Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி ஐந்து ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி ஐந்து 
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் ஒன்பது
சுவாச ஒழுங்கு என்ற சக்தி ஊற்று..
குழந்தை பிறக்கும் போது தேகத்தில் ஜீவ சக்தி ஊற்று மூச்சாக திறக்கப் படுகிறது.. இறக்கும் தருவாயில் அந்த ஊற்று அடைக்கப் படுகிறது... அண்ட சக்தி பிண்டத்தில் பாயும் போது அது குண்ட சக்தியாக அதாவது குண்டலினி சக்தியாக மாற்றம் அடைகிறது.. அதாவது லயப்பட்டு லயப்பட்டு ஒடுங்கி ஒடுங்கி ஒரு சுருண்ட சக்தியாக ஒடுக்க நிலை நோக்கி நகரத்தொடங்குகிறது.. ஒரு குறிபிட்ட ஒடுக்கத்திற்கு பிறகு மேலும் ஒடுங்க நினைக்கும் போது, அங்கு அழுத்தம் இறுக்கம் உண்டாக அதன் காரணமாக மீண்டும் விரிவடைய நினைக்கின்றது.. இதன் காரணமாகத்தான் மூச்சு உள்வாங்களும் வெளி விடுவதுமான செயல் பாடு நடக்கின்றது.. இந்த இறுக்கத்தின் காரணமாகத்தான் மனம் என்ற அதிவலைகள் இறுக்கத்தை குறைப்பதற்கான தேடலை துவங்குகிறது.. அந்த தேடல் இறுக்கத்தை குறைப்பதற்கான முயற்சியை மேல் கொள்ளாமல் இன்னும் இன்னும் ஒடுக்கத்தை ஏற்படுத்தி இன்னும் இறுக்கத்தை அதிகப் படுத்தவே பார்கின்றது.. மனம் என்பது குண்டலினி சக்தியின் இறுக்கத்தால் அழுத்ததால் வெளியேற துடிக்கும் ஒரு பகுதி ஆற்றல் என்பதை மறந்து விடக்கூடாது.. இந்த குண்டலினி சக்தியை முறைபடுத்தக் கூடிய ஒரு நிர்வாக சக்தி அதாவது ஆளுமை சக்தி, குழந்தை பருவத்திலேயே கிடைக்கப் பெற்றாலும், உலகியல் சார்புகளின் குறுக்கீடுகளால், குண்டலினி சக்தியின் அழுத்தம் சிறுக சிறுக, பெருக தொடங்கி அந்த நிர்வாக சக்தி பலம் இழந்து விடுகிறது... அந்த நிர்வாக சக்திதான் புத்தி என்ற காற்று பூதம்... புத்தி பலவீனமடைவதை அனுபவப் பட ஒரு அறிவு தேவைப் படுகிறது.. அந்த அறிவு தான் ஆகாயம் என்ற பூதம்.. இந்த அனுபவ அறிவே எல்லாம் உணர தொடங்கி ஏற்ற தாழ்வுகளை சரிபார்த்து புத்தியை அப்போதைக்கு அப்போது சரி செய்ய தொடங்குகிறது.. இந்த அனுபவ அறிவும் குறைவாக உள்ள பட்சத்தில், புத்தி தன் வலு இழந்து இருக்கும் நிலையில் மனம் தன் செயல் பாட்டில் தன்னிச்சையாக இருக்கும்...
மனம் குண்டலினி சக்தியின் இறுக்கத்தை தளர்த்த தேட வேண்டியதை தேடாமல், தேடக்கூடாத இடத்தை தேடி மேலும் மேலும் இறுக்கத்தை பலப் படுத்தி ஒடுங்கி ஒடுங்கி ஒரு பெரிய அழுத்ததை தேகத்தில் ஏற்படுத்துவதால் தேக செல்கள் வலு இழந்து சோர்ந்து போவதால் உறக்கம் வருகின்றது.. அந்த உறக்கத்தில் மனமும் செயல் இழந்து போவதால் இறுக்கம் சிறுக சிறுக தளர்ந்து தேக செல்களுக்கு உகந்த ஒரு இறுக்கம் தளர்ந்த சூழ் நிலை ஏற்படும் பொழுது செல்கள் பழைய நிலைக்கு திரும்பி செயல் படக்கூடிய அளவிற்கு பலம் அடைகின்ற போது, உறக்கம் நீங்குகிறது... செல்கள் பழைய நிலைக்கு திரும்பாமலே இருக்கின்ற சூழ்நிலையில், தேகத்திற்கு மரணம் வருகின்றது.. இந்த இறுக்கம் மேலும் மேலும் அதிகமாகாமல் செய்வது முதல் படி.. இறுக்கத்தை தளர்த்துவது இரண்டாம் படி,.. இறுக்கம் முழுமையாக தளர்த்தி ஆதி சக்தியான அண்ட சக்திக்கு இணையான ஒரு நிலையை குண்டலினி சக்தி பெற்று தேகம் சோர்வு அடையா நிலையான சம ஆதி நிலை அடைவது மூன்றாம் படி.. அனுபவநிலையான ஆகாய அறிவு குறையாமல், புத்தியின் மூலம் மனதை கட்டுபாட்டில் வைத்து தேகம் கெடாமல் பஞ்ச பூத சமசீர் கூட்டு ஆதிக்கம் பெறுவது முடிவான நான்காம் படி ஆகும்.. இன்றைய பல யோகப் பயிற்சிகளில் குண்டலினி சக்தியின் மேல் மனதை ஒருமுகப் படுத்தி மேலும் மேலும் அதில் இறுக்கத்தை அதிகப் படுத்துகின்றார்களே தவிர குண்டலினி சக்தியை தளர்த்தும் முறையை யாரும் பின் பற்றுவதில்லை.. தேகமே, எங்கேயோ தேள் கடித்தால் எங்கேயோ நெரி கட்டும் அமைப்பில் உள்ளதால், முறையற்ற குண்டலினி பயிற்சியால்,கெட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன...
குண்டலினி சக்தி பயணத்தில் சுவாச ஒழுங்கில் சூரிய கலையில், தோன்றாநிலையாக மனம் அற்ற நிலையாக, குண்டலினி சக்தியை அடைகிறது.. அதனால் குண்டலினி எந்த பாதிப்பும் அடைவதில்லை.. சந்திர கலையில் குண்டலினி சக்தி எழும்பி வருவதால், குண்டலினி சக்தி தளர்வடையுமே தவிர, சந்திர கலையில் உள்ள மனதால் துளி அளவும் குண்டலினிக்கு பாதிப்பு இல்லை.. குண்டலினியை விட்டு மனம் மேலே ஏறும் மார்க்கத்தில் வெளியேறி செல்ல முயற்சிப்பதால், குண்டலினி சக்தி தளந்த நிலைக்கு சுலபமாக வருகின்றது....
நித்திய நிலையான பேரண்ட ஆற்றலால் உருவாக்கப் பட்ட தேகம், அந்த நித்திய நிலைக்கு சொந்தமானது.. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொன்னார்கள்.. ஆனால் சிறுக சிறுக அநித்திய நிலை நோக்கி நகர்ந்து முடிவில் மரணம் அடைகிறது.. அதற்கு கவர்ச்சியே காரணம்.. கவர்ச்சியில் ஈடு படும் மனம்,சுவாச முரண்பாடு அடைந்து, சந்திர கலை மூலமாக சூரிய கலையிலும், பாய்ந்து, குண்டலினி சக்திக்கு இறுக்கம் மேல் இறுக்கம் சேர்த்து, நிலைமையை மோசம் ஆக்குகிறது.. இதைதான் சித்தர்கள் புலியை மேவிய மான் என்று பரி பாஷையில் சொன்னார்கள்.. கவர்ச்சி இல்லாத இந்த இயல் நிலைக்கு அதாவது பேரண்ட ஆற்றலுக்கு அழைத்துச் செல்லும் சுவாச ஒழுங்கு முற்றிலும் ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சி அற்ற நிலையில் இருந்தாலும் பயிற்சிக்கு பின் அது தரும் அற்புதங்களை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.. நுழைவதும் பயிலுவதும் கவர்ச்சியை நாடும் மனம் முதலில் இடம் கொடுக்கா விட்டாலும், பின்னால் ஏற்படுகின்ற பயன்களிலே மனம் சமாதானமாகி, இலயமாகி, பின் அடங்கி நடக்கத் தொடங்கும்..
சித்தர் நிலையிலே பிண்டத்திலிருந்து புறப்படும் குண்டலினி சக்தி அண்டம் கடந்தாலும், ஆதார நிலையான அந்த ஜீவ ஊற்று, அடைக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. அடைப்பட்டால் ஜீவ ஆற்றல் துண்டிக்கப் பட்டு, தேங்கிய சக்தியாய் அல்லது தேடும் சக்தியாய் அகண்ட காரத்தில் உலவி கொண்டு இருக்க வேண்டியது தான்.. இதை தான் ஆவிகள் என்று சொன்னார்கள் போலும்.. அந்த ஆற்றல்கள் எல்லாம் அண்டத்தில் கரைந்த பிற்பாடுதான் மீண்டும் பிறவி எடுக்க முடியும்.. அப்படி பட்ட வலுவான ஆற்றல்களுக்கு மூலாதார தொடர்பு கொடுப்பதின் மூலம்,வசியப்படுத்தி மாந்திரவாதிகள் சில அற்புத சித்துகளை செய்கின்றனர்.. அப்படி செய்கின்ற போது தன் மூலாதார குண்டலினி சக்திக்கு அதிக அழுத்தம் கொடுத்து விரைவில் மரணமும் அடைகின்றனர்.. மாந்திரீகம் அந்த அழுத்தம் கொடுக்காமல் செய்யமுடியாது.. தனக்குள்ளே இருக்கின்ற பேராற்றலை முறையாகப் பயன்படுத்தி, பெரும் அற்புதங்களை செய்வது சித்தர் மார்க்கம்.. வெளி ஆற்றலை பயன் படுத்தி அற்ப விசித்திரங்களை செய்வது மாந்திரீகம்.. மேல் சொன்னவைகள் சுவாச ஒழுங்கின் அவசியத்தையும் குண்டலினி பற்றிய சில குறிப்புகளையும் விளங்க வைக்கும் என நம்புகிறேன்.. ஐயம் இருப்பின் வினா எழுப்புக..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment