Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி ஒன்று ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி ஒன்று :--- 
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் ஐந்து
ஒரு நண்பரின் கேள்வியால் அவசர அத்தியாவசியமான பதிவு
கேள்வி :-- சுவாச ஒழுங்கின் மூலம் மூலாதாரம் மற்றும் பிடரிக்கான பாதையானது மனக்கண்ணால் (பாவனை /கற்பனை)தானே உருவாக்கப்படுகிறது.?
மிக அற்புதமான கேள்விக்கான மிக சிக்கலான பதில்...
உப்பை நிஜமாகவே சற்று வாயில் போட்டு ருசி பார்க்கிறோம்... மிகவும் கரிக்கிறது.. அந்த கரிப்பினை தாங்க முடியாமல் துப்பி விடுகிறோம்.. இது முதல் அனுபவமான நிஜ அனுபவம்.. பின் மனதால் உப்பினை வாயில் போடுவதாக நினைத்துப் பார்க்கின்றோம்... உப்பு போடாமலேயே நாக்கில் நீர் சுரக்கிறது.. ஏதோ பழைய அனுபவ தாக்கத்தால் அப்படி அனுபவப் படுவது இரண்டாம் வகை அனுபவம்.. இது நிழல் அனுபவம்... உப்பு போல கரிக்கின்ற வேறு ஒரு பொருளின் சுவைத்த அனுபவித்த ஒன்றை நினைக்க வைத்து உப்புவின் தன்மையை உணர்த்தும் போதும் நாக்கில் சிறிது நீர் ஊறலாம்... இது மாயா அனுபவம்.. இந்த மூன்று நிலைகளிலும் உப்புவின் சுவைக்கு நாக்கில் ஓரு உணர்வால் நீர் ஊறுகிறது... உள் நகைத்தல் மூலம் குண்டலினி உள் மூச்சில் சக்தி கீழிலிருந்து மேலும் வெளி மூச்சில் மேலிருந்து கீழும் ஒரு உறுத்தலான உணர்வு உணர கண்டோம்,, அது ஒரு அடையாளம் காண ஒரு மாயா அனுபவத்தை தோற்றுவிக்கப் பட்டு சற்று உணரப் பட்டது.. ஆனால் அது நிஜ அனுபவமாகாது.. ஆனால் அது போல ஒன்று.. பலத்தில் மிக மிக குறைவான ஒன்று....
சுவாச ஒழுங்கில் தலையிலும் உடலிலும் பெறப் படும் தேங்கிய உணர்வும், தேடும் உணர்வும் ( spot feeling and moving or seeking feeling ) ஏற்படுவது நிஜ அனுபவமான முதல் வகை அனுபவம்.. தேங்கிய உணர்வு என்பது பெறப்பட்ட ஆற்றல் ஒரு இடத்தில் சேர்ந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தேங்கிய நிலையில் இருப்பது.. தேடும் உணர்வு என்பது தேங்கிய உணர்வு ஏதாவது ஒரு இடத்திற்கு குறிக்கோள் அற்று நகர்ந்து செல்வது.. அப்படி பட்ட தேடும் உணர்வைதான் முறையாகப் பயன் படுத்தி மூலாதாரத்திலிருந்து பிடறி நோக்கி பயணப் பட வைப்பதால் மிகுந்த பலனை பெற முடிகிறது..
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் அதிகப்பட்ட ஆற்றலால் பிடறிக்கும் மூலாதாரத்திற்கும் இடையே நடை பெறுவது நிஜ அனுபவம்.. அது சுவாச ஒழுங்கோடு இணைந்தே நடைபெறும்.. சுவாச ஒழுங்கோடு உடன் இருக்கும் விழிப்பு நிலையே. அந்த குண்டலினி சக்தியை நடத்தும்.. அது நிஜ அனுபவ உணர்வாக இருக்கும்.. சுவாச ஒழுங்கு கெட்டநிலையில் ஒழுங்கின்மை நிலையில் அது மனதால் நடத்தப் பட்டு அது நிழல் அனுபவமாக இரண்டாம் வகை அனுபவமாக இருக்கும்.. எந்த சுவாச ஒழுங்கு பயிற்சியை போதுமான அளவு செய்யாமல், படித்ததையும் கேட்டதையும் வைத்து கற்பனையிலும், மனோபாவத்திலும் செய்தால் அது மாயா அனுபவமான மூன்றாம் வகை சேர்ந்ததாகும்.. அதனால் மிகுந்த அளவு ஏற்படும் கால விரையத்தால், சலிப்பு அடைந்த மனதால் பயிற்சி துண்டிக்கப்படும்..
இந்த குண்டலினி பயணத்தை பயணிப்பவர்கள் தாங்கள் உணர்வது நிஜ அனுபவமா அல்லது நிழல் அனுபவமா அல்லது மாயா அனுபவமா என்பதை தங்கள் விழிப்பு நிலையால் மட்டுமே அறிந்து எச்சரிக்கையுடன் பயிற்சியை மேற் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.. சுவாச ஒழுங்கின் மூலமாகவே மட்டும் பெறப் படும் நிஜ அனுபவம் தடை படுமானால் மீண்டும் விழிப்பு நிலையால் சுவாச ஒழுங்கிற்கு வந்து பின் குண்டலினி பயிற்சி பயில வேண்டும்.. அப்படி பயில வில்லை என்றால் விரக்தி ஏற்பட்டு பயிற்சியில் நிரந்தர பிளவு அல்லது தொடர்பு அறுந்த நிலை உருவாகும்.. பின் மீண்டும் ஒட்டவே ஒட்டாது... மனம் அதற்கு ஆயிரம் காரணங்களை கூறி வாழ் நாள் முழுமைக்கும் தடை விதித்து கொண்டே இருக்கும்.. விழிப்பு நிலையான அக குருவின் துணை நீங்கிய சமயம் அனைத்தும் பாழாகி விடும்.. இந்த பகுதியில் அனைத்து இடைஞ்சலுக்கான தீர்வு கூறப் பட்டு உள்ளது.. ஒரு அன்பர் எழுப்பிய கேள்வியால் இந்த பகுதி உருவானது.. அவருக்கு அநேக நன்றிகள்...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment