Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி இரண்டு ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி இரண்டு :--- 
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் ஆறு
விழிப்பு நிலையின் விரிவு விளக்கம்
சுவாச ஒழுங்கிலே பெற்ற ஆற்றலை முறை படுத்துவதின் மூலம் பிடரி ஆதாரத்தில் ஆசைகளின் ஏக்கங்களின் தாக்கங்களை தணித்த அல்லது நீக்கிய நிலையில் மேலும் அந்த ஆற்றலை தலையின் உச்சி வழியாக புருவமத்தியை அடையும் போது என்ன பிரமாண்டமான மாற்றங்கள் வருகின்றன என்பதை கவனிப்போம்.. சிவனாரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் இந்த புருவ மத்தி ஆதாரம் அக்னியால் ஆனது.. முதலில் விழிப்பை பற்றி சற்று ஆழமாகப் பார்ப்போம்.. புத்தி என்பது தோன்றாநிலையாகிய பேரண்ட பேரறிவிலிருந்து உதிப்பது.. மனமோ தோன்றும் நிலையாகிய தேகத்தில் இருப்பது.. புத்தி காற்றின் அம்சமாகிய '' என்ற பூதம்.. மனம் நெருப்பின் அம்சமாகிய 'சி' என்ற பூதம்...
இந்த புத்தியும் அறிவும் சேர்ந்த நிலைதான் விழிப்பு நிலையான சிவ நிலை.. ஆதாவது 'சி' யும் '' வும் சேர்ந்த நிலை.. இந்த சிவநிலையான விழிப்பு நிலையில் மட்டுமே ஆற்றலும் ஆக்கமும் ஒருங்கே இணைந்து சீர் நிலைக்கு அதாவது சீரான முறையான பழுது இல்லாத நிலைக்கு எதையும் அழைத்துச் செல்லும்.. '' என்ற காற்று பூதம் அறிவையும், ஆற்றலையும் வழிகாட்டும் அக குருவான ஒரு இயக்கசக்தி.. 'சி' என்பது செயல் பட பயன் படும், மனம் என்ற ஒரு இயங்கும் சக்தி.. இயக்கும் ஒன்றும் இயங்கும் ஒன்றும் இணைந்தால் தான் எது ஒன்று செயல் படும்.. இயக்குவது இயங்க முடியாது... இயங்குவது இயக்க முடியாது.. இது தான் எல்லா சிக்கல்களுக்கும் காரணம்.. 'ச்' வும் 'வ்' வும் இணைந்தால் மட்டுமே எல்லாம் சீர் ஆகும்.. சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்றார் திருமூலர்.. புத்தியும் மனமும் இணைந்தால் மட்டுமே சீர் கெட்ட செயல்கள் தொலையும், அதாவது தீவினை மாளும் என்றார். பின்னர் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் என்றார் திருமூலர்.. ஆம் புத்தியும் மனமும் இணையும் போது நம் உயிரும் சீர் பட தொடங்கி தேவர் நிலைக்கு உயர்த்தபடுவர் என்றார்..
சரி.. இதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமானது எதுவென்றால், புத்தியாகிய விழிப்பு நிலை தான்.. மனிதனுக்கு இயல்பாய் இருப்பது மனம்.. பெற வேண்டியது புத்திதான்.. அதனால் தான் புத்தி முக்கியமாயிற்று... அந்த விழிப்புநிலை இல்லையேல் நெருக்கடி நிறைந்த சாலையில் சில அடி தூரம் கூட வாகனத்தை ஓட்டி செல்ல முடியாது... புத்தியின் முக்கியத்துவத்தை கருதியே வாசி யோகப் பயிற்சி முக்கியமாக விழிப்பு நிலையை பெருக்கக் கூடிய முறையில் வடிவமைக்கப் பட்டது... புத்தி பெருக்கத்தில் உணர்வும் பெருகி உணர்வின் கூர்மையால் எதையும் முன் கூட்டியே அறியும் திறமையால் எந்த பிரச்சனையும் முளையிலே கிள்ளி எறியக் கூடிய அறிவும் பெறுகிறோம்.. நுண் உணர்வால் நுண் அறிவு.. நுண் அறிவால் பிரச்சனையும் நுட்பமாக இருக்கும் போதே எளிதாக அதற்கு தீர்வு காணப் படுவதால் பிரச்சனையே இல்லாதது போல் தோற்றம் ஏற்படுகிறது..
எந்த செயலோடும் விழிப்பு நிலையும் தொடரவில்லையென்றால் அந்த செயல் நிலைக்காது.. தெய்வ தரிசனம் கண்ட பக்தர்கள், கடவுளை கண்டேன் கண்டேன் என்று புலம்புவார்களே தவிர, கண்டு கொண்டே இருக்கிறேன் என்று ஒருவரும் சொல்வார் இல்லை.. இதற்கு காரணம் சிவ கலப்பில் இல்லாததே காரணம்.. விழிப்பு நிலையை தொலைத்து விட்டதாலும் அதை தக்க வைக்க முடியாததாலும், இறை தரிசனமும் இழந்து விடுகிறார்கள்.. சொர்க்கத்தையும் பெற்று இழந்து விடுகிறார்கள்.. பேர் ஆற்றலையும் பெற்று பின் இழந்து மரணம் அடைந்து தானே போய் விட்டார்கள்.. விழிப்பு நிலை இல்லை என்றால் சித்தர் நிலையையும் இழந்துதான் போய் ஆக வேண்டும்... விழிப்பு நிலை தொலைந்தால் சிவகலப்பும் பிரிந்து உடைந்து விடும்.. பின் சவம் தான்.. அதாவது அநித்தியம் தான்... இப்படியான உயிருக்கு நாடியாக திகழும் விழிப்பு நிலை எப்படி சுழிமுனையில் மிகுந்த பெருக்கம் அடைந்து உயிர் ஆற்றல் விரிவடைகிறது என்பதை வரும் பகுதியில் பார்ப்போம்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment