Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 8 July 2016

யாகவா முனிவருடைய வீடு ;;; ஆதி வேதம் ;;; யாகவா முனிவரின் ஆதி வேதம் ;;;

சென்னை மேடவாக்கத்தில் யாகவா முனிவருடைய வீடு மிகவும் பிரபலம்! ‘பிரம்மஸ்தலம்என்று பெயர் சூட்டி, பிரமாண்டமாகக் கட்டிவைத்து இருக்கிறார். தன்னை பிரம்மாவின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் யாகவா முனிவரின் வீட்டு வாசலில் காவலுக்கு செக்யூரிட்டிகள். உள்ளே, யாகவா யாருடனோ போனில் உரக்கப் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்ததை அந்தப் பெரிய ஹால் எதிரொலி த்துக்கொண்டு இருந்தது!உள்ளே நுழைந்த நம்மைத் தோளில் கிடந்த துண்டை முறுக்கி விட்டபடி வரவேற்றார்.”துண்டை முறுக்கறதுதான் உங்க மேனரிசமா?” என்றோம் லேசான பயத்துடன். ”எதுஇதைச் சொல்றியா? அந்த சிவசங்கர் பாபா எகத்தாளமா சிரிச்சானேனு ரெண்டு போட்டேன். இன்னும் சொல்லப்போனா, என் சின்ன வயசுக் கோமணத்தை நினைவுபடுத்துறதுக்காகத் தான் இந்தத் துண்டைத் தோள்ல போட்டு இருக்கேன்!””கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..?”நம்ம வாழ்க்கை யில விளக்கறதுக்கு என்ன இருக்கு? திருச்செந்தூர் பக்கத்துல உள்ள அம்மன்புரம் கிராமத்துல பிறந்து, சோத்துக்கு வழி இல்லாமப் பிச்சை எடுத்தேன். பல நூறு கிராமத்து மக்கள் போட்ட பிச்சையில வளர்ந்த உடம்பு இது! எங்க அப்பாவுக்குப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்ல நானும் ஒருத்தன். எங்களுக்குப் பூர்வீகப் பேரு ராம்லெக்ஷ்மன். ஆச்சர்யமான ஒற்றுமை என்னன்னா, எங்க அப்பாகூட ரெட்டைப் பிறவி தான். அவர் பேரும் லெக்ஷ்மன்தான். எங்க அண்ணன் ராம். இப்ப பாம்பேல வணிகம் பண்றான்!””அந்தக் கோமணம் மேட்டர் பத்திசொல்றேன் ! என் வீட்டுல நான் தான் கடைசிப் பையன். நான் பிறந்தப்ப, குடும்பத்துல மோசமான வறுமை. என்னோட மூணு வயசில் அப்பா இறந்துட்டார். கொஞ்ச நாள் சோறு போட்டு, பல நாள் பட்டினி போட்டுனு எங்க அம்மா பயங்கரமா சிரமப்பட்டாங்க. ஒரு கட்டத்துல, தன் இடுப்புச் சேலையை ரெண்டா கிழிச்சிஒரு பாதியை என் இடுப்புல கட்டிவிட்டு, ‘என்னால உனக்குக் கொடுக்க முடிஞ்சது இந்தக்கோமணம் தான்டா மகனே!’னு அனுப்பிவிட்டாங்க. அப்புறம், ஊரு ஊராப் பிச்சை எடுத்து, விறகொடிச்சு, சுடுகாட்லயும் மரத்தடியிலயும் தூங்கி வளர்ந்தேன். யாராவது கேட்டா, ‘அநாதைப் பயனு சொல்லிக்குவேன். பழசை மறக்கக் கூடாதுன்னுதான் இப்பவும் கோமணத் துண்டைத் தோள்ல போட்டு இருக்கேன். யார் என்ன செய்ய முடியும் மகனே..? அவதாரங்கள் அடிபட்டு வளரணும் கிறது விதி! தேவர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..? ‘இரண்டும் இணையக் கண்டேன். துளி நீரைத் தூக்கி எறிந்தார் கருவறையில். பூட்டியேதான் சாவியை எடுத்தார் வெளியே! நாள் எண்ணிப் பிறந்தார் கண்டேன். நாள் எண்ணி இறந்தார் யாரேனும் உண்டோ..?” ”புரியலீங்களே…”உங்க உலகமே கெட்ட வழியில, கழிவுல, இடுக்குல பிறந்தவங்கதானே! மரம் செத்தா வீட்டில் அடுக்கிவைக்கிறே! நீ செத்தா சுடுகாட்டுக்கில்ல போறே? இதை ஒப்புக்கிறியா இல்லையா?””அது சரிங்கஅதென்ன ஊடாலஉங்க உலகம்னு ஒரு வார்த்தை சொன்னீங்க?”எலேய்நான் பிரம்மனோட அவதாரம்! இது எனக்கு 54-வது பிறவி. தேவர்களும் மேலோகத்து முனிவர்களும் சொல்றதை உங்க உலகுக்குக் கொடுக்க வந்த படைப்புக் கடவுள். என் நெத்தியைப் பார்த்தியா? கோடுகள். அதுதான் எனக்கு அடையாளம். பள்ளிக்கூட வாசலைத் தொடாத நான், உங்களுக்காகஇனான்ய மொழியில் தேவர் வாக்கு களை எழுதிக்கிட்டு இருக்கேன். வெளியே தெரியாமஇருக்க ணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா, இப்ப கொஞ்ச காலமாதான் பிரபலமாக்கிட்டீங்க நம்மளை!””ஆன்மிக வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தானுங்களே! சரிங்க, நீங்களும் சிவசங்கர் பாபாவும் மோதிக்கிட்டதே விளம்பரத்துக்காக நடந்த செட்டப் நாடகம்னு ஒரு பேச்சு இருக்குங்களே..?”(555 சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து லைட்டரால் பற்றவைக்கிறார்…) ”நீ வேற! அதெல்லாம் சும்மா. அந்த சிவசங்கரனை இங்கே என் இடத்துக்கே கூட்டிவந்து பேட்டி எடுத்தப்பவும் ரெண்டு போட்டு அனுப்பினேன். இப்பவும் துண்டாலயே வெச்சேன்பாத்தீங் கள்ல!””உங்களுக்கு சினிமா பிடிக்காதுனு கேள்விப்பட்டு இருக்கோம். ஆனா, சினிமாக்காரங்களைப் பிடிக்கும் இல்லையா..? ”(ஊடுருவிப் பார்க்கிறார்.) ”பல பேரு வர்றாங்க. வாசல்ல நின்னபடி தண்ணி வாங்கிக் குடிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். போன மாசம் ரஜினிகூட வந்தாருநான் கோபமா பேசிட்டேன் அவர்கிட்ட!””அவர்கிட்ட உங்களுக்கு என்ன கோபம்..?”எழுதிவெச்சுக்கங்கரஜினிகாந்த் சாதாரண ஆளில்லே! அவர் ஒரு அவதாரம். ஆன்மிகத்துல வளர்ந்து, உலக லெவல்ல ஆன்மிகத்துக்கு அதிபதி ஆவார்எனக்கு இது தெரிஞ் சதும், நீர் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினேன். ‘எனக்குள்ள அடிக்கடி நான் அவதாரம்னு உணர்றேன். ஆனா, வெளியே சொன்னா நம்பமாட்டாங்கஅதான் சொல்லலைனு என்கிட்டே சொன்னார் ரஜினி. எனக்குச் சட்டுனு கோபம் வந்துடுச்சு! ‘வெளியே சொல்லிடு. நீதான் கல்கி. இந்த உலகை ஆன்மிகப் பாதையில அழைச்சுக் கிட்டுப் போக வந்த ஆன்மிகவாதி நீ!’னு அறிவுரை சொன்னேன். அதோட ரஜினியோட சட்டையைக் கழட்டிப் பார்த்தேன். அவரோட இடது தோள்ல சங்கும் வலது தோள்ல சக்கரமும் இருக்கறதப் பார்த்தப்ப, ‘கல்கி நீதான்னு உறுதியாயிடுச்சுன்னேன். அதற்கு ரஜினிநான் குருவாலதான் வெளிப்பட ணும்னு இருக்குன்னார்.””அவரோட குரு யாருங்க?”வேற யரு? நான்தான். 2005-ம் வருஷத்துக்குள்ளே ரஜினி கல்கியா வெளிப்படுவார் என் மூலமா!”– எஸ்.பி. அண்ணாமலை

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment