Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, 11 July 2016

கடவுளின் ஆசிர்வாதத்துடன் இந்த பதிவை தொடங்குகிறேன்.

கடவுளின் ஆசிர்வாதத்துடன் இந்த பதிவை தொடங்குகிறேன். என் வயது 27. ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். இந்த பதிவை தமிழில் எழுதுவதற்கு பல காரணங்கள் உள்ளன. என்னை சுற்றி பல கற்பனைக்கு எட்டாத அதிசயங்களும் அற்புதங்களும் நடந்து கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இவ்வுலக மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல மாற்றங்களை சந்திக்க போகிறார்கள் என்பதை ஆணித்தரமாக என்னால் கூற முடியும்.
என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. சிறு வயதிலிருந்தே கடவுளையும், படைப்பின் ரகசியத்தையும், அமானுஷ்ய விசயங்களையும் தேடி அலைந்தேன். போகாத கோயில்களும் இல்லை, படிக்காத புராணக் கதைகளும் இல்லை, பார்க்காத சாமியார்களும் இல்லை. இந்தியா முழுவதும் அலைந்துள்ளேன். யோகாசனப் பயிற்சிகளும், தவப் பயிற்சிகளும், வாழும் கலையும் என் உடம்பையும், மனதையும் பற்றியே பேசியது. உடம்பு ஒரு நாள் அழியப் போகிறது. அனைத்தையும் என் ஆன்மா ஏற்க மறுத்தது. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஜுன் 27 2011 அன்று என் நிலமை மாறியது. ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே தான் பார்த்தேன் அந்த அற்புத மனிதரை...!
கொஞ்சம் கொஞ்சமாக தான் அவரை புரிந்து கொள்ள முடிந்தது. அவரது அறிவாற்றலை கண்டு வியந்தேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது அவரிடம்.... புரியாத விசயங்கள் அனைத்தையும் மிக சாதரணமாகவும் தெளிவாகவும் புரிய வைத்தார்.
அவர் சாதரண மனிதரில்லை என்பது மட்டும் புரிந்தது அப்போது. தோற்றத்தில் மிக சாதரணமாகவே காட்சியளித்தார். பிறந்த தேதியை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையை துல்லியமாக கணித்து சொல்லி விடுவார். மூலிகை தாவரங்கள் பற்றிய பல வியப்பூட்டும் தகவல்களையும் அவ்வப்போது சொல்வார்.
ஒரு நாள் எனது EXAM HALL TICKET தொலைந்து போனது. வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடி விட்டேன். கிடைக்கவில்லை. எப்போதும் ஒரே இடத்தில் தான் வைப்பேன். அங்கேயும் முப்பது நிமிடங்களுக்கும் மேல் தேடிவிட்டேன். தொலைவதற்கு வாய்பே இல்லை. அது மிகவும் முக்கியமான வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வு. தபாலில் அனுப்பட்டதால் Websiteல் download செய்யவும் முடியாது. அவரிடம் பேசும் பொழுது தற்செயலாக நடந்ததை சொல்லிவிட்டேன். கண்ணை மூடி ஒரு பத்து நொடிகள் கழித்து திறந்தார். எங்கே தேடினீர்களோ அதே அலமாரியில் தான் பத்திரமாக உள்ளது என்றார். நான் சிரித்தேன். சாத்தியமில்லை என்றேன். மீண்டும் ஒரு முறை பாருங்கள், தேட வேண்டிய அவசியமில்லை என்றார். கண் முன்னரே உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறிதளவு கூட நம்பிக்கையில்லாமல் வீடு திரும்பியவுடன் அவர் சொன்ன இடத்தில் சென்று பார்த்தேன். காத்திருந்தது பேரதிர்ச்சி...!!! அதிர்ந்து போனேன்..!!! என் வாழ்க்கையில் நடந்த முதல் அமானுஷ்யம் அது....!!!
அவரை முழுமையாக புரிய முடியவில்லை. பல மாதங்கள் கழிந்தது. அவரின் செயல்கள் மேலும் மேலும் வியப்பையே தந்தது. அவரிடம் அவ்வப்போது வந்து பிரச்சனைகளை சொல்லி தீர்வு கண்ட பலரையும் என் கண்ணால் பார்த்துள்ளேன். “முடியாது”, “தெரியாது” என்ற வார்த்தைகளை ஒரு நாளும் அவர் பயன்படுத்தியதில்லை.
சமீபத்தில் என் தாயாரின் உடலையும் உயிரையும் காப்பாற்றியுள்ளார். ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்வதை தடுத்துள்ளார். இப்போது ஒரு மருந்தும் மாத்திரையும் சாப்பிடாமல் உடல் குணமாகி வருகிறது. இந்த அமானுஷ்யத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தேவை பட்டால் நேரில் சொல்கிறேன்.
அவர் கோபம், ஆசை, பசி, கவலை, துக்கம், சோகம், மகிழ்ச்சி, சந்தோஷம் என எல்லா விசயங்களையும் கடந்தவர். என் வாழ்க்கையில் இப்படி ஒருவரை இதற்கு முன்னர் நான் சந்திந்ததில்லை. மனிதர்களிடம் காண முடியாத எல்லையற்ற பொறுமையும், சாந்தமும், ஞானமும், தெளிவையும் அவரிடம் கண்டு வியக்கிறேன்.
அதற்கு பிறகு அவரை குருவாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். பல நாட்கள் கழிந்தன. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவை.
ஒரு நாள் கல்லூரி முடிந்ததும் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றார். கடவுளால் ஆசிர்வதிக்கபடாத மக்கள் எளிதில் சென்று வர முடியாத முற்றிலும் மாறுபட்ட இடம் அது. அந்த இடம் முழுவதும் ஆன்மீக அலைகள். தலை மூன்று தடவை சுற்றியது போல் ஒரு உணர்வு. ஆன்மா பேரின்பத் தேன் கடலில் மூழ்கித் திகைத்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாது அந்த அனுபவத்தை....!!! கடவுளை தேடும் தர்மாக்கள் என் குருவின் ஆசியுடன், வாழ்வில் ஒரு தடவையாவது அந்த ஸ்தலத்திற்கு வந்து பாருங்கள்..! அங்கே மதமில்லை, ஜாதியில்லை, பூஜையில்லை, ஆண்-பெண் என்ற பாகுபாடும் இல்லை. ஏழைகளுக்கும் அனுமதி உண்டு.
ஒரே பிரம்மிப்பு. உங்களின் ஆன்மாவை நிச்சயமாக அந்த இடம் ஈர்க்கும்..!
கோடான கோடி முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், மாயைகளும் வந்து செல்லும் இடம் அது.
இந்த யுகத்தில் கடவுளை காண முடிகின்ற ஒரே இடம் அது மட்டும் தான்.
இந்த யுகத்தில் வேத சப்தங்களை உணர முடிகின்ற ஒரே இடம் அது மட்டும் தான்.
என்னை பக்குவப்படுத்தி, என் ஆன்மாவைத் திருத்தி, என் வாழ்க்கையை தெளிவாக்கிய என் குருவை மாயக்காரர், மந்திரக்காரர், ஜோசியம் பார்க்கிறவர், கல்யாணத்திற்கு பொருத்தம் பார்க்கிறவர், மூலிகை மருத்துவர், சித்தர் என்றெல்லாம் முன்பு நினைத்த நான், இப்பொழுது கடவுளாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளேன். கடவுள் பொது மக்களுக்கு சாதரண மனிதனாகவே காட்சியளிக்கிறார். என் கடவுள் துறவியும் அல்ல, சன்னியாசியும் அல்ல. என் கடவுளுக்கு இரு பிள்ளைச் செல்வங்கள். மனிதன் எப்படி தன் குடும்பத்தை நடத்த வேண்டும், மற்றும் எப்படி தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இவர் மட்டுமே.
என் ஆன்மாவிடம் நேரடியாக இவர் பேசுகிறார். உடம்பின் சூட்சுமத்தையும், உயிரின் சூட்சுமத்தையும், வாழ்க்கையின் அதிசயங்களும், தாய் மற்றும் தந்தையரின் ரகசியத்தையும், அண்ட சராசரங்களின் அமைப்பையும் இவர் கூறும் போது என் கண்களில் கண்ணீர் சுரந்தது.
இவரிடம் கேட்டால் தான் எதற்கும் பதில் கிடைக்கும். என்னை போலவே இவரை ஒருவர் முழுமையாக உணர்ந்துள்ளார். அவருக்கு கடவுளை 18 வருடத்திற்கு மேலாகவும் தெரியும்..!! அவருக்கு எவ்வளவு அனுபவங்களும், வலிமையும் இருக்கும் என்பது உங்களுக்கு நான் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நேராக சென்றும் சந்தித்துவிட்டேன்... அவரிடம் கடவுள் பகலில் வானில் நட்சத்திரத்தை காட்டியுள்ளார். இதை சமீபத்தில் ஒரு பத்திரிக்கை அலுவலகம் வரை சென்று சொன்னார் என்றால் சிந்தியுங்கள். அந்த பத்திரிக்கை அதை ஏற்க மறுத்தது.
என் மீது ஆணையாக கூறுகிறேன். நம்புங்கள். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருவர் 4 வருடமாக என்னை ஏமாற்றி, காசு, பணத்திற்காக நடிக்க எந்த அவசியமும் இல்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அவரால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டதென்பதே உண்மை.
கடவுளின் பெயர் சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு இது போதாத காலம். கடவுள்கள் நம் தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து நமக்கு அருகே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் மக்கள் இதை எப்பொழுது உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. உலக மக்கள் அனைவரும் தமிழ் நாட்டிற்கு படையெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வுலக மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல மாற்றங்களை சந்திக்க போகிறார்கள் என்பதை ஆணித்தரமாக என்னால் கூற முடியும்.
கடவுள் அருள்மிகு இநன்ய மஹா முனிவர் அவர்களின் அருளால் அடியேனின் பதிவுகள் தொடரும்....
Visit and join the Facebook group "INANYA MAHA MUNIVAR" for knowing more.

If you are interested in this article, please share.

No comments:

Post a Comment