Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி இருபத்தி ஏழு ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி இருபத்தி ஏழு:--- 
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் ஒன்று
சுவாச ஒழுங்கு பயிற்சி செய்யும் அன்பர்கள் தங்கள் தேகம் பெற்றுக் கொண்ட ஆற்றலை சூட்சம தேக பயிற்சியின் மூலம் சேர்த்து வைக்கும் பயிற்சியை கற்று தரப் பட்டது.. ஆனால் மோன நிலையில் அதை மறந்து போகும் தருவாயில் அதிகமாக கிடைக்கப் பெற்ற ஆற்றல் சூட்சம தேகத்தின் மிக முக்கியமான பகுதிகளின் வழியாக ஓட துவங்கும்.. அப்படி ஓட துவங்கும் அந்த ஆற்றல் ஒரு முறையில்லாமல் அதன் பயணப்பாதையில் எங்கோ ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கி எங்கே முடிவது எங்கே துவங்குவது என்று தடுமாறி கொண்டு இருக்கும்.. ஆகவே சூட்சம தேகத்தில் ஓடும் பாதையை, அதற்கு அடையாளம் காண்பித்து முறையான ஒரு ஓட்டத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்... இப்படி முறையான ஓட்டத்தின் மூலம் ஆற்றல் செல்லும் போது அது தேகத்தில் மையம் கொண்டுள்ள பஞ்ச பூத நிலைகளை, செம்மைப் படுத்தி முடிவாக பிரபஞ்ச ஆற்றலோடு கலக்க உதவி செய்யும்...
அப்படி ஒரு முறையான பாதையை அடையாளம் காணவே சில பகுதிகளை வெளியிட வேண்டிய அவசியம் ஆகிறது... முதலில் அடையாளம் காட்டி சற்று பயிற்சி செய்தால் சுவாச ஒழுங்கு மூலம் பெறப்படும் ஆற்றல் அதன் வழியாக பாயத் தொடங்கும்.. அதன் வழியாக பாயும் போது என்னென்ன மாற்றங்கள் நம் பஞ்ச பூத நிலைகளில் ஏற்படும் என்பதையும் காணலாம்..
எச்சரிக்கை :--- சுவாச ஒழுங்கிலே பயின்றி பக்குவப் படாதவர்களுக்கு இது பயன் படாது.. அதில் அதிகப் படியான ஆற்றலை பெறாதவர்களுக்கும் பயன் படாது.. பெற்ற ஆற்றலால் உடம்பில் முக்கியமாக தலையில் சில ஊரல்கள் உணர்வுகள் தோன்றியவர்களுக்கு மிகவும் பயன்படும்...
ஆறு ஆதார மையங்களில் முறையான முறையில் பயணப் படும் இந்த ஆற்றல் பத்து பயணப் பாதைகளை தேர்ந்தெடுத்து அதில் முறையாகப் பயணப் பட்டால் மட்டுமே மேன்மை அடைய முடியும்.. அந்த பத்துப் பயணப் பாதைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்..
முதல் மையமான மூல ஆதாரம் என்பது ஜல மல துவாரங்களுக்கு இடையில் உள்ளது.. இரண்டாவது மையம் தலையின் பின் பகுதியில் புருவ மத்திக்கு நேரே பிடரி என்ற இடத்தில் உள்ளது... முதலில் இந்த இரண்டுக்குமான பயணப் பாதையை பயிற்சியின் மூலம் அடையாளம் தெரிந்து கொள்ளவேண்டும்.. உள்நகைத்தல் என்ற பயிற்சியை சில வகுப்புகளில் கற்று தரப் பட்டது.. அதில் ஜீவ சக்தி மூல ஆதாரத்திலிருந்து தலைக்கு பயணப் படுவதை பெரும்பாலோர் உணர்ந்தனர்.. இப்பொழுது அந்த பயணம் மூல ஆதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகர்ந்து பிடரியை தொடவேண்டும்..
சுவாச ஒழுங்கில் சூரிய கலையாகிய வெளி மூச்சில் பிடரியிலிருந்து மூலாதாரத்தை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்... சந்திர கலையாகிய உள்வாங்கும் மூச்சில் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்.. இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது.. இது சுவாசத்திற்கு மிகவும் இயல்பானது.. மாற்றி செய்தால் பெரும் சிக்கல் ஆகி விடும்.. இது பத்து பயணப் பாதைகளில் முதல் பயணப் பாதை.. இதில் பூர்த்தி செய்த பின்பு தான் இரண்டாவது பயணப் பதையில் கால் எடுத்து வைக்க முடியும்...
இந்த மூலாதாரம், பிடரி என்பது என்ன வென்று பார்ப்போம்... சுவாசம் சூரிய கலையில் தோன்றா நிலையில் இருக்கும் போது இந்த மூலாதார மையம் தான் பிரபஞ்ச ஆற்றலோடு இசைந்து இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெறுகிறது.. வேறு எந்த ஆதாரத்திற்கும் அந்த சக்தி கிடையாது.. புருவ மத்திக்கு அறவே கிடையாது.. புருவ மத்தியில் மூலாதார தொடர்பை துண்டித்து அளவிற்கு அதிகமான நேரம் பயிலும் பொழுது தேகத்தில் அதிக சோர்வு உண்டாகிறது.. சில குருமார்களின் பயிற்சிகளில் இந்த சோர்வு நிலைதான் உருவாகிறது.. இதனால் தேகம் மிக விரைவாக பழுது அடைகிறது.. உடலில் சூடு என்பது தேகத்தில் ஆற்றலின் குறைபாடே என்பதை முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டும்... முறையற்ற பயிற்சியில் சூடு சம்பந்தப் பட்ட வியாதிகளீல் அவதி படுவது எதனால் என்றால் பயிற்சியில் சுவாசத்தின் மூலமாக தோன்றா நிலை ஏற்படாமல் அதனால் நமது மூலதார மையம் அதனோடு இசைந்து பிரபஞ்ச ஆற்றலை ஒழுங்காக பெற முடியாமல் போவதால் தான்.. இந்த சாதாரண அதிமுக்கிய இரகசியத்தை ஒரு போதும் மறக்காமல் இருந்து பயின்றால் மட்டுமே அதிகப் படியான ஆற்றல் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகரும்..
இந்த பிடரி என்பது நினைவகம்.. நான் யார் என்ற கேள்விக்கான பதிலை பல ஜென்மங்களின் அனுபவங்கள் வழியே ஊடுருவி பாய்ந்து பாய்ந்து அந்த பதிலுக்க்கான விளக்கங்களை விரித்துக் கொண்டே போகும்.. இந்த பிடரியை அடையாத ஆற்றல் இருந்தால் இரமணர் சொன்னது போல் நான் யார் என்ற கேள்விக்கான பதிலை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அறிந்து கொள்ளமுடியாது... பிடரி என்ற மையத்தை ஆற்றல் பூரணமாக அடையும் போது அந்த பதிலும் பூரணமாக கிடைக்கப் பெற்று பலம் வாய்ந்த இருப்பு தன்மையால் நாம் யார் என்ற கேள்விக்கான பதிலும் பூரணமாக கிடைக்கும்... இந்த முதல் பயணப் பாதையில் இடைப்பட்ட சக்கரங்களை ஒன்று சேர செம்மை படுத்தப் படுவதால் தேகமும் முழுமையாக நலம் பெறுகிறது.. அந்த சக்கரங்களில் நாம் அதிகம் நாட்டம் கொள்ள தேவை இல்லை... இதை சம்பந்தப் பட்ட கேள்விகள் எழுந்தால் தயங்காமல் கேட்டால் கிடைக்கின்ற எமது பதிலால் அனைவரும் பயன் அடைவார்கள்... எந்த பயிற்சியாக இருந்தாலும் அது சுவாச ஒழுங்கின் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும்.. இல்லையேல் எதுவும் பலனற்று போய் விடும்... சித்தர் நிலை நோக்கி பயணிப்போமாக.. வாழ்வோம் வளமுடன்...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment