98. பெருமை
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பால்; அறத்துப்பால் 1-38 , பொருட்பால் 39-108 , காமத்துப்பால் 109-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இயல் ; பாயிரவியல் 1-4 , இல்லறவியல் 5-24
துறவறவியல் 25-37, ஊழியல் 38 , அரசியல் 39-63
அமைச்சியல் 64-73 ,அரணியல் 74-75
கூழியல் 76 , படையில் 77-78 , நட்பியல் 79-95
குடியியல் 96-108 , களவியல் 109-115 , கற்பியல் 116-133
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 971:
ஒளியொருவற் குள்ள வெறுக்கை
இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும்
எனல்
மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே
ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்குப் பெருமை,
பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன்
என்று எண்ணுவது கேவலமே.
கலைஞர் உரை:
ஒருவரின் வாழ்க்கைக்கு
ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்
குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை
யான்
மு.வ உரை:
எல்லா உயிர்க்கும்
பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால்
சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால்
சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
கலைஞர் உரை:
பிறப்பினால் அனைவரும்
சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்
குறள் 973:
மேலிருந்துத் மேலல்லார்
மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
மு.வ உரை:
மேல்நிலையில் இருந்தாலும்
மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர்
கீழ் மக்கள் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்புகள் ( பெருமைகள்)
இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில்
இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.
கலைஞர் உரை:
பண்பு இல்லாதவர்கள்
உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள்
தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்
குறள் 974:
ஒருமை மகளிரே போலப்
பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின்
உண்டு
மு.வ உரை:
ஒரு தன்மையான கற்புடைய
மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் கணவனை அன்றிப்
பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து
தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
கலைஞர் உரை:
தன்னிலை தவறாமல் ஒருவன்
தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும்
பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்
குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார்
ஆற்றின்
அருமை யுடைய செயல்
மு.வ உரை:
பெருமைப் பண்பு உடையவர்
செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர்
ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை நெருக்கடி வந்தாலும்
பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
கலைஞர் உரை:
அரிய செயல்களை அவற்றுக்கு
உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்
குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள்
இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும்
நோக்கு
மு.வ உரை:
பெரியாரை விரும்பிப்
போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்கு உரியவர்களைப்
பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
கலைஞர் உரை:
பெரியோரைப் போற்றி
ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை
குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம்
சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்
மு.வ உரை:
சிறப்பு நிலையும் தனக்கு
பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பணம், படிப்பு, பதவி
ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு
வருவனவாம்.
கலைஞர் உரை:
சிறப்பான நிலையுங்கூட
அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது
இயற்கை
குறள் 978:
பணியுமாம் என்றும்
பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
மு.வ உரை:
பெருமைப் பண்பு எக்காலத்திலும்
பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமை உடையவர் செருக்கு
இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
கலைஞர் உரை:
பண்புடைய பெரியோர்
எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே
புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்
குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை
சிறுமை
பெருமிதம் ஊர்ந்து
விடல்
மு.வ உரை:
பெருமை பண்பு செருக்கு
இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைப்பட்டுக் கொள்ளக்
காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக்
கொள்வது சிறுமை.
கலைஞர் உரை:
ஆணவமின்றி அடக்கமாக
இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்
குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை
சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
மு.வ உரை:
பெருமைப் பண்பு பிறருடைய
குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்குரியவர் பிறர்
பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ
பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
கலைஞர் உரை:
பிறருடைய குறைகளை மறைப்பது
பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்
No comments:
Post a Comment