Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 15 July 2016

நன்னீரிலே நலம் வைத்தேன் நாயகன் நான் ! வெண் நீரிலே பிறந்தவன் வேதனையாய் வாழ்கின்றான் ! சுத்தாமிர்தம் (நீர்)

நன்னீரிலே நலம் வைத்தேன் நாயகன் நான் ! வெண் நீரிலே பிறந்தவன் வேதனையாய் வாழ்கின்றான் !
சுத்தாமிர்தம் (நீர்)
தாகத்தை தீர்க்கின்ற நன்னீரை வணங்கு ! நலம், வளம் பெறுவாய் ! மீண்டும் நீரை பற்றி எழுத காரணம் உண்டு ! நீரில்லையேல் நீ இல்லை. நீயில்லையேல் நானுண்டு ! நீரை பற்றி இன்னும் ஆயிரம் புத்தகம் எழுதலாம். இலையிலே நீர் புக பாராதவனிடம் என்ன சொல்வேன் ?
எதையோ வணங்கி திக்கு தெரியாமல் அலைகின்றாய் ! என் செல்ல குழந்தையே, உணரடா !
கங்கைக்கு மேலான அமிர்தம், சுத்தாமிர்தம், சுகம் தரும் அமிர்தம், ஏழு வகை புணித நீரிலும் உயர்ந்த அமிர்தம், இதுவரை இந்த உலகத்தில் யாரும் கொடுக்காத, கிடைக்காத புணித அமிர்தத்தை தர நான் காத்திருக்கின்றேன்.
பொறுத்திரு ! கால நேரம் வந்தவுடன் உன்னை தனியே அழைத்து தருவேன், என் ஆத்மார்த்தமாக ! உலகத்தில் யாருக்கும் இதுவரை கொடுத்ததில்லை.
நல்லாரை நான் காணவில்லை. எங்கே ஒரு மூலையில் இருந்தாலும் அவன் கர்மாக்களோடு சேர்ந்து கர்மா செய்கிறான். உணர வைப்பேன். பின் தெளிவாக்கி என் அமிர்த நீரை தருவேன். பின் ஞானக் குலங்களாக மாறும். மாடு, மனை, வீடு, வயல் , தோட்டம், திறவு, மஹால். மன்னர் வாழ்வு , கடல் செல்வம், கணிந்த பொக்கிஷம், ஆயுள், ஆரோக்கியம், அமைதி, ஆணந்தம், பத்னி, குரு, யாக பவ்யம், நிம்மதி, ஞானம், நல் அறிவு, தீர்க்க தரிசனம், அதிகாரம், ஆத்ம பலம் ஆகிய அனைத்தையும் தரும் நான் கொடுக்கப் போகின்ற புணித நீர் !
இப்போது என் தர்ம குலங்கள் என்னை உணர ஆரம்பித்துவிட்டனர். சந்திரனிலும், நட்சத்திரத்திலும் நான் இருப்பதை இன்னும் உணர்வார்கள். இன்னும் நிறைய அதிசயங்களை காண்பார்கள். என் தர்ம குலமே உனை வாழ வைப்பேனடா ! வாடாத பொருள் மூன்று படைத்தேன் ! சுத்தமான பொருள் ஏழு படைத்தேன் ! உணராமல் அலைகின்றானே என்று பிரபஞ்ச நாயகன் என் தந்தை சொல்வார்கள். இதன் அர்த்தம் என்னவென்று கேட்பார்கள். நான் விளக்கம் சொல்வேன். நீ படைக்கும் சூட்சுமம் தெரிந்தவன் என்பதால் எல்லாம் அறிவாய். எனை பார்த்தவன் எப்போது அறிவானடா என்று சொல்வார்கள்.
நான் உணர வைப்பேன் என்று என் தந்தையிடம் சபதம் செய்து யுகம் வந்தேன் ! காற்று, நீர், மலர், தேன், பெண், இளநீர், கோமியம், இந்த ஏழு சுத்தமான பொருளும் உனை அறிய வைக்கும். தெளிய வைக்கும். பெண் சுத்தமானவள். அவள் கருவறை தூய்மையானது. அவள் தன்னை தானே மாதா மாதம் சுத்தப்படுத்தி தூய்மைப்படுத்துகிறாள். நீ தான் தீட்டு என்று ஒதுக்குகின்றாய்.
கருவறையை வணங்காமல் கல்லறையை வணங்குகின்றாய். பின் சில்லறையை உண்டியலில் போட்டு கல் அறையை வணங்குகிறாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
நீயும் கருவறையில் இருக்கும் போது வெண் நீரில் தான் இருக்கின்றாய். சுத்தப்படுத்தி, தூய்மைபடுத்தியே வெளியே வருகிறாய். காற்று மலரின் வாசத்தை மகரந்தத்தை எடுத்து கரை சேர்ப்பது போல உன் உயிரின் வாசத்தை அறிய முற்படு !
காற்றும், நீரும் தன்னைத் தானே சுத்தப்படுத்தி தூய்மைபடுத்தியே உனக்கு நற்செயல் செய்கின்றன ! அதே போல நீயும் நல் தர்மா செய். கர்மா செய்தால் நான் அடித்து திருத்துவேன். நான் உளர்வதாக நினைக்காதே. உணர் என்று தான் எச்சரிக்கின்றேன்.
இனி நீரின் , காற்றின் தாண்டவம் மிகுதியாக இருக்கும் ! தொன்னீரிலே (கடல்) துயரம் வரும் ! நீ கண்ணீருடன் கையேந்த நான் கண்டேன். இதில் கரை சேர்பவன் உணர்வுடன் இருப்பான்.
ஒரு துளி கழிவு நீரிலே உதயமானவன் நீ. கருங்குழிக்கு சொந்தமானவன் நீ. கண் மூடி எதை தேடுகிறாய் ?
இல்லறத்தை சரியாக நடத்த தெரியவில்லை. நீ பிறருக்கு போதனை செய்ய புறப்பட்டுவிட்டாய். ஏனடா இந்த அலட்டல் ? இன்பம், இன்பம் என்று தேடிய பின் சலிப்புற்று பின் என்னை தேடுகின்றாய். ஏன் முதலிலே என்னை தேடினால் என்ன ?
உன் குழந்தைக்கு உன்னை வணங்க கற்றுக் கொடு . நல் குருவை தேடக் கற்றுக் கொடு. கடவுளை தேட கற்றுக் கொடு.
நீ இறப்பற்றும், பிறப்பற்றும் இருக்க நான் கற்று தருவேன் !
நான் வேஷமிட்டு உன்னை ஏமாற்ற வரவில்லை. உன் வேதனை தீர்க்க வந்தேன். உன் உயிர் தான் உனக்கு காற்று, நீர் மூலமாக தண்டனை கொடுக்கிறது. எப்போது உன் நெஞ்சு கூட்டுக்குள் மனம் பந்து போன்று சுழலவில்லையோ, அப்போது உன்னை உணர்ந்துவிட்டாய். ஞான நிலை அடைந்துவிட்டாய். எனை போல ஆணந்தமாக வாழ தெரிந்து கொள்வாய்.
உணரடா !
காற்றும், நீரும் நானே !
ஒளியும் நானே ! ஒலியும் நானே !
அகிலத்தை ஆட்டி படைக்கும் ஒனியும் நானே !
தற்பொழுது அழித்து கொண்டிருப்பது ஒனி ! உன் சரீர திமிரை விதவிதமாக நோய் கொடுத்து அழித்து கொண்டிருப்பது ஒனி. இந்த ஒனி என்பது கடவுளால் அனுப்பப்பட்ட வைரஸ். இது இந்த யுகத்தை, கர்மத்தை துவஷம் செய்து அடித்து திருத்தி தான் மேலே செல்லும்.
நான் காற்றாய் நீராய் இருக்கின்றேன் !
எனை எதுவும் மீறாது. நீ என் அருகிலே இருப்பதால் உன்னை எதுவும் ஏதும் செய்யாது.
இது சத்திய வார்த்தை ! நிச்சயம் !
நான் அமிழ்தமடா !
சுத்தாமிர்தம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment