88. பகைத்திறம் தெரிதல்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 871:
பகையென்னும் பண்பி
லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்
றன்று
மு.வ உரை:
பகை என்று சொல்லப்படும்
பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
சாலமன் பாப்பையா உரை:
பகை எனப்படும் பண்பற்ற
ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
கலைஞர் உரை:
பகை உணர்வு என்பது
பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது
குறள் 872:
வில்லேர் உழவர் பகைகொளினும்
கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
மு.வ உரை:
வில்லை ஏராக உடைய உழவராகிய
வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
விலலை ஆயுதமாகக் கொண்ட
வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.
கலைஞர் உரை:
படைக்கலன்களை உடைய
வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை
கொள்ளக் கூடாது
குறள் 873:
ஏமுற் றவரினும் ஏழை
தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
மு.வ உரை:
தான் தனியாக இருந்து
பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னந் தனியனாக இருந்து
கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
கலைஞர் உரை:
தனியாக நின்று பலரின்
பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்
குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும்
பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்
றுலகு
மு.வ உரை:
பகையையும் நட்பாக செய்து
கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பகையையும் நட்பாக மாற்றி,
அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.
கலைஞர் உரை:
பகைவர்களையும் நண்பர்களாகக்
கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்
குறள் 875:
தன்றுணை இன்றால் பகையிரண்டால்
தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின்
ஒன்று
மு.வ உரை:
தனக்கு உதவியான துணையே
இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக்
கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கோ உதவும் நண்பர்
இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும்
இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
கலைஞர் உரை:
தனது பகைவர்கள் இரு
பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப்
பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்
குறள் 876:
தேறினுந் தேறா விடினும்
அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
மு.வ உரை:
இதற்கு முன் ஒருவனைப்
பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத்
தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது பகையை முன்பே
தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும்
விட்டு விடுக.
கலைஞர் உரை:
பகைவரைப்பற்றி ஆராய்ந்து
தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன்
அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும்
இருப்பதே நலமாகும்
குறள் 877:
நோவற்க நொந்த தறியார்க்கு
மேவற்க
மென்மை பகைவர் அகத்து
மு.வ உரை:
துன்புற்றதைத் தாமாகவே
அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்
கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
நம் பலம் இன்மையை,
தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.
கலைஞர் உரை:
தனது துன்பத்தைப் பற்றி
அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக்
கூடாது
குறள் 878:
வகையறிந்து தற்செய்து
தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
மு.வ உரை:
செய்யும் வகையை அறிந்து
தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட
செருக்குத் தானாவே அழியும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்ய
வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால்,
பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய செருக்கு அழியும்.
கலைஞர் உரை:
வழிவகை உணர்ந்து, தன்னையும்
வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே
ஒடுங்கி விடும்
குறள் 879:
இளைதாக முள்மரம் கொல்க
களையுநர்
கைகொல்லும் காழ்த்த
இடத்து
மு.வ உரை:
முள் மரத்தை இளையதாக
இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை
அது வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மை அழி்க்க எண்ணும்
முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின்
கையை அது அழிக்கும்.
கலைஞர் உரை:
முள்மரத்தை, அது சிறிய
கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட
வேண்டும்
குறள் 880:
உயிர்ப்ப உளரல்லர்
மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா
தார்
மு.வ உரை:
பகைத்தவருடையத் தலைமையைக்
கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மைப் பகைப்பவரின்
செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால்
நிச்சயம் அழிக்கப்பவர்.
கலைஞர் உரை:
பகைவரின் ஆணவத்தைக்
குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல
முடியாது
No comments:
Post a Comment