Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி பதினெட்டு ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி பதினெட்டு :-- 
அன்பே நிகழ் காலம் என்றால் அதுவே உண்மையாகும்.
தோல்விகளில் துவண்டு கிடக்கின்ற மனிதன், உலகத்தாரையும் உலக சார்புகளையும் தான் குறை கூறி கொண்டு இருக்கின்றானே தவிர தானே அந்த தோல்விக்கு முழுக் காரணம் என்பதை ஒருபோதும் அறிவதில்லை.. கடவுள் சன்னதியில் புலம்பி அழுகின்றான்.. தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் புலம்பும் மனிதனுக்கு நிகழ் காலத்தில் வாழும் அன்பே வடிவான இறைவன் அந்த நொடியே தீர்வு தருகின்றான்.. ஆனால் நிகழ் காலத்தில் வாழ தெரியாத மனிதன், தனக்கு கிடைத்ததை அடையாளம் காண முடியாமல், இறைவன் கொடுத்த அத்தனையும் புறகணிக்கின்றான்.. இறைவன் நிகழ்காலத்தில் இருகின்றான் என்பதை புரிந்து கொள்ள மனிதனுக்கு முடிவதே இல்லை.. காரணம் கடந்த கால அனுபவமான எண்ண ஆதிக்கத்தில் அடிமையாக உள்ள மனிதன் நிகழ் கால சுதந்திரத்தை அனுபவிக்கவே முடிவதில்லை.. நிகழ் காலமே சிவம் நிலை என்று எத்தனை சிவ பாடல்களை கற்றாலும், மனிதன் சவ நிலை நோக்கி தான் திரும்பி பார்த்து பயணப் படுகிறான்... நிகழ் காலத்தில் நிற்க தெரியாத, நிற்க முடியாத மனிதன், இறைவன் கொடுக்கும், கொடுத்துக் கொண்டே இருக்கும் நிலையை உணர முடியாத அவல நிலையில் உள்ளான்.. எப்பொழுதோ ஒருவேளை குருட்டு வாக்கில் நிகழ் காலத்தில் விழும் போது, இறைவனுடைய அருளை பெறுகின்ற போது, தனக்கு எந்த நிலையில் அது கிடைத்தது என உணர முடியாமல் தவிக்கின்றான்.. நான் பெற்றேன் பெற்றேன் என பூரித்து மகிழும் பக்தன் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன் என்று மகிழ்வோடு இருப்பதை காணவே முடிவதில்லை.. பக்தியின் உச்சத்திலே பயணப்பட்ட பிரசித்தி பெற்ற பக்தகோடிகள் நிலையும் அப்படியே.... காரணம் நிகழ் காலத்தில் நொடி பொழுது கூட நீடிக்க முடியாத மனிதன், எதிர் காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ சென்று விடுவதால் நிகழ் கால பெருமை, அதனுடைய மகிமை அறியாது போய் விடுகிறது.. நிகழ் காலத்தை பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் அதை கடந்த கால அனுபவ நிலையாகிய எண்ண ஆதிக்கங்களில் கேட்பதால் நிகழ் கால செய்திகள் கடந்த கால வண்ணம் பூசப் பட்டு அந்த செய்திகளின் உண்மை நிலை கெட்டுப் போய் விடுகிறது.. எண்ண ஆதிக்கங்களால், இறைவனே சத்தியத்தை வழங்கினாலும், அது பலன் அற்று போய் விடுகிறது.. ஆகவே மனிதன் எண்ண ஆதிக்கம் எதுவும் அற்ற தோன்றா நிலை அனுபவமாகிய நிகழ் காலத்தை அனுபவப் பட வேண்டிய அவசியம் முதலில் தேவைப் படுகிறது... அப்பொழுத்து தான் நிகழ் காலத்தில் அகப்படும் இறைவன் தரிசனம் நமக்கு கிடைக்கும்... பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதே இறை தரிசனம் ஆகும்.. அதுவே நிகழ் காலம் ஆகும்... அதுவே எல்லா செய்யக்கூடிய, செய்யும், செய்யப் போகும் மூலாதாரம் ஆகும்.. எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்று ஆகும்.. நிகழ் காலம் என்பது அந்த ஒன்றே..
நமக்கு ஒரு சொகுசு கார் வேண்டும் என்று விரும்புகிறோம்.. இறைவனிடம் மண்டியிட்டு,அழுது, பிரார்த்தனை செய்கிறோம் .. இறைவன் நேரில் வந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நான் தருகிறேன் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்.. கார் என்ற ஒன்றிலே கற்பனையில் திளைத்து சதா காலமும் பிரார்த்தனை பண்ணிய மனம், கார் என்ற எண்ண பதிவில் பலமான காரணத்தினால், கார் ஒன்றை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்றே பட் என்று சொல்லும்.. இறைவன் நம்மை ஏதோ ஒன்றை சொல்லி ஏமாற்றி விடுவானோ என்ற ஐயப்பாட்டில் அனைவரும் கார் வேண்டும் என்றே கேட்பார்கள்.. பின் கார் சம்பந்தப் பட்ட அனைத்தையும், ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள்... எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டும் பெற விரும்பவே மாட்டார்கள்... இறைவனுடைய விருப்பமே மனிதனுடைய பூரண தேவைகளை பூர்த்தி செய்யும் கருணையை உடையவன்..... ஆனால் அவன் விருப்பத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. எண்ண ஆதிக்கங்களால் நம் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பெற வேண்டியதை பெறாமல் குறைவு பட்ட ஒன்றையே பெற்று பெற்று அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..
எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சரணாகதியில் இறைவன் முன், இறைவன் கொடுக்க நினைப்பதை அந்த நிகழ் காலத்தை இழந்து, கடந்த கால எண்ணப் பதிவுகளில் சிக்கி, எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒரு அரிய, அற்புத ஒன்றை பெறாமல், அற்ப சொற்பமான ஒன்றை பெற்றுக் கொண்டு அல்லல் அடைகின்றோம்... இப்படியாக நிகழ் காலத்தின் பெருமையை உணர்ந்து நிகழ்கால தொடர்பு உள்ளவர்களை தான் சிவநிலை பெற்றவர்கள் என்கிறோம்... இப்படி இருப்பவர்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பார்கள்.. வற்றாத செல்வம் உடையவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு வாரி வழங்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.. எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை நிகழ் காலத்திலே இறைவனிடம் பெற்றவர்கள் மட்டுமே வற்றாத செல்வம் பெற தகுதி பெற்றவர்கள்.. அதனால் அன்பும் நிகழ் காலமும் ஒன்று என அறியும் அறிவு நமக்கு வேண்டும்.. அந்த அறிவு தோன்றா நிலையில் மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது... மனிதன் நிகழ் காலத்தில் இருக்கின்றான் என்றால் அவன் தோன்றா நிலையில் பூரண சரணகதி தத்துவத்தில் இறைவன் முன்நிலையில் எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்றை கிடைக்கப் பெற தகுதி உடையவன் ஆகிறான்..
அந்த ஒன்று வேறு ஒன்றும் இல்லை.. அது எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றல் தான் என்று சொல்லவும் வேண்டுமோ ?
நிகழ் காலத்தில் இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெற முடியாதவர்கள், அன்பை பற்றி பேசலாம்.. ஆனால் அன்பாய் இருக்க முடியாது.. காரணம் அன்பாய் இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லாததே... எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று பெறாததாலே, கொடுக்கும் தகுதியை இழந்து விடுவதால், அவர்கள் அன்பாய் இருக்க முடியாது.. நிகழ் காலத்தில் ஆற்றலோடு அறிவும் பெறுவதால் தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் தங்கள் அன்பின் செயல் பாட்டினை வெளிப் படுத்துவார்கள்...
முடிவாக நிகழ் காலத்தில் மட்டுமே இறைவன் இருக்கிறான்; நிகழ் காலத்தை கெடுப்பது கடந்தகால எதிர்கால எண்ண ஆதிக்கங்கள்; நிகழ்காலத்தில் பெற்ற ஆற்றலால் மட்டுமே ஒருவன் சகலத்தையும் பெற முடியும்; அப்படி பெற்றவன் ஒருவனே அன்பாய் இருக்க முடியும்; இதனால் அன்பே நிகழ் காலம் என உணரப் படுகிறது... நிகழ் கால தொடர்புக்கும் சித்தர்களுக்கும் மிக நெருக்கம் உள்ளது.. அவர்கள் அளவற்ற ஆற்றலை நிகழ் கால தொடர்பின் மூலமே பெற முடிந்தது... மேற் சொன்னவற்றை நன்கு நினைவில் கொண்டு தோன்றா நிலையில் இருக்கும் கால அளவினை படிப் படியாக பயிற்சியின் மூலம் விரிவாக்கம் செய்து அன்பே வடிவாய் சித்தராக முனைவோமாக....

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment