Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ? பகுதி முப்பத்தி ஏழு ;;;மர்ம யோகி

சித்தராவது எப்படிபகுதி முப்பத்தி ஏழு :---
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் பதினொன்று
குண்டலினி சக்தி என்ன செய்கிறது ?
மூலதாரத்தில் ஒடுங்கி சுருண்டு கிடக்கின்ற அந்த சக்திதான், குண்டலினி சக்தி என ஏற்கனவே பார்த்தோம்.. அந்த குண்டலினி சக்தி விழித்து எழவும், ஓங்கி எழவும், செய்ய என்ன சூழ்நிலை இருந்தால் நடக்கும் என்பதை பல யோக ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாமையால் அந்த குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப, படாத பாடு பட்டு இருக்கின்ற தேக சக்தியையும் விரையம் ஆகி, முடிவில் சோர்வும் தளர்வும் அடைகிறார்கள்.. ஏதோ மன கற்பனையில் சில நிழல் அனுபவங்களை பெற்று அற்ப சந்தோசம் அடைகிறார்கள்.. அந்த அனுபவங்கள் இம்மி அளவும் பயன் படவில்லை என்பது மிகுந்த காலம் கடந்தே உணர வேண்டி இருக்கிறது.. அதற்குள் தேகம் தளர்ந்து சீர் குழைந்து விடுகிறது..
குண்டலினி சக்தி எழுவதற்கும் ஓங்குவதற்கும் தடையாய் இருப்பது ஆதிக்க எண்ணங்களின் அழுத்தமே.. அந்த அழுத்தத்தில் குண்டலினி சக்தி ஒடுக்கத்திற்கே போகிறது.. சற்று விழிப்பு நிலையில் கோபம் பேராசை போன்ற எண்ண ஆதிக்கங்கள் தலை தூக்கும் போது சுவாசத்தின் மூச்சின் அழுத்தத்தை அடி வயிற்றில் உணரலாம்.. பொதுவாக பெரும் பான்மை நேரங்களில் நாம் அப்படியான அழுத்தத்தில் சதா காலமும் இருப்பதால் நாம் அடையாளம் தெரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும்.. சுவாச ஒழுங்கின் சமயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறும் போது, பழைய அனுபவத்திலேயே இருந்த மனம் அந்த வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.. அதனால் சுவாச ஒழுங்கிலே கிடைக்கின்ற ஒரு இலகு தன்மையை கலைக்க மனம் சதா காலமும் விரும்புகிறது.. மனதை அடக்கிய விழிப்பு நிலையால் மேலும் மேலும் சுவாச ஒழுங்கு செய்யும் போது குண்டலினி சக்தி எழ தொடங்கி பிரபஞ்ச சக்தியை பெற தொடங்குகிறது.. இப்படி பெறப் படும் சக்திதான் அன்பு என அழைக்கப் படுகிறது.. இதில் என்பது அண்ட சக்தி என்றும், பு என்பது புடம் வைக்கப் பட்ட அதாவது பக்குவமாய் பதுங்கிய, புவி சக்தி என்றும், 'ன்' என்பது முடிவான இணைப்பு என்றும் குறிக்கும்...
அன்பு கொள் என தத்துவம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை.. அன்பு என்ற சக்தி இல்லாமல் அன்பு கொள்ள முடியாது.. எத்தனை சாஸ்திரங்களும் போதனைகளும் நெறிகளும் போதித்தாலும் அதனை செயல் படுத்த குண்டலினி எழுச்சியும், அந்த எழுச்சியால் கிரகிக்கப் படும் பிரபஞ்ச ஆற்றலும் சேர்ந்த அன்பு என்ற அற்புத சக்தி இல்லையேல் ஒன்றும் பயன் பெறாது...
சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் மனமற்ற நிலையான தோன்றா நிலையில் எண்ண ஆதிக்கங்களால் ஏற்படும் அழுத்தம் அகற்றப் படும் போது, குண்டலினி எழதொடங்குகிறது.. எழுந்த குண்டலினி ஒன்றே பிரபஞ்ச சக்தியை வாங்க தகுதி உடையது.. அண்ட சக்தியும் குண்டலினி சக்தியும் ஆண் சக்தி பெண் சக்தி போலவும், positive negative energy போலவும் செயல் படுகின்றன.. இதனால் அன்பு என்ற செயல் பாடு உருவாகிறது.. சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் வினாடிக்கு வினாடி உருவாகும் தோன்றா நிலையின் காரணமாக, குண்டலினி சக்தியின் எழுச்சியால்,பெறப்படும் அண்ட ஆற்றலே நிகழ் நிலை சக்தி எனப்படுகிறது.. இந்த நிகழ்நிலை சக்திதான் சிவநிலை சக்தி எனப் படும்.. அதில் மட்டுமே அன்பு என்ற செயல் பாட்டிற்கான ஆற்றல் தோன்றும்..
அதனால் அன்பே சிவம் என்ற மிக பெரிய உன்னத பிரம்ம இரகசியம் தோன்றியது.. பிரம்மம் என்றால் படைத்தல்.. படைக்கப் பட்ட அனைத்தும், அதன் செயல்பாடுகளும் அன்பால் விளைவதும் நடை பெறுவதுமாகும்..
இப்படி குண்டலினி மேல் எண்ண ஆதிக்கத்தால் ஏற்படும் அழுத்தத்தை நீக்க கூடிய தோன்றா நிலையை தராத எந்த சுவாச பயிற்சியும் வீணே... ஆனால் தோன்ற நிலையை பற்றி பேசும் யோகிகளே இல்லை போல் தெரிகிறது.. அதனால் தான் குண்டலினி மேல் அழுத்தம் நீங்காத பயிற்சியை செய்து பலன் இல்லாமல் போய் விடுகிறார்கள்... இந்த சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் முற்றிலும் தோன்ற நிலை உருவாகும் பயிற்சியை நாம் நேரடி பயிற்சியில் கண்டோம்.. அதில் அளவற்ற பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கப் பெற்ற நிலையில் நாம் சந்திர கலையை இழக்காமல் மதி நிலையிலே நின்றால் மட்டுமே பெற்ற ஆற்றலை பயன் படுத்த முடியும்.. ஆகவே தான் சூரிய கலை எப்படி முக்கியமோ, அவ்வாறே அதனை பயன் படுத்தும் சந்திர கலையும் மிக மிக முக்கியம்.. தன்னை இழந்த மோன நிலையில் சந்திரகலை காணாமல் போய்விட்டால் தோன்றா நிலையில் பெற்ற ஆற்றலால் ஒரு பயனும் இல்லை.. சந்திர கலையும் சூரிய கலையும் இணைந்து செயல் பட்டு இருந்தால் மட்டுமே அன்பு என்ற மகா சக்தி உருவாகும் என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது...
மத வெறித்தனமும், மதத்தில் மிக இறுக்கமான பிடிப்பும், குண்டலினி சக்தியை எழ விடாமல் பண்ணுவதால், அன்பு குறைந்து படைப்பும் குறைந்து அழிவுக்கும், அராஜகத்திற்கும் வழி வகுக்கிறது.. அப்படி பட்டவர்கள் அன்பு செலுத்துவது போல் இருப்பது, நடிப்பின் நிமித்தமாக இருக்கலாம் அல்லது ஒரு காரியத்தை நிறைவேற்ற வியாபார நோக்கத்தோடு இருக்கலாம்.. உள் அன்போடு நிச்சயமாக இருக்காது.. தோன்றா நிலையில் உருவாகும் குண்டலினி எழுச்சியின் விளைவாய் உண்டான அன்பே உலகில் அமைதியை உருவாக்கும்.. அப்படியான மத அமைப்பே நமக்கு தேவை... இதன் மூலம் கவர்ச்சியற்ற சுவாச ஒழுங்கின் மேன்மை நமக்கு புரியும் என நம்புகிறேன்...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment