Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி இருபத்தி ஒன்பது ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி இருபத்தி ஒன்பது:--- 
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் மூன்று
இது வரை விதிக்கப் பட்ட ஆற்றலை பெற்று மேற்பரப்பான விசயங்களிலே உழன்று உழன்று ஆழமான விசயங்களிலே தோற்று தோற்று வந்த நாம் நம் அக குருவின் துணையால் சேரும் இடம் அறிந்து சேர்ந்து,எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ அதை அறிந்து, எதை பெற்றால் எல்லாம் பெற முடியுமோ அதை பெற்று நிறை நிலை மனிதாய் ஒரு பூரண சித்தராய் உருவாக ஒவ்வொரு படியாக மேலே மேலே நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.. பழைய முறைகளில் உள்ள குறைபாடுகளை கலைந்து நேர் வழி பாதைகளை அக குருவின் அருளால் தேர்ந்து எடுத்து பெருத்த ஆன்ம இலாபம் பெறுகின்ற வகையில் பயணப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.. அறியாமை என்ற பெரும் நோயினால் பாதிக்கப் பட்ட நாம் இருள் நீங்கி தெளிவு என்ற ஆரோக்கியம், ஒளியை நோக்கி, பயணப் பட நம் அக குருவின் துணை நமக்கு முதலில் தேவை படுவதால் அதனை எப்பொழுதும் பெற்றுக் கொண்டே இருக்க, சுவாச ஒழுங்கு ஒன்றே உகந்த நிலை என முதலில் அறிந்து கொள்கிறோம்.. அந்த அக குருவின் துணையால் மட்டுமே நாம் எங்கும் சிக்கி கொள்ளாது,நமது பயணம் விரைவு பட உதவும் என்பதை அறிந்து சுவாச ஒழுங்கின் துணையோடு அக குருவின் துணையை எப்பொழுதும் பெற்று கொண்டே தெளிவு பட பயணிக்கிறோம்...
நேர் முக பலன்களையே எதிர் பார்த்து பார்த்து மறைமுக பலன்களை முற்றிலும் தவற விட்டு விட்டு வாழ் நாள் முழுமைக்கும் அல்லல் அடைகின்றோம்.. நம் முயற்சிகளுக்கு மறைமுக பலன்களே மிக அதிகமாக கிடைக்கும் என்ற மிக எதார்த்தமான உண்மை புரியாததால், நேர் முக பலன்களுக்கு நம் வாழ் நாள் முழுவதும் விரையம் ஆக்கி கொண்டு இருக்கிறோம்... நம் மறைமுக பலன்களை உணர்த்தி அதற்கான வழியை ஏற்படுத்தி தருபவர்தான் நம் அக குரு.. நம் மறை முக பலன்கள் மட்டுமே சத்தியமாக பயன் படும்.. ஆனால் மனம் அதை நம்புவதில்லை.. அதே போல்தான் வாசி யோக பயிற்சியும்.. இந்த சுவாசத்திற்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தான் பல பேரிடம் எழும்.. ஆனால் மறைமுகப் பலன்கள் மிக மிக அதிகமாக கிடைக்கும் என்பதை அறியமாட்டார்கள்.. அதனால் தான் நேர்முக பலன்களை பெற பூசைகள் யாகங்கள் வேள்விகள், பிரார்த்தனைகள் என மிக சொற்ப பலன் தரும் வழிகளிலே அதிக நாட்டம் கொள்கின்றனர்..
அன்பே சிவம் என்ற சொல்லில் அன்பின் மூலமாக அளவற்ற இறை ஆற்றலை பெறலாம் என்பது மறைமுக பலன் ஆகும்.. ஆனால் சிவத்தை மட்டும் தொழுது நிற்பது நேர் முக பலனை எதிர்பார்ப்பதாகும்.. பின்னதில் மிக சொற்ப இலாபமே கிடைக்கப் பெற்று வாழ் நாள் தான் விரையமாகும்.. இந்த மறை முக பலனை மனம் அறிய வாய்ப்பு இல்லை.. அக குருவாகிய புத்தி ஒன்றே அந்த இரகசியத்தை அறிய முடியும்.. அதனால் தான் அக குருவின் துணையை நாடி, அளவற்ற ஆன்மா இலாபம் தேட வேண்டிய அவசியம் ஆகிறது.. தன்னுள் இருக்கும் இன்னும் பலப்படாத அககுருவின் துணையால் மட்டுமே இந்த வாசியோக பயிற்சியை நாடி பயின்று பின் அக குருவின் பலத்தால் படிப்படியாக மேலே ஏறுபவர்கள் ஒரு சிலரே...
சுவாச ஒழுங்கின் மூலம் பெறப்படும் அதிக பேராற்றலால் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கிய பயணத்தில் பிடரியாகிய நினைவகம் பலம் அடைகின்ற போது, அது பல ஜென்மங்களின் நினைவுகளை முன் வைக்கும்.. அப்போது அந்த பிறவிகளில் அடைந்த மேன்மை, நினைவுக்கு வரும் போது விட்டு போன குறையை நிவர்த்தி பண்ண ஒரு புத்துணர்ச்சி வரும்.. அப்பிறவிகளில் அடைந்த தோல்விகள் ஒரு பாடமாக இந்த பிறவியில் தோன்றி மீண்டும் அதை தொடராத வல்லமை கிடைக்கும்.. இதன் மூலம் முன் பிறவிகளின் அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் போது அது நிகரானது எதுவும் இல்லை என தோன்றும்.. புத்தருக்கும் பட்டினத்தாருக்கும் இப்படிதான் பிடரி என்ற நினைவகத்தில் முன் பிறவி மேன்மைகள் தோன்ற அதற்காக, அதற்கான ஆன்மீக பயணத்தை விரைவு படுத்த அவர்கள் தோன்றிய பிறவியில் முனைந்தார்கள்.. பெருத்த இலாபமாக மறைமுக பலன் தரும் பயிற்சியில் நம் அககுருவின் துணையால் உணர்ந்து முன்னேறுவோமாக.. அடுத்த பகுதியில் சுழிமுனை ஆதாரத்தை நோக்கிய பயணத்தை நிச்சயம் பார்க்கலாம்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment