Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 20 September 2016

மரண நிகழ்வுகள்

மரண நிகழ்வுகள்
=============
நமதுதேகம் இயற்கை மரணம் சம்பவிக்கும்போது ஏற்படும்
உடலியல் மாற்றங்கள் :-
நம் தேகம் பஞ்சபூதங்களால் ஆனது. மனிதனின் உடலில்
தொடைவரை நிலமும்,
நாபி வரை நீர்,
அதிலிருந்து இதயம் வரை நெருப்பு,
அதற்கு மேல் தொண்டை வரை வாயு,
தலைப் பகுதி ஆகாயம்.
என்று பிரித்துக் கூறுகிறார்கள்.
இயற்கை மரணம் ஒருவருக்கு உண்டாகும் போது முதலில் தொடை வரை செயலிழக்கும்.
அந்தப் பகுதியின் நிலத் தத்துவம் வயிற்றில் உள்ள நீர் தத்துவத்தில் அடங்கும்.
அதன் பிறகு நிலப் பகுதியும் நீரும் சேர்ந்து நாபியிலுள்ள சடராக்கினியில் அடங்கும்.
பிறகு இந்த மூன்றும் சேர்ந்து இதயப் பகுதியில் உள்ள வாயுவில் கலக்கும்.
அப்பகுதி இயக்கங்களும் நின்று போகும்.
அதன் பிறகு தலைப் பகுதியில் வாய், கண், காது, உச்சிப் பகுதிகளைச் சேர்ந்து அவைகளின் இயக்கங்களை நிறுத்தி கண் வழியாக மூக்கு வழியாக உயிர் உடலை விட்டு நீங்கும்.
எல்லா மனிதர்களுக்கும் இது அதாவது இயற்கை மரணம் இவ்விதமாகவே நடக்கும் என்கிறார்கள்.
கடைசியில் உச்சியில் உயிர் பிரியும் விதத்தில் பல வித மாறுபாடுகள் நிகழ்கின்றன.
மனித வாழ்வின் அந்த விலை மதிப்பில்லாத கடைசி நொடி உயிர் பிரியும் வழி எது என்பதை தீர்மானிக்கிறது.
உயிரானது யோகியர் மற்றும் ஞானிகளுக்கு கபாலம் வழியாகப் பிரியும்,
புண்ணியர்களுக்கு கண், காது மூக்கு வழியாகப் பிரியும் ,
பாவிகளுக்கோ ஆசன வாய் வழியாகப் பிரியும் என்றும் சொல்வதுண்டு.
நந்தி தேவர் சொல்கிறார் இது இயற்கை மரணத்துக்கு மட்டுமே பொருந்தும் அகால மரணம் அல்லது விபத்துகளால் மரணமடைபவர்கள் உயிர் அடையாளக் குறி வழியாகவே போகும் என்கிறார்.
இந்த உடலானது ஐம்பூதப் பிரிவுகளாலும், தசவாயுக்களாலுமானது.
இந்த இரண்டும் தன் நிலை மாறும் போது மரணம் சம்பவிக்கிறது.
மரணம் நெருங்கும் போது பிருதிவியான மண்ணின் கூறுகள் தளர்ந்து நீர்மயமாகும். நீரில் மண் கரைந்தால் எற்படும் நிலைபோல் உடலில் சமன்பாடு நீங்கி எங்கோ சரிந்துவிடுதல் போன்ற உணர்வு ஏற்படும். இது முதல் நிலை. இரண்டாம் நிலையில் நீரின் தன்மை தீயின் தன்மையோடு ஒன்றும். அதாவது பழுக்க காய்ச்சிய இரும்பை நீரில் முக்கியது போன்ற ஒரு நிலை. இதனால் உடலில் நீர்சத்து முற்றிலும் வரண்டுவிடும். தாகம் மேலோங்கும். உடலில் ஒரு எரிச்சல் தோன்றும். மூன்றாவது நிலை உடலின் தீயானது காற்றில் கலக்கும். உடலின் வெப்பம் குறைந்து உடல்சக்தி முழுவதும் அடங்கிவிடும். வெப்ப நிலை குறைந்ததால் இரத்த ஓட்டம் குறையும். இதயத் துடிப்பும் படிப்படியாக குறையும். நான்காம் நிலை, உடலின் காற்றுத்தன்மை ஆகாயவெளியில் கலக்கத் தயாராகிவிடும்.இந்நிலையில் உயிரானது பிரிய ஆரம்பிக்கும். இதுவரை கீழே செயல்பட்டுக் கொண்டிருந்த அபானன் வாயு மெல்ல மேலேறி ஏனைய வாயுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பயணிக்க ஆரம்பிக்கும்.
அபானன் உதானனை சந்திக்கும் போது குமட்டல், கிரிதரனை சந்திக்கும் போது சோம்பல், வியானன் வாயுவை சந்திக்கும் போது உடல் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கும். நாகனை சந்திக்கும் போது இமைகள் செயலிழக்கும். கூர்மனை சந்திக்கும் போது கொட்டாவி வரும். சாமனை சந்திக்கும் போது உடல் சூடு குறையும். இறுதியில் பிராணனோடு கலந்து மூச்சுத்தினறலை ஏற்படுத்தும்.
தனஞ்செயனைத் தவிர்த்து நவ வாயுக்களும் வெளியேறிவிடும். இவ்வாறே மரணம் சம்பவிக்கிறது.இது குருதி மரணம் எனப்படும்.
இந்த குருதி மரணத்திற்கு பிறகும் மனித மூளையானது சிந்தனை உணர்வுகளோடு இயங்கிக் கொண்டிருக்கும். அதன்பிறகு தனஞ்செயன் வாயுவானது மேல் நோக்கி பயணித்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அது மூளையை அடையும் போது உடல் கெட்டு அழுகத் தொடங்கும். இது சிந்தனா மரணம் எனப்படும். இந்த குருதி மரணத்திற்கும், சிந்தனாமரணத்திற்கும் இடைப்பட்ட நேரம் இரண்டு முகூர்த்த காலம், அதாவது மூன்று மணிநேரம்.
அந்த மாய நொடிகளில் தான் புருவ வில் பூட்டு திறக்கிறது. இறந்த உடலின் நெற்றிப் பகுதியில் தனஞ்செயன் பயணிக்கிற போது அதுவரை துண்டு துண்டாக செயலற்று இருந்த சித்திரை, வஜ்ரணி, தந்திரிணி, அபூர்விணி ஆகிய நான்கு நாடிகளும் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கும். அதற்கு பிறகு மண்டை ஒட்டை உடைத்துக்கொண்டு தனஞ்செயனின் பயணம் நமக்கு நிரந்தர மரணம்.

No comments:

Post a Comment