றலை அடைகிறான். ஆன்மாவை அறிந்தவன் – அகிலம் முழுவதும் செயல்படும் செயலாற்றலை அறிந்தவனாகின்றான் . ஆன்மாவை அறிந்தபின் அறிந்துகொள்ள வேறொன்றும் இல்லை. அதுவே பிரபஞ்ச ரகசியம். அந்த இரகசியத்தை அறிந்தவன் எவனோ அவனே யோகிகளின் தலைவன், அவனே ஞானிகளின் தலைவன், அவனே ரிஷிகளின் தலைவன் , அவனே சித்தர்களின் தலைவன் , அவனே இயற்கை, அவனே இறைவன்.-
No comments:
Post a Comment