Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

சித்தர் ஆவதுஎப்படி ? பகுதி நாற்பத்தி ஆறு ;;;மர்ம யோகி

சித்தர் ஆவதுஎப்படி ?  பகுதி நாற்பத்தி ஆறு :-- சித்தராவது எப்படி ?
இறந்த காலம், நிகழ்காலமாகும் பேரதிசயம்..
***************************************************************
மிகுந்த பாடு பட்டு வந்ததின் காரணமாக உண்மை தோன்றுகிறது.. உண்மை என்ற ஒரு சக்தி ஒரு இடத்தில் நிற்பதில்லை... பிரபஞ்ச முழுமைக்கும் காக்க வேண்டிய அன்பே வடிவான உண்மை என்ற அந்த மகா சக்தி சதா காலமும் நகர்ந்து கொண்டே இருக்கும்.. அந்த நகர்வு ஒவ்வொரு பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் நொடியில்
பல ஆயிரம் தடவைகள் மேல் ஊடுருவக்கூடியது... அவ்வளவு வேகத்தில் அத்தனையும் தன் இணைப்பில் வைத்துக் கொள்கிறது... அந்த உண்மை என்ற அந்த ஆற்றலே பிரம்மமாக படைப்பு சக்தியாக உள்ளது.. பாடுபட்டு வந்ததின் காரணமாக தோன்றிய உண்மையை மனதால் பிடிக்கிறோம்.. தோன்றிய அந்த உண்மையை மனதால் பிடிக்கும் போது அது தரிசனமாக, காட்சியாக, தோன்றி பின் மனதின் எல்லையை விட்டு அந்த சக்தி நகர்ந்து மறைந்து விடுகிறது.. அதனுடைய வேகத்திற்கு மனம் ஈடு கொடுக்க முடியாமல் போவதால் மனம் பின் தங்கி விடுகிறது... எந்த இறை அடியார்கள் சரித்திரத்தை படித்தால் இறைவனை கண்டேன் கண்டேன் என்று
உண்மை கனலாக இறை சக்தியான பிரபஞ்ச ஆற்றலாய் உள்ளது.. உண்மை தரிசனம் கிடைக்கும் சமயம் மட்டும் மனம் கனலாய் வெளிச்சமாய் சேர்ந்தே இருக்கிறது... உண்மையை உணரும், அறியும் சமயம் மனம் தன் இயல் தன்மையாகிய நெருப்பு என்ற பூதமாக கனலும் வெளிச்சமும் சரியான விகிதத்தில் நெருப்பு என்ற பூதத்தின் முழுமையான இலக்கணமாக உள்ளது.. சரி தரிசனம் அல்லது காட்சி கிடைத்த சமயத்தில் மனம் தன் இயல்பான இலக்கணத்தில் உள்ளது.. ஆனால் காட்சியில் இருந்த கனலை பெற்றுக் கொண்ட மனம் காட்சியில் இருந்த வெளிச்சத்தையும் சேர்ந்தே பெறுகிறது.. ஆனால் உண்மை நிலை மனதின் எல்லையை விட்டு நகர்ந்து செல்லும் போது, மனம் காட்சியில் இருந்த கனலை சரியான விகிதத்தில் பெற்று கொள்ள தவறி விடுகிறது.. ஆனால் பொறி புலன்கள் துணையோடு இருக்கும் மனம் வெளிச்சத்தை மட்டும் இறுக பற்றிக் கொள்ள முடிகிறது... முடிவு உண்மையின் காட்சியில் உள்ள கனலை இழந்து வெளிச்சத்தோடு மட்டுமே மனம் தனித்து விடப் படுகிறது.. இதனால் மனம் கண்ட உண்மை காட்சியில் கனலை இழந்து வெளிச்சத்தை மட்டும் பெற்று இருக்கும் போது அது நினைவாய் சித்தத்தில் சேர்த்து வைத்துக் கொள்கிறது.. நிகழ் நிலை உண்மை இப்போது இறந்த கால வெளிச்சமாய், எண்ணமாய், மாறி விடுகிறது..
ஏன் கனலை மட்டும் மனதால் பிடித்துக் கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழலாம்.. கனலை பிடிக்க மனதிற்கு தன் அதிபதியாகிய எஜமானன் ஆகிய விழிப்பு நிலையின் தொடர்பு இல்லாத காரணத்தால், அந்த கனலை பிடித்துக் கொள்ள முடியவில்லை.. விழிப்பு நிலை என்பது அககுருவே.. அககுருவே உண்மை நிலையின் அதிவேகத்திற்கு ஈடு கொடுத்து நகரும் வலுவினை உடையது.. உண்மை நிலையை இறுக பிடிக்கும் ஆற்றலை உடையது.. விழிப்பு நிலையை சார்ந்து இருக்க மனதால் முடியும் என்றால், உண்மையின் தரிசனத்தை பெற்ற மாத்திரத்தில் கனலையும் வெளிச்சத்தையும் தன்பால் தக்க வைத்துக் கொள்ள முடியும்... வெளிச்சம் மாத்திரம் உள்ள நிலைக்கும், வெளிச்சமும் கனலும் சேர்ந்த நிலைக்கு என்ன வித்தியாசம் என்று கேட்கலாம்.. வெறும் கற்பனையில் மாம்பழம் சாப்பிடுவதற்கும், நிஜமாகவே மாம்பழம் சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்.. எவ்வளவு பெரிய வித்தியாசம் என்று பாருங்கள்.. கற்பனைக்கும் நிஜத்திற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.. கனல் இல்லாமல் வெறும் வெளிச்சத்தால் மட்டுமே ஆன ஒன்றை அனுபவிப்பது, வெறும் சக்கையை, நிழலை அனுபவிப்பதற்கு சமம்..
விழிப்பு நிலை பெறாத மனம் ஒரு அனுபவத்தை அனுபவிக்கின்ற போது, கனலை உடனே இழந்து அந்த அனுபவத்தின் வெளிச்சத்தோடு மட்டுமே இருப்பதால், கனலும் வெளிச்சமும் சேர்ந்த அனுபவத்திற்காக மீண்டும் மீண்டும் ஏங்குகிறது.. உயிரோட்டமான அந்த அனுபவம் உயிரோட்டம் இழந்து சக்கை தன்மையை பெறுவதால், மனம் அந்த சக்கை தன்மையில் துளியும் திருப்தி பெறாமல், ஏக்க நிலையோடு அந்த அனுபவத்திற்காக தவிக்கிறது.. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன வென்றால், அககுருவின் துணை பெறாத மனம் உடைய மனிதர்கள் எவரும் ஏக்க வடிவமாகவே இருப்பார்கள்.. பல பல பிறவிகள் எடுத்து எடுத்து ஏக்கங்களை தவிர்க்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருப்பார்கள்... அககுருவை தன் அதிபதியாக கொண்டுள்ள மனம் சுத்தமனமாக உள்ளது.. சுத்த மனம் என்பதே கனலும் வெளிச்சமும் சேர்ந்த இயல்பான ஒன்று.. அப்படி இருந்த மனம் தன் தன்மையை இழந்து வெளிச்ச மயமாய் மிக விரைவில் மாறி விடுவதால் உண்மையை உடனே தவற விட்டு விடுகிறது...
இவையெல்லாம் சற்று குழப்பமாக இருக்கலாம்.. ஆனால் சற்று உற்று படிக்கும் போது ஒரு மிக பெரிய இரகசியம் வெளிப்படும்.. அது என்ன ? அதிக வியப்பு தரும் அது, வெளிச்சமாய் நினைவகமாய் இறந்த கால அனுபவமாய் உள்ள மனம், அககுருவோடு சேரும் போது, அந்த இறந்த காலம் நிகழ் காலமாகிறது.. செத்தாரை மீண்டும் எழவைக்கிறது என்ற வள்ளலார் கூற்று மிகவும் சரியே.. இறந்த காலம் நிகழ் காலமாகிறதா? என்ன பைத்திக்காரத்தனம் என சொல்லலாம்.. ஆனால் மதங்கள் ஏசு கல்கி நபி மீண்டும் வருவார்கள் என சொன்னது இதன் அடிப்படையில் தான்.. ஆனால் அவர்களை உயிர் பெற செய்ய வைக்கக் கூடிய வல்லமை ஒருவருக்கே உண்டு.. அவர்தான் கனல் வடிவமாய் உள்ள அககுரு.. அககுருவின் பெருமை உணர்த்தவே இந்த பதிவு.. இறந்த காலத்தை நிகழ் கால ஆக்கும் யோகமே நம் தமிழ் சித்தர்களின் மிக உயர்ந்த கண்டு பிடிப்பான சிவயோகம்.. ஆனால் சிவ யோகத்தை புரிந்து கொள்ள இன்றைய தலைமுறைக்கு இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆகும் போல தோன்றுகிறது.. எதிர்கால அசிங்கமான கனவுகளை நிகழ் காலமாக்க துடிக்கும் இன்றைய தலைமுறை, புனிதமான,அன்புமயமான, கடந்த காலத்தை நிகழ் காலமாக்க எண்ணியதே இல்லை.. இனியும் எண்ண போவது இல்லை.. மர்ம யோகத்தில் அககுருவின் துணையால் கடந்த கால நிலையில் உள்ள சித்தர்கள், உயிர் பெற்று, நிகழ்காலத்தில் எழுவார்கள்.. நிறை நிலை சித்தராக,மனிதராக, எண்ணமாய் வெளிச்சமாய் இலட்சியமாய் உள்ள மர்ம யோகிகள், அககுருவின் துணையால், நிறைநிலை சித்தராய் நிகழ்கால நிலையில் எழுவார்கள் என்பது நிச்சயம்...
கனல் தீட்சை என்பது வெளிச்சமாய் உள்ள மனத்தோடு கனலை சேர்த்து சுத்த மனமாக்கி, இறந்த கால எண்ணங்களின் வடிவாய் உள்ள சித்தத்தை சிவமயமாக்குவதே.. சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என அனுபவப் படுவது சிவயோகத்தால், சிவகலப்பால், மட்டுமே சாத்தியமாகும்.. சரியான கனல் தீட்சை எங்கே நடைபெறுகிறது என்று யாராவது சொல்ல முடியுமா? நம் அக குருவை உணரும் வழியே சரியான வழி என்பதை உணர்ந்து, சரியான வழியில் பயணப் படுவோமாக..
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment