Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

சித்தர் ஆவது எப்படி ? பகுதி நாற்பத்தி எட்டு ;;; மர்ம யோகி

சித்தர்ஆவதுஎப்படிபகுதி நாற்பத்தி எட்டு :--  உறுதியின் இறுதிக்கானஉருகல் 
*********************************************
ஒரு அன்பரின் ஆதங்கம்
Ellam nandraaga unarntha pinbum, payirchi seiyya sombal padugirathu manam, oru ketta palakam athuvagave marainthu vittathu , but practice panni 4 days aagirathu .... Uruthiyana nilai vendum iraiva ... Ellavatirkum uruthi illamaye karanam .எல்லாம் நன்றாக உணர்ந்த பின்பும் பயிற்சி செய்ய சோம்பல் படுகிறது மனம். ஒரு கெட்ட பழக்கம் அதுவாகவே மறந்து விட்டது.. ஆனால் பயிற்சி பண்ணி 4 நாட்கள் ஆகிறது.. உறுதியான நிலை வேண்டும் இறைவா.. எல்லாவற்றுக்கும் உறுதி இல்லாமையே காரணம்..
ஒரு அன்பரின் மன உருகலின் மூலம் வெளிப்பட்ட உண்மை... புத்தியாக உள்ள விழிப்பு நிலை பற்றியும் அதுவாகவே உள்ள அக குருவை பற்றியும் இன்னும் ஆழமாக அறிய வேண்டிய திருக்கின்றது... மனதில் கனல் நிறைந்து இருக்கும் போது, புத்தியை சார்ந்து புத்தி சொல்லும் பிரகாரம் வேலை செய்கிறது... ஒருவர் அறியாமையின் விளைவாக ஒரு கெட்ட பழக்கத்தில் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம்.. அதனால் அவதிக்கு உள்ளான அவர் அவதியில் இருந்து மீள வழி தெரியாமல் தவிக்கும் வேலையில், தன் அவதிக்கு காரணம் தான் கொண்ட கெட்ட பழக்கமே என உணர்ந்த பின் புத்தி அதனை பிடித்துக் கொள்கிறது.. என்ன தான் மனம் அந்த கெட்ட பழக்கத்தை பலநாள் பயின்றாலும், புத்தி அதனை பிடித்துக் கொண்டு உறுதியாக நிற்கும் போது மனம் அந்த புத்திக்கு பணிந்து புத்தி சொல்வதை ஏற்றுக் கொண்டு அந்த கெட்ட பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.. புத்தியினுடைய உறுதி, அந்த மனம் அந்த கெட்ட பழக்கத்தில் கொண்ட உறுதியை காட்டிலும் அதிகமாகும் போது மட்டுமே மனம் அந்த கெட்ட பழக்கத்தை விட்டு விட சாத்தியமாகும்.. டாஸ்மார்க் கடையில் உள்ள ' குடி குடியை கெடுக்கும் ' என்ற வாசகத்தால் புத்தி, மனதினுடைய உறுதியை காட்டிலும் அதிக உறுதி கொள்ளாத வரை, மனிதன் குடி பழக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பான்..
நன்றாக உணர்ந்த பின்பும் பயிற்சி செய்ய சோம்பல் படுகிறது மனம் என்றார் மேலே சொன்ன அன்பர்.. நினைத்தல் உணர்தல் நெகிழ்தல் என்ற மூன்று செயல்பாடுகளில் ஒரு எண்ணம் ஊடுருவி பாய்ந்து ஒரு நெகிழ்சியை புத்திக்கு கொடுக்கா விட்டால், புத்தி அந்த எண்ணத்தில் உறுதி கொள்ளாது.. அந்த நெகிழ்சியை ஏற்படுத்த தடையாய் இருக்கின்ற வலுவான மனதை முதலில் மென்மை அடைய செய்து அதை தொடர்ந்து புத்தியை வலு அடைய செய்யவேண்டும்.. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என நிகழ்தவே சுவாச ஒழுங்கில் பயில வேண்டும்
சுவாசத்தில் உள்ள சூரிய கலையில் மனம் மென்மை அடைந்து பின் முற்றிலும் தன் ஆதிக்கத்தை படிப் படியாக பயிற்சியின் சமயம் இழந்து விடுகிறது.. சந்திர கலையில் சுவாசத்தை உள்வாங்கும் போது உறுதி பட வேண்டிய ஒன்றை ஏற்றி வைக்கும் போது, அந்த ஒன்று புத்தியில் உறுதியாகிறது.. இந்த வகையில் மன உறுதியை காட்டிலும் புத்தி உறுதி சுலபமாக பலப் படுகிறது.. எப்பேர் பட்ட கெட்ட பழக்கத்தையும் நீக்கக் கூடிய உபாயம் நம் சுவாசத்தில் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம்.. எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்தமாக நடுநாயகமாக நம் அககுருவாகிய புத்தியை பலப் படுத்தி விட்டால் வேண்ட தகாதவை அத்தனையும் நினைத்த மாத்திரத்தில் நீக்கி கொள்ள முடியும்..
சுவாச ஒழுங்கில் சூரிய கலையில் மனதை மென்மை அடைய செய்து, சந்திர கலையில் மதியின் வலுவினை பெருக்கி அககுருவை எழசெய்வதின் மூலம் வேண்ட தகாத எவையும் தகர்த்து எறிய செய்திட முடியும்..
உறுதியான நிலை வேண்டும் இறைவா என வேண்டி கொள்வோர் எவரும் முதலில் இறைவன் நமக்கு கொடுத்துள்ள வரங்களை எண்ணி பார்க்க வேண்டும்.. இறைவன் என்னை நன்றாக படித்து இருகின்றார் என திருமூலர் சொன்னது போல் சத்தியமாக இறைவன் நம்மை நன்றாகவே படைத்துள்ளான்.. ஒன்றை உணர்ந்து உறுதி கொள்ளவில்லை என்றால், அதற்கான உளவுகளை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.. உறுதி இறுதி நிலை அடைந்து விட்டதே அதாவது காணாமல் போய் விட்டதே என உருகி உருகி புலம்பவது மனதின் கபட நாடகம்.. உறுதிக்கு இறுதி சடங்கும் செய்து தேக இயக்கத்திற்கே முற்று புள்ளி வைத்து விடும் இந்த மனம்... எதிலும் உறுதி அடைய சுவாசமே உறு துணை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.. முதல் சுவாசப் பயிற்சியின் பலனை அந்த சுவாச பயிற்சிக்கே அளித்து சுவாச பயிற்சியில் உறுதி கொள்வோம்...

உறுதியின் இறுதி நிலைக்கு ( உறுதி காணாமல் போன நிலைக்கு ) உருகாமல் உறுதியே இறுதி என்று உருகி நின்றால் நெகிழ்ச்சியின் விளைவாக அககுரு தோன்றி நம்முடைய இயலாமையை முழுமையாக போக்கி, உறுதிபட முன்னேறுவோம்... ஆரம்ப சுவாச பயிற்சியில் பெற்ற பலனை, ஆற்றலை, அந்த சுவாச பயிற்சியின் உறுதிக்கு பயன் படுத்துகின்ற போது, அதை விட உயர்ந்த விவேகம் எதுவும் இல்லை... இந்த நுணுக்கமே நம் அக குருவின் முதல் தீட்சை அல்லது உபதேசம்..... அந்த முதல் தீட்சை உபதேசத்தை முதலில் கைகொண்டு நம் நிறை நிலை மனித பயணத்தில் விரைவாக முன்னேறுவோமாக....

No comments:

Post a Comment