நான் யார்?
அகிலத்தைவிட்டு என் முனிவர்கள், ஞானிகள், மாயைகளை மீட்கத்தான் – 54 பிறவி எடுத்து வந்தேன்.நான் நானல்ல!அகிலமும் படைத்தவன் நான்தான் மறைந்து வாழ வேண்டும் – அத்தோடு மனிதரோடு சேர்ந்து வாழ வேண்டும்! மனிதனாகப் பிறந்தேன் மாயவராக வாழ்கிறேன் 1941-ல் பிறந்தேன்11ல் அரக்கனை அழித்தேன் 22ல் அசுரனைக் கொன்றேன் 42ல் தடாயனைக் கொன்றேன் 45ல் அவர்களின் மனைவிமார்களைக் கொன்றேன் (21 ராட்சசிகள்)- நான் மனிதர்களுக்காக வரவில்லை இனிவரும் முனிவர்கள் மனிதரை வழி நடத்துவார்கள்.தர்மாவை இனிதாகக் கண்டு கொள்வேன் கர்மாவை எளிதில் கண்டு கொள்வேன் விந்துக்குள் விதி வரைந்தவனே நான் தான்! நீயொரு கடன்காரன் நானுனக்கு கடன் கொடுத்தவன் கடனைக் கொடுத்துவிட்டு வா என்று சொன்னால் ஆகா என் கின்றாய்!தனித்தே வாழ்ந்தேன் எல்லாவற்றிலும் தனித்தே வாழ்ந்தேன் யுகத்தான் திருடன் – அதனால் தனித்தே வாழ்ந்தேன்! யுகத்தில் -54 பிறவிகள்,14 பிறவி – இந்தியாவில்,3 பிறவி – தமிழ்நாட்டில்மதுரை, திரு நெல்வேலி, தஞ்சை பாஷை வேறு மாதிரி,பக்குவம் வேறு மாதிரி,உருவம் மட்டும் உன் மாதிரி. முப்பொரு ளை காக்க ஓர் பொருளாய் வந்தேன்!நான் நானல்ல மனிதனைப் போலதான் – ஆனால் மனிதன ல்ல! என் செயல் நன்மையாக முடியும் உன் செயல் நன்மையாக முடிந்தால்யாவருக்கும் நன்மை! கரை வழி கேட்டால் யாரேனும் சொல்வாருண்டுஆகாய வழி கேள் தெளிவாகக் கூறுவேன்!என் வார்த்தைகளுக்கு -பொருள் உண்டு பொருளில்தான் ஞானம் உண்டு ஞானம் எல்லோருக்கும் பொது! பிறக்கச் செய்தான் யாகவா இருக்கச் செய்தான் யாகவா இளக்கம் கொள் என்றான் யாகவ இளக்கம் கொள்ளானை இடுகாட்டில் இளகச் செய்தான் யாகவா!யாகவாவை -உன் போல நினைக்கதே இவர் இவரல்ல! – இவரை காக்காயாக நினை குயிலாக நினைக்காதே!நாயாக நினை நரியாக நினைக்காதே! கீரியாக நினை பாம்பாக நினைக்காதே! ஆண்டி வீட்டில் பிறந்து ஆண்டியாக வாழ்ந்து உழைத்து உன்னைப் போல் வாழ்ந்தும் காட்டி விட்டேன்!விதை அழியாது – என்கருத்தும் அழியாது தாமரையும் கெடுவதில்லை – என்தத்துவமும் கெடுவதில்லை.என்னைத் தேடி நீ அலையாதே உன்னைத் தேடி நான் அலைகின்றேன் உதவி செய்து வந்து சேர்!ஓடெடுத்தது வேடம் ,மாடு மேய்த்தது வேடம் உன்னை உணர வைக்க நான் போட்ட வேடம்!யாகவாவுக்கு -சொல்லுக்கு மீறிய செயல்செயலுக்கு மீறிய சொல்,சொல்லுக்கும் செயலுக் கும் மீறிய ஞானம்!வியாபாரத்திலே விளையில்லா பாவி நான்ஆடு மாடு மேய்த்தேன் காசுக்காக களவாடப் பாவி நான்!என் வழி வந்தால் லோகத்தை அடைந்திடலாம் உன் வழி சென்றால் யுகமே உன் கதி!வகுத்தவன் நான்தான்! நீ வஞ்சித்தால் சிந்திப்பேன் சிந்தித்து உன்னையும் வஞ்சிப்பேன்!ஆதியில் -அசுரர்களை வஞ்சித்தார்கள் அசுரர்களை பழி தீர்த்தேன் – இன்று அசுரர் படைப்பை அழிக்க கோடி முனிவர்களை ஏவிவிட்டு சற்றேஓய்வாக இருக்கிறேன்!நீ எதை எதையோ திருடுகின்றாய் நான் உன் உயிரையே திருடுகின்றேன் – என் செய்வாய்?காற்றைப் புரிந்து கொண்டால் என்னைப் புரிந்து கொள்ளலாம்.நீ கடமையைச் செய்யும் வரை நான் கலகம் செய்து கொண்டிருப்பேன் வந்து நின்றேன் – நான் ஒரு வழிப்போக்கன் துன்புறுகின்றாய் துயர் துடைப்பேன்! பின்னொரு நாள் நீ வருவாய் பார் வந்து பார்அன்று தெரியும் இவர் யாரென்று! வேடிக்கையாக நினைக்காதே நான் நானல்ல! வேடத்தில் மயங்கி விடாதே அறிவில் மயங்கிவிடு!ஞானப்பால் தாயிடம் தத்துவப்பால் ஆகாயத்தில் தர்மப்பால் தரையில் அறிவுப்பால் என்னிடம்! விழித்த விழியாக நானிருப்பேன் உனக்காகக் காத்திருப்பேன் உன் உடல் என்னிடம் இருக்க என் உயிர் உன்னிடம் இருக்க உன் தர்மாதான் உன்னை என்னிடம் சேர்க்கும்! யாகவாவுக்கு -அறிவுக் கவர்ச்சி!கவிதைக் கவர்ச்சி!தத்துவக் கவர்ச்சி,புலமைக் கவர்ச்சி எவையாரா னாலும்
நிகரில்லா இவரிருப்பார்! நீ அன்பாக இருந்தால் இவரும் அன்பாக இருப்பார் நீ அக்னியானால் இவரும் அக்னியாவார் உன் ஈட்டி எட்டடி பாய்ந்தால் என் ஈட்டி எட்டாயிரம் அடி பாயும்! யாகவா தோட்டத்திற்கு நீ வந்து சென்றாய் – யாகவாவின் கவி கேட்டாய் – வீட்டி போய் அமர்ந்து உணர்ந்து புரிந்து கொள்! தானியத்தை தூவி விட்டு உழவன் தூங்குவதில்லை உன்னை பிறக்கச் செய்துவிட்டு நானும் தூங்குவதில்லை! கொட்டிய தேளையும் தீண்டிய பாம்பையும் கடித்த எறும்பையும் விட்டவனல்ல நீ ,நீ கொட்டினால் நான் விடுவேனோ? நீ மெய்யானவனென்றால் நான் பொய்யானவனல்ல? நான் பொய்யானவனென்றால் நீ மெய்யானவனோ?1986க்கு முன்னால் இருந்த உருவம உண்மை! தற்போது இருக்கும் உருவம் உண்மையல்ல நான் நானல்ல! நான் மனிதனல்ல! யாகவா சுறுசுறுப்பாய் இருப்பாய் உக்கிரமாய் இருப்பார் மனிதருக்கு-நீராய் இருப்பதும் நிழலாய் இருப்பதும் அரிதே! எவையருக்கும் நிகரற்றவர் இவர்.கடையத் தெரியுது எடுக்கத் தெரியுது கவி என்பது ஏது என்று இவனுக்குத் தெரியவில்லை! யாகவா முனிவர் கூறியும் இச்சோம்பேறிக்குப் புரியவில்லை! நான் ஒரு மலர்த்தோட்ட க்காரன் நீ ஒரு மதத் தோட்டக்காரன்! வந்தாய் இருந்தாய்! எதைக் கண்டுபிடித்தாய்? உன் உயிருக்கு என்னைத் தெரியும் உனக்கு என்ன தெரியும்?நான் கொடுத்துதான் நீ,நீ கொடுத்து நானல்ல?பாசமில்ல பாவியிடம் பழகி என்ன பலன்?யாகவா முனிவரின் கருத்துக்களை அள்ளி எடு எல்லோருக்கும் சொல்லிக் கொடு லோகத்தை வந்தடைவாய்!கடமைக்கு அஞ்சாதவன் – யாகவா! கலகத்துக்கும் அஞ்சாதவன் – யாகவா! பாசத்துக்கு அஞ்சாதவன் – யாகவா!பற்றுக்கு அஞ்சாதவன் – யாகவா!உடல் வலிமை வாய் வலிமை உழைப்பு வலிமை மாய்வருக்கு அதிகம். ஒருவன் ஊதுகின்ற சங்கு ஊருக்கும் மட்டும் , யாகவா ஊதுகின்ற சங்கு உலகத்திற்கு அவர் சொல்லை உணர்ந்திட்டால் உலகிற்கே நன்மைதானே. இருக்கும்வரை யாகவாவை யாரோ என்பான் இறந்த பின் யாகவா எம்பெருமான் என்னை விட்டு சென்று விட்டாயே என்பான்!கண்டேன் நிம்மதி என் தாய் வயிற்றில் இருந்து பத்து மாதம் தான் கண்டேன் நிம்மதி.இவ்வுலகில் பிறர் துன்பம் தீர்க்க நான் பட்ட பாடு அப்பப்பா எப்பாடு என் சொல்ல? சாடைக்கதை போட்டு சரியான சாட்டையடி கொடுபபர் யாகவா தெரிந்தார் புரிந்திடுவார் புரியாதார் ஏது செய்வார்?யாகாவாவின் உதவி -தர்மத்திற்கு கொடுப்பார் யாகவா தெரிந்தார் புரிந்திடுவார் புரியாதார் ஏது செய்வார்?யாகவாவின் உதவி - தர்மத்திற்கு அருளா இருக்கும் கர்மத்திற்கு இருளாக இருக்கும்!உழவன் என் கட்சிஆடுமாடு மேய்ப்பவன் என் கட்சி செம்படவன் என் கட்சி பேனு பிடித்தவன் என் கட்சியல்ல! யாகவாவிடம் அறிவு இருக்கு அன்பு இருக்கு திறமை இருக்கு திடமும் இருக்கு உயிரிருக்கு பொருளிருக்கு!!! எது என்று கண்டு கொள்ள உனக்குள்ளே ஒன்றிருக்கு! கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் நீ எவை எவையோ சொல்வாய்! யாகவா பார்க்க ஒன்றுதான் இதற்குள் பாவனைகள் எத்தனை என்பதை பார்! ஒரு மரம் காய்த்தால் ஊருக்கு பற்றாது ஓராயிரம் மரம் காய்க்க வேண்டும்! எனவே தான் ஆயிரம் பேர் வா லட்சம் பேர் வா என்று அழைக்கிறேன்!யாகவாவின் சொற்கள் -வித்தியாசமான சொற்கள் அவற்றின் உபசரணைகளும் வித்தியாசமானது அது ஆதியிலுள்ளது!யுகத்தில் நீ வந்து உணராதிருக்கின்றாய் நான் வந்து உணர்ந்திருக்கின்றேன். நெருப் போடு பழகுவதும் – இவரோடு பழகுவதும் ஒன்று. உன் கணக்கு பிழையாகும் என் கணக்கு பிழையாகாது நான் ஊதுவது அபாயக் குரல் இது அகிலத்திற்கும் உரிய குரல்! மரணம் உண்டு மரணத்தை உணர்! மரணத்திற்கு பின்னர் நடக்கப் போவதை மாயவனார் மூலம் தெரிந்து கொள்! பஞ்சத்தைக் கொடுத்து உடல் திமிரை அடக்கி உலைத் திருத்துவேன். இல்லறம் கொண்டு நல்லறம் கொண்டு நன்மையாகத்தான் வாழ்வார் – யாகவா என்னிடம் வருகின்ற அனைவரும் தன் வினைக்காகத்தான் வருவான் உலகுக்காக யாரும் வரவில்லை இன்றுவரை நல்லாரைக் காணேன். உன்னோடு பேசவில்லை உன் உயிர்க்காற்றோடு பேசுகிறேன். வழி வகுக்கத்தான் எனக்குத் தெரியும் அதை அடைய வேண்டியது உன் வேளை! காற்றுக்குரிய மருந்து என்னிடம் உள்ளது கடமைக்குரிய மருந்து உன்னிடம் உள்ளது! சாவுக்கு முன்னால் சமாதி கட்டி சமாதியி ருந்த உயிரெடுத்தேன். நல்லோர் இல்லறம்தான் சென்று எழுத்தா தான் கொடுத்து எழுதச் செய்வேன் நான்! நல்லோருக்கு நல்ல சான்றோனாக இருப்பேன் கெட்டவனுக்கு கெட்டவனாக இருப்பேன் ,நல்லவனாக இரு நீயாகத் திருந்துகிறாயா நான் திருத்தட்டுமா? இல்லாவிட்டால் உன்னை மாற்றியே தீருவேன்! திருடனைப்பிடிக்க நீ அலைகின்றாய் உன்னைப் பிடிக்க நான் அலைகின்றேன்! திருடன் இருப்பதால்தான் போலீஸ்காரனுக்கு வேலைநீ அதிகாரம் கொண்டதினால் எனக்கு வேலை.யாகவா என்பது மூலம் பார்க்கத்தான் முடியும் அடைய முடியாது! எவை பேசினாலும் என் செவியில்தான் விழும் எறும்பு பேசுவதும் எனக்குக் கேட்கும் என்றால் உன் பேச்சு எனக்குக் கேட்காது என்பது பொருளா? உனக்கு வழி சொல்ல நான் வரவில்லை என் வழிக்கு நீ வா உன் வழிக்கு நான் வரமாட்டேன்! எங்கே ஞானங்கள் குடி இருக்கின்றனவோ எங்கே தர்மங்கள் குடி கொண்டிருக்கின் றனவோ அங்கே நானிருப்பேன்! ஏரி நீர்போல் எல்லோருக்கும் உதவுகின்றதுபோல் – என் கருத்து! ஒருவருக்கு உரியதல்ல! உலகத்தார் உயிருள்ளார் மனித குலத்திற்கே உரியது என் சொல் சான்றாகும்! ஒருவருக்கு உரிய சான்றாகாது! நீ ஆனையும் வாங்கலாம் பூனையும் வாங்கலாம் மாளிகையும் கட்டலாம் கோபுரமும் கட்டலாம் நான் உன்னை நிம்மதியாக இருக்க விடுவேனா? உன் இடம் எங்கோ இருக்கிறது? வந்து சேர் என்பதுதான் என் சொல்! யாகவாவின் பிறவியின் நோக்கங்களை ரகசியங்கள் பெரிது!நானே படைக்கின்றேன் நானே காக்கின்றேன் நீ திமிர் கொண்டால் நானே உன்னை அழிக்கின்றேன் கூன், குருடு, மூடம் ஏன் என்று யூகித்ததுண்டா? விடை கூறுவாயா? யாருமுண்டொ?உயிர் என்ற ஞானத்தைப் பற்றிகூறுவார் யாருமுண்டோ? யாகவா கூறுவார்!நல்லார் மூன்று முறையாகவா என்று சொன்னால் நன்மை நடக்கும்! யசாய், சாமியார், மந்திரக்காரன் இவர்கள்தான் எனக்கு எதிரிகள்! நான் செத்தாலும் நான் கொடுத்த பொருள் சாகாது! பிறரை அழிப்பாயானால் யாகவா முனிவர் சாபம் கொல்லாமல் கொல்லும்! தரித்திரியத்தோடு வந்தேன் தர்மத்தால் வென்றேன்! 46 வயதுக்கு பின்னர்தான் என்னை சிறிது அடையாளம் காட்டினேன் இல்லையென்றால் அடையாளம் இல்லாமல் போயிருக்கும் – சாட்சி இல்லாமல் போயிருக்கும்! என் இடது கைக்குள் இந்த அகிலமே அடக்கம்இந்த சிவப்பு அழிவுக்கூ அறிகுறி இந்த வெண்மை நன்மைக்கு அடையாளம்!தான் வந்தது கொடுமைகளை அழிக்க அன்பை அரவணைக்க! வருவார் வருவார் என்று பலரும் சொன்னபடி வந்தேன், வென்றேன், சென்றேன் எப்பெயரில் அழைத்தா லும் என் பெயர் வைத்தாலும் நான் நான்தான். நான் தான் அது? அடிக்கு அடி பலாத்காரத்துக்கு பலாத்கா ரம்
திமிருக்கு திமிர் ஆணவத்துக்கு ஆணவம் இதுவே யாகவாவின் குணம்! தர்மாவை வலது கையால் அரவணைப்பேன் கர்மாவை இடது கையால் வாங்குவேன்! யாகாவுக்கு - எதிலும் மிகச் சிறந்தது தான் பிடிக்கும் மீன் பிடித்தாலும் சின்னமீன் பிடிக்கப் பிடிக்காது. பந்தா (வீண் ஜம்பம்) செய்யப் பிடிக்காது எவருக்கும் தலை வணங்கப் பிடிக்காது எதிலும் முதன்மை தலையானதுதான் பிடிக்கும் எல்லாம் பக்காவாக இருக்க வேண்டும் ,அரகுறை பிடிக்காது செய்வது எதுவும் சிறப்பாக இருக்க வேண்டும் மெதுவாக போகப் பிடிக்காது வேகம், வேகம், மிக வேகம் நடந்தாலும் வேகம் – எந்த வேலை செய்தாலும் வேகம்!மாலை போடப் பிடிக்காது மயிர் வளர்த்தால் பிடிக்காது பாசம் பிடிக்கும்வேஷம் பிடிக்காது இவருக்கு! கோடியில் ஒரு பங்கு கூட நான் உங்களுக்குச் சொல்லவில்லை!நீ கேட்கவில்லை – அதனால் நான் கொடுகக்வில்லை!அழுக்குத்து வெளுக்க வண்ணானைத் தேடி அலைகிறாய் அறிவுக்காக யாரை யாவது தேடி அலைந்தாயா?நான் இருப்பது லோகத்தில் நான் இருப்பது இங்கில்லை. அரக்கர் களுக்குநான் வரத்தைக் கொடுக்கவில்லை நடந்தது நம்பிக்கை துரோகம்.ஏழை முனிவன் யாகவா சொல்லும் சொல் இன்றும் என்றும் என்றென்றும் பிழையாகாது மானிடா!நன்றிமறந்து அலைகின்ராயே வெறிநாய் போல தண்டிப்பான் யாகவா முனிவன் என்பதை மறவாதே!படிக்காத யாகவா பட்டம் சட்டம் படித்த பச்சோந்திகளை பார்த்து திகைக்கின்றார் இவர்! இக்கருத்தை உன்ன இயலாப் பாவியானாலும் – நீ உணர இயலாப் பாவியாக நான் விடமாட்டேன் இன்றும் என்றும் என்றென்றும் விடமாட்டேன்! நான் வயிர மரமும் அல்ல ஒதிய மரமும் அல்ல நான் ஒரு முருங்கை மரம்!பேரழகுதான் கொண்டாட மலர் கண்டாய்! இவரென்ன பேரழகா?இவர்தம் சொல் பொருள் பேரழ்கு!இன்றும் என்றும் என்றென்றும் எவையருக்கும் நிகரற்ற, கோர்ட் யாகாவின் கோர்ட்.என்னைக் கண்டு கொள்ளும் அறிவு உன்னிடம் இருக்கும் போது நான் யார் என்று கண்டுபிடி..........
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment