Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, 25 July 2016

அள்ளி, அள்ளி உண்ணி அத்வைதம் தெறியா வினவுகிறாய், உள்ளி போல் வாழ்வை வைத்து நீரைப் போல தெளிவாய் இரு ! நிம்மதி உண்டு ! அழுக்கு நீரை உண்டு அமிழ்த நீரை தரும் தென்னையை போல !

அள்ளி, அள்ளி உண்ணி அத்வைதம் தெறியா வினவுகிறாய், உள்ளி போல் வாழ்வை வைத்து நீரைப் போல தெளிவாய் இரு ! நிம்மதி உண்டு ! அழுக்கு நீரை உண்டு அமிழ்த நீரை தரும் தென்னையை போல !
தெளிவு !
தெளி திறன் இருந்தால் ! தெளிந்த நீரைப் போல ! மாசற்ற கடவுளின் அன்பை போல ! உன் தாயின் நித்சலமான தூய அன்பைப் போல !
என் மிகைபடுத்த முடியாத பேரன்பைப் போல உணர் ! தெளிவாக இரு !
அழுக்கு நீரை குடித்து அமிழ்த நீரை தரும் தென்னையைப் போல துன்பங்கள் ஆயிரம் வந்தாலும் பிறர் துயர் களைய நினை !
எதிலும் தெளிவான பாதையை தேர்ந்தெடு !
தெளிவான மன நிலையில் முடிவெடு !
ஒரு வழிப் பாதையில் செல் ! அழைத்து செல்ல என் சத்திய கரங்கள் காத்திருக்கிறது. எல்லாம் உன்னால் முடியும். வலிமையும், வளமையும் உனக்குள்ளே ! நீயே எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா ! பனையிலும் , தென்னையிலும், வாழை மரத்தின் உள்ளேயும் அமிழ்த நீர் வைத்தேன் !
நாட்டு வாழை தண்டின் சாறு, சோற்று கற்றாழை சாறோடு சிவப்பு கார் அரிசியில் உள்ள தவிடு கலந்து, பனை வெல்லம் சேர்த்து, மண் சட்டியில் மூன்று மணி நேரம் ஊற வைத்து சாப்பிடு ! உணர்வதற்கு பக்குவம் வரும் !
தர்மம் செய்து பிறருக்கு உதவியாக இருந்து சத்திய பாதையில் நடந்தால் தான் உன்னை தூய்மையாக்க முடியும். நீ எந்த விரதம், உபதேசம், தவம், தியானம் இருந்தாலும் நீ நினைத்த இலக்கை அடைய முடியாது.
தியானம், யோகா என்று சமீப காலமாக புலம்புகிறாய். யாரும் அந்த சக்தியை பயன்படுத்தி கடவுளை பார்த்ததாக, தன்னை உணர்ந்ததாக கூற நான் காணேன். எந்த தூய்மையான நீரும் உன்னை சுத்தப்படுத்தாது. உன் பாவம் தீரும் வரை நீர் உனக்கு நன்மை செய்யாது.
நீர் புணிதம் தான் ! என் கரங்களில் தவழும் நீரால் இறந்த உயிரை கூட திருப்பித் தருவேன் ! என் கரங்கள் சத்தியம், எந்த காரியம், எந்த வழிபாடு செய்தாலும், உன் மனம் ஒருமுகப்படவில்லை என்றால் நீ முழுமையடைய முடியாது.
பெண் முழுமை பெற்றவள். அதனாலே பெண்ணை அறிய முற்படு. போக பொருள் என்று நினைக்காதே ! தியானம், யோகா என்பது என்னை நினைப்பது தான். கடவுள் தான் எல்லா காரியமும் செய்கின்றான் என்பது தான் யோகத்தின் அடிப்படை !
உன் பூஜை முறைகள் எல்லாம் அரை நாழிகை இன்பமாக இருக்குமே தவிர நிரந்தரமான தீர்வை தராது. உன் வழிபாடுகள் , பூஜை, தியானம், யோகம், தவம் எல்லாம் எதற்கும் உதவாது !
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடு ! நீ துன்பப்படவே இந்த யுகம் வந்தாய். ஆனால் உன் துன்பம் துடைக்கும் வழியும் இங்கே உண்டு ! நீ நடனத்தையும், நாட்டியத்தையும் பார்த்து பொய்யனாக வாழ்கின்றாய்.
பொய் உடலுக்கு வேஷம் போடுகிறவனை கடவுள் என்று சொல்லி பாலாபிஷேகம் செய்கிறாய். உழைப்பவன் துன்பத்தோடும், உட்கார்ந்து சுகம் காண்பவன் உழைப்பவனை சுரண்டவும் நான் கண்டேன் ! நான் எல்லாவற்றையும் பொய்த்து போக வைப்பேன்.
விதிக்கு முன்னால் இறக்க வைப்பது உன் கர்மா தான் ! மீண்டும் பிறப்பெடுக்க ஆசை கொள்ளதே !
நீரின் நற்தன்மையை உணர் !
காற்றின் திசை கவனி !
நீரின் திறன் கவனி !
தாவரத்தின் தன்மை கவனி !
தவறுக்கு மன்னிப்பே கிடையாது என் அரசாங்கத்தில் !
உன்னுள்ளே நான் இருக்கின்றேன், நீ உலகமெல்லாம் தேடுகிறாய்.
உன் 333 நாடி நரம்பின் சூட்சுமம் தெரியும் எனக்கு ! எல்லாம் தெரிந்து கொண்டு உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்னை அடையாளம் காண உன்னால் முடியாது. தேவர்களுக்கு என் விஷ்வரூபம் தெரியும். உனக்கு தான் என்னை யாரென்று தெரியவில்லை.
உன் மனசு கோட்டை ! உன் புத்தி காவல் ! உன் தெளிவு வெளிச்சம் !
மன சுத்தம் தான் இங்கே தேவை !
உண்மையும், நேர்மையும் தான் தெளிவை தரும் !
மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல். உனக்கு நீயே கேள். அது தான் தலை சிறந்த உபதேசம் ! குருவும், கடவுளும் உன் தாய் தந்தையுமே ! அவர்களை மண்டியிட்டு வணங்கு. வெட்டி பேச்சிலும், வீண் வார்த்தை ஜாலத்திலும் காலம் கழிக்காதே ! என்னை தோண்டி பார் ! உண்மை புரியும் ! எல்லா நேரத்திலும் மனிதனுக்கும், ஜீவராசிகளுக்கும் தொண்டு செய். இதுவே உன் கர்மா. எப்போதும் சீரான நிலையில் மனதை வை !
ஆசை அகற்றப்படாமல், அனுபவிக்கபடாமல் இருக்க வேண்டும். ஆசை தோன்றியதும் அனுபவம் துவங்கிவிடும். ஆசை முடிந்தவுடன் அனுபவம் மறைந்துவிடும் ! ஆதலால் ஆசை அகற்றினால் போகாது. மறுபடியும் வேறு வழியில் வேறு ரூபத்தில் ஆசை வன்முறையுடன் வரும். அதை உற்று நோக்கு ! எண்ணங்கள் தோன்றும் போதே அதை மறுத்துவிடு ! நினைவுகளை அகற்று. உனக்கு கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது.
உன் விதியின் பயனால் உனக்கு கிடைக்க விதி இருந்தாலும் உன் கர்மா அதை தடுக்கும். ஆகவே உன் கர்மா போக பாடுபடு ! நல் குருவை தேர்ந்தெடுத்து உனக்குள் வெளிச்சம் தேடு !
குரு இல்லா வாழ்வில் மலர்ச்சி இல்லை. இங்கே நல் குருவை நான் காணவில்லை. எதிர்பார்த்து சேவை செய்யும் கர்ம குலத்தை நான் பார்த்தேன்.
என் நாமம் உனக்கு தெளிவு தரும் தெளிந்த நீரைப் போல.
தெளி , திறன் இருந்தால் !
அணுவுக்குள் அணுவானவன் இநன்யா !

No comments:

Post a Comment