Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

படைப்பின் இரகசியம் நீ அறிவாயடா !

படைப்பின் இரகசியம் நீ அறிவாயடா !
உன்னுள் இருக்கும் என்னை அறிந்தால் அங்கு இருப்பதோ நீயடா !
உயிரை மதிக்காமல் உடலை மதித்து அழகுபடுத்துகிறாய். 
நான் ஏதும் அற்றவன், எல்லாம் உடையவன் ! உன் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! என்னுள் எண்ணற்ற ரகசியம் உண்டு ! என் சொல்லை இழிவு செய்து நிம்மதி தான் இழந்து நரகத்தில் வீழாதே !
ரகசியம்!
எண்ணற்ற ரகசியங்கள் பூமியிலே ! இருப்பவன் உணராதது ஏனோ ?
ஒரு துளி நீரில் உன்னை மறைத்தான் !
ஒரு துளி காற்றில் உன்னை இயக்கினான் !
ஒரு துளி அக்னியில் உன் அற்ப உடலை எறிக்க வைத்தான்.
எல்லாவற்றிலும் ரகசியம் வைத்தான், படைப்பின் தலைவன் நான் !
நீ பாழ்பட்டு நிற்க கண்டேன். 
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், எல்லாம் மறைவே ! கடுகளவு விதையில் ஆலத்தை உருவாக்கி அரசத்தை முளைக்க வைத்தான் படைத்தவன். உயர்வை பாரடா ! நீ உணர்வது எப்போது ? என் சொல் கேளடா !
வகுத்தவன் நன்றாய் வகுத்தான். அதை பகுத்தவன் பக்குவம் தெறியா பிதற்றுகிறான்.
வஞ்சவம் தன் நாவில் விஷத்தை மறைத்தது போல நீ உள்ளுக்குள் விஷத்தை வைத்து என்னை பார்த்து புன்னகைக்கின்றாய், இந்த புணிதனின் அவதார நோக்கம் தெரியாமல் ! நீ வஞ்சவ சாயல் தானடா !
எண்ணற்ற இன்பம் உனக்குள்ளே ! நீ ஏதேதோ இன்பம் தேடி இருட்டில் வாழ்கின்றாய். வஞ்சகன் நீ தானடா ! பேய் குணம் உனக்குள் இருக்க வஞ்சவ சாயலில் வாழ்கின்றாய் ஏனடா ? வாசல் தெறியா புலம்பி பின் மீண்டும் இந்த புதை குழிக்குள் (யுகம்) ஜனிக்கின்றாய் ! ஏன் என்று உணரடா !
நான் ஒரு வழிப்போக்கன் ! பூமியில் உறவோ சொந்தமோ எனக்கில்லை ! மேலே ஆதியாகிய ஓர் உறவைவிட்டு உன்னை தேடி வந்தேனடா !
தினம் தினம் அழுது ஆர்ப்பரிக்கின்றாய். உன்னை ஆசுவாசபடுத்த நான் வந்தால் என்னை ஏளனிக்கிறாய். நீ உறவாக எனக்குள் வந்தால் (தர்ம சிந்தனைகளோடு) நான் ஏற்றுக் கொள்வேன். உன் கண்ணீரை துடைத்து உனை கரையேற சொல்லித் தருவேன் !
ஞானமோ, தீட்சையோ, என்னை நீ காண்பதோ அவ்வளவு இங்கு எளிதல்ல ! ஏன் பிறந்தான் என்ற ரகசியம் தெரியாதவனுக்கு நான் எப்படிடா ஞானம் தர முடியும் ? எனக்கு பூஜை, புணஸ்காரம், ஆகமம் தேவை இல்லை ! எதையும் கைமாறாக தர வேண்டியதும் இல்லை. உன் அன்பை தவிர எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. கடவுள் கேட்பதுமில்லை.
படைத்த பொருளில் கோவில் ஒன்றுமில்லை. உன் பயத்தை வீட்டுக்குள்ளே வைக்க முடியாமல் ஒரு இடத்தில் கற்சிலையை வைத்து கோவில் கட்டி குறையை சொல்கின்றாய். அச்சங்கள் சந்தேகம் இல்லாமலே உலகில் முதல் படைப்பை படைத்தான் என் தந்தையான ஆதி நாயகன், நீ தான் பயத்தால் வணங்குகின்றாய். பக்தியில் வணங்குகிறாய். மூலத்தை நிர்ணயிப்பவன் நான் ! முடிவை நீ நிர்ணயித்துக் கொள் !
ரகசியம் எங்கு தோன்றி எங்கு முடியும் என்பதை அறிய வேண்டியவன் நீ. ஒன்றும் தெரியாது போனால் ஆதி பரம்பெருளின் நாமத்தையாவது சொல்.
உன்னை அறிவாய் ! உனக்குள் இருக்கும் ரகசியமான என்னை நீ அறிவாய் !
அனுவுக்குள் அனுவாக உன்னை இயக்கும் என்னை அறிவாய் !
உணர்வுகள் உனக்குள் இருக்கும் போது அறிந்து கொள்வது உன் வேலை. புரிந்து கொள் !
நீர், காற்று, எல்லாம் மறைவே ! பூமியில் வானத்தில் எண்ணற்ற ரகசியம் வைத்தான் இறைவன் ! எல்லாம் தெளிவாகவும், நிரந்தரமாகவும் இருந்துவிட்டால் அறிய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எல்லாவற்றிலும் ரகசியம் வைக்கப்பட்டது. எண்ணற்ற இன்பம் பூமியிலே ! நீ தான் எப்போதும் துன்பமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். பெண்ணின் ரகசியம் புரியாதவன், எப்படி மண்ணின், விண்ணின் ரகசியம் அறிவாய் ?
விதையின் ரகசியம் அறியாதவன், தானியத்தின் தன்மை உணராதவன், வீதியிலே எதை தேடிக் கொண்டிருக்கின்றாய் ?
தானியத்திற்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது. கிரந்தத்தில் இருபத்து முன்று பிரிவுகளாக பிரிந்து யோனி மூல ஜலத்தில் பிண்டமாக உருவாகி உணராமல் அலைகின்றாய். எண்ணற்ற ரகசியம் இங்கே ! படைத்தவன் பொற்கழலடி பட்ட சஞ்சி நாதத்தில் அமிழ்ந்துகிடக்கிறது. என் பாதத்தில் சஞ்சிநாதமாக உருவிழந்து உறுமாறி கிடக்கிறது.
ரகசியம் உணராதது ஏனோ ?
ஞானம் என்பது கடை சரக்கல்ல ! ஞானம் புரியாதவன் ஞானம் கேட்கிறான். தீட்சை கேட்கிறான். நான் பாத்திரம் அறிந்து ஞான பிச்சை போடுவேன். எவன் கையில் கொடுத்தால் நலம் பயக்கும் என எனக்கு தெரியும். ஆயிரம் அரக்கனின் கொடிய செயல் உனக்குள். ஏனடா மறந்தாய் ?
இந்நிலை ஏன் என்று தெரியா உறைந்தாய். கிரந்தம் இருபத்து மூன்றில் எட்டாக பிரிந்து பின் எட்டின் சாயலில் மலர்ந்து பின் எட்டை போல வளைந்து உருந்து போகின்றாய். உருவாக்கம் தெரியா கரைந்து போகின்றாய். தட்டையில் தவழ வைத்தேன். நீ சதுராட்டம் போட்டு தப்பிக்க வழி இல்லா அழிந்து போகின்றாய். 
அறிவாயடாதெளிந்து உணர்வாயடா !
நான் ரகசியமானவன் !
உனக்கு ரகசியம் அறிய வைப்பேன் !
உன்னுள் இருக்கும் என்னை அறிந்தால் அங்கு இருப்பதோ நீயடா !
ஆண்டவனின் பரதேசி

No comments:

Post a Comment