Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

சித்தர் ஆவது எப்படி ? பகுதி நாற்பத்தி ஒன்பது ;;;மர்ம யோகி

சித்தர் ஆவதுஎப்படி ? பகுதி நாற்பத்தி ஒன்பது
******************************************************
புலனும் பொறியும்; பழமையில் எழவேண்டிய புதுமையும்
இரண்டு அன்பர்களின் வேண்டுதலின் ஆதாரத்தில் எழுந்த ஞான கருத்துக்கள்
வேண்டுதல் ஒன்று:- ஐயா வெளிச்ச தோடு தொடர்பு உடைய ஆரா பற்றி சற்று பகிருங்களேன்
பதில்:== ஐந்து புலன் பொறிகள் மூலம் மனதை திசை திருப்பும் விசயங்கள் மட்டுமே நமது ஆன்மீகத்தில் வெளிச்சம் எனக் கூறுகிறோம்.. நீங்கள் சொல்லும் ஆரா ( Aura ) போன்ற சூட்சம சக்தி தோற்றங்கள் தேவையான கனலை பெருக்கிக் கொண்ட உள் மனதிற்கு மட்டுமே உணர வாய்ப்பு உள்ளது.. அவைகள் பொறிகளால் பிடித்துக் கொள்ள முடியாது.. புலன்களுக்கு மட்டுமே புலப்படும்.. அதாவது சூட்சம தேக அமைப்பான புலன்களுக்கு மட்டுமே புலப்படும்.. தூல தேக அமைப்பான கண் காது மூக்கு செவி நாக்கு போன்ற பொறிகளுக்கு தெரியாது.. தெரிந்து கொண்டதை எல்லாம் மற்றவர்களுக்கு காட்டலாம்... ஆனால் புலப்பட்டதை மற்றவர்களுக்கு புலப்படுத்தமுடியாது.. வலி அன்பு சுவை என்பதெல்லாம் புலனாகும் விசயங்களே.... புலனாகும் கடவுளை, ஆரா போன்ற சூட்சம சக்திகளை ஒருவர் தனக்கு தானே புலப்படுத்திக் கொள்ளலாமே தவிர பிறருக்கு தெரியப் படுத்த முடியாது.. ஆனால் இன்றைய ஆன்மீகம் எல்லாம் தெரியப் படுத்த முயற்சி செய்து தோற்று போய் கொண்டே இருக்கிறது.. அககுரு ஒன்றே புலப்படுத்தும் ஆற்றல் உடையவர்.. அககுருவை ஒன்றையே பலப்படுத்துவதோடு ஆன்மீகம் நின்று விட வேண்டும்.. அதை விட்டு விட்டு, பொறிகளுக்கு முடியாததை, தெரியப் படுத்த முயற்சி செய்தால் முழுமையான ஏமாற்றமும் விரக்தியும், பலவீனமுமே மிஞ்சும்.. மர்ம யோகத்தின் பணி மனம் தாண்டிய நிலையில் உள்ள எதையும் புலப்படுத்தும் ஆற்றல் உடைய அக குருவை அடைவதே... ஆனால் விஞ்ஞான சூட்சம சக்தியால் பிடிப்படும் ஆரா தோற்றங்கள் நிழல் வடிவங்கள்.. அககுருவால் புலப்படுவதே நிஜ வடிவங்கள்.. என்ன ஆச்சரியமாக உள்ளதா ? உண்மை அதுவே.. நிஜமே முழு தன்மையை காட்டும்..
---------------------------------------------------------------------------------------------------------------
வேண்டுதல் இரண்டு:-- தங்களிடமிருந்து அற்புதங்களை பெற காத்திருக்கிறோம்..நன்றி அய்யனே Marma Yoogi
பதில் :--- ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதனும் அற்புத படைப்பு தான்.. விழிப்பு நிலையிலே உணர வேண்டிய புதுமை நிலை, ஏனோ மன நிலையில் நாம் அதில் பழமை அடைந்த விட்ட காரணத்தால் அதன் மகிமை இழந்து இருக்கின்றோம்.. எந்த வகையில் பார்த்தாலும் நம் உயிரை விட புதுமை இந்த பிரபஞ்சமாகிய அண்டத்தில் எதுவும் இல்லை எனலாம்.. ஆனால் நாம் தான் அந்த உயிரோடு தொடர்ந்து வாழ விரும்பவில்லை.. குடிகாரர்களும் புகைபிடிப்பவர்களும், நல்ல உதாரணமாக இருந்தாலும், மற்றவர்களும் உயிரை பாதிக்கும், ஏதோ ஒரு கெட்ட மன பழக்கத்திற்கு அடிமைகளாகவே உள்ளனர்.. எந்த ஒரு அற்புதமும் சில மணி நேரத்தில் பழமையாகி விடுகிறது.. ஆயிரக்கணக்கான அற்புதங்கள் நடுவே மனிதன் வாழ்ந்து வந்தாலும், அவற்றின் புதுமை தொலைத்து விட்ட காரணத்தினால், பழமை ஆக்கி கொண்ட மனிதன், மிகவும் சலிப்படைந்த நிலையில் இருக்கிறான்.. மீண்டும் மனிதன் அற்புதங்களை கண்டு களிக்க வேண்டும் என்றால் பொய்யும் கற்பனையும் கலந்த கருத்துக்கள் தான் வர வேண்டி இருக்கிறது.. ஏனென்றால் உண்மை அனைத்தும் ஏற்கனவே வெளிப் பட்டு பழமையாகி விட்டன.. ஆகவே தான் பொய்யும் கற்பனையும் கலந்த கருத்துக்கள் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வருகின்றன,,. கற்பனையாதலால் எவ்வளவு பொய்யை வேண்டுமானாலும் கலந்து கொள்ள சட்டத்திலே இடம் உண்டு.. அவை எல்லாம் உண்மையென அழகாக நிஜத்தை காட்டிலும் வண்ணம் பூசப் பட்டதால் அப்படியே நிஜமாகவே நம்பப் படுகிறது..
எல்லையில்லா வானமும் அற்புத உயிர் ஆற்றலும், அந்த உயிர் ஆற்றலோடு கணத்திற்கு கணம் நிகழ் கால தொடர்பாகிய சுவாசமும், எப்படி அற்புத நிலையில் இருந்து மிக அற்பநிலைக்கு வந்து விட்டது என்பது புரியாத புதிர்.. அற்புதங்களை தேடி அலைய வேண்டியது இல்லை.. இப்பொழுது தேடிகின்ற அற்புதங்கள், பழமையான அற்புதங்கள் முன்னால் கால் தூசி அளவே.. இனி ஒரு புது அற்புதங்களை தேடவே கூடாது... தேடினால் பொய்யும் கற்பனையும் கலந்த அற்பங்கள் தான் நம் முன் தோன்றும்... கடவுளை தேடவும் தோன்றவும் நமக்கு அவசியம் இல்லை.. ஏற்கனவே அவருடன் வாழ்ந்து இருப்பது மிகவும் பழமை ஆகி விட்டதால் நம் மனம் பற்றாமல் இருக்கிறது.. எவ்வளவு தான விஞ்ஞானமே நிரூபித்தாலும், பழமையின் காரணமாக மனம் அதை பிடிக்காமல் இருக்கிறது..
ஞானம் என்பது ஏதோ புது நிலையை அடைவது அல்ல.. பழமையிலேயே அந்த பிரமாண்டமான புதுமை, வெளிப்படும் போது, தன்னோடு காலகாலமாய் இருந்த அந்த பழமையே கடவுள் என்றும் இறை ஆற்றல் என்றும் உணரும் போது, அந்த பழமையின் மிக பிரமாண்டமான புதுமை உணர்வு தான் ஞானம் அடைந்த நிலை.. இறைவனை நிகழ்காலத்திலே கண்டு கொண்டே இருக்கும் தொடர்நிலை.. பழமையை உடைத்து அந்த நிமிடமே வெடித்து சிதறும் புதுமையை காணும் அந்த நேரம் தான் ஞானம் அடைந்த நேரம்...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment