Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 20 September 2016

அடி முடி காண முடியாதவர் என்றால் என்ன ஐயா ?


கேள்வி - அடி முடி காண முடியாதவர் என்றால் என்ன ஐயா ?
இராம் மனோகர் - ஆரம்பமும், முடிவும் இல்லாத எல்லையற்ற பரம்பொருள் என்பது பொருள். இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், நான் யோசிக்காமல் சொல்வேன் 'ஆகாயம்'' என்று. ஆம் !! ஆகாயத்தை, எல்லையே இல்லாத அந்த பிரம்மாண்டத்தை ரசிப்பதில் இனம் புரியாத ஆனந்தம் ஏற்படுவதாக நான் உணர்கிறேன். பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, பரந்து விரிந்த அந்த ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. மேகமே இல்லாத அமாவாசை இரவில் மல்லாந்து படுத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் ஒரு அலாதியான சுகம் எனக்கு. இருண்ட வானம், பூக்களை நாலா பக்கமும் தூவி விட்டது போலச் சிதறிக் கிடக்கும் நட்சத்திங்கள் இடைவிடாமல் கண் சிமிட்டி வா வா என்று அழைத்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றும். இவற்றிற்கிடையே சற்றும் மினு மினுக்காமல் ஒளிரும் கோள்கள். இவற்றை எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் அந்த ஆகாயத்தின் பிரம்மாண்டம், அதனால் ஏற்படும் பிரமிப்பு மட்டும் குறைவதேயில்லை.
நமக்கு மேலேயும் ஆகாயம், நமக்கு கீழேயும் ஆகாயம், திரும்பும் திசைகளெங்கும் ஆகாயம். கோடிக் கணக்கான நட்சத்திரங்களுக்கு அப்பாலும் ஆகாயம்தான். ஆகாயம் ஆகாயம் ஆகாயம்தான். பற்றுவதற்கு எதுவும் இல்லாத ஆகாயம். அதற்கு ஆரம்பம் எது ? முடிவு எது ? யாராலும் விடை காண முடியாது. ஆனால், நாம் பார்ப்பது என்னவோ, வானத்தில் பிரபஞ்ச வெளியின் ஒரு சிறு பகுதியை மட்டும்தான். நாம் இருக்கும் பூமியும் மற்ற கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கும் பால் வெளி மண்டலம் என்பது எல்லையற்ற ஆகாயத்தில் ஒரு சிறு தூசியைப் போன்றது. இது போல இன்னும் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் காண முடியாத நிலையில், தூரத்தில் பரந்து, விரிந்து கிடக்கின்றன. அவற்றில் காணப்படுகின்ற பொருட்கள் அனைத்திலும் மூலக் கூறுகள், அணுக்கள், பல்வேறு துகள்கள் யாவும் தனக்குத் தானே சுழல்வதும், கர்ணமடிப்பதும், மோதுவதும், மோதுவது போல நெருங்கி வந்து, பின்பு மோதாமல் விலகிச் செல்வதுமாக விளாயாடிக் கொண்டிருக்கின்றன. இந்த அற்புதமான, அதிசயமான திருவிளையாடல்களைப் பற்றி விஞ்ஞானத்திற்கு இன்னும் ஒரு தெளிவான முடிவு கிடைக்கவில்லை.
நமது சூரியனைப் போலப் பல மடங்குப் பெரிய, நெருப்பைக் கக்குகிற விண்மீகள் இருக்கின்றன என்று இப்பொழுது விஞ்ஞானிகளும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இது இத்தோடு முடிந்து விடுவதில்லை. மேலும் மேலும் பல அற்புதமான, அதிசமான தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. நமது ஆகாய கங்கை எனப்படும் பால்வெளி மண்டலத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். அதற்குப் பிறகும் அது முடிந்து விடுமா என்ன ? முடியாது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி போல, புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல, மிகச் சிறிய இந்த பகுதியை ஆராய்ந்த போதே மனிதன் இவ்வளவு அபரிதமான விஞ்ஞான முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறான் என்றால், இந்த பிரபஞ்சம் தாண்டி, பால்வெளி மண்டலத்தைத் தாண்டிப் போனால் மனிதனின் நிலைமை எப்படி இருக்கும் ?
இதையெல்லாம் மெய்ஞானத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், ஆகாயம்தான் அனைத்திற்கும் மூலம். அந்த ஆகாயத்தில் இருந்துதான் அனைத்தும் தோன்றின. எனவே ஆகாயமாகிய வெட்ட வெளியே சிவனாகிய இறைவன். அவரது தலை உச்சியாகிய ஆரம்பத்தையும், காலடியாகிய முடிவையும் யாராலும் காண முடியாது என்று சொன்னார்கள்.


No comments:

Post a Comment